ஆதவா
13-02-2009, 04:34 AM
பாரதி அண்ணாவின் 'சிவனுக்கு எத்தனைக் கண்கள்' (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19353) என்ற பதிவில் என் பின்னூட்டத்தில், கடவுளின் நித்திரை குறித்து எழுதியிருந்தேன். அப்பொழுதே இக்கவிதைக்கான கரு உதித்துவிட்டது.. என்னை ஒரு பேயாக உருவகித்துக் கொண்டு கடவுளைக் கொல்லப் புறப்பட்டேன்.//////
கடவுளைக் கொல்லுதல் எனும் தலைப்பில் இருதினங்களுக்கு முன்பு ஒரு வலைப்பூவில் கவிதை படித்திருந்தேன்.... நல்லவேளையாக அது வேறு பாதையிலிருந்தது...
உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்
ஒரு பூனையின் சாதுர்யமாக
கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து
அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்
அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
வெகு சிலர் எனது இருப்பை
கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்
என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன
கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்
கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக
கடவுளைக் கொல்லுதல் எனும் தலைப்பில் இருதினங்களுக்கு முன்பு ஒரு வலைப்பூவில் கவிதை படித்திருந்தேன்.... நல்லவேளையாக அது வேறு பாதையிலிருந்தது...
உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்
ஒரு பூனையின் சாதுர்யமாக
கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து
அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்
அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
வெகு சிலர் எனது இருப்பை
கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்
என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன
கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்
கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக