ரங்கராஜன்
09-02-2009, 04:19 PM
போன வாரம் ரொம்ப நாள் கழித்து என்னுடைய நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன், போகும் பொழுது வேறும் கையொடு போககூடாது என்று ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று அல்வாவும் மிச்சரும் வாங்கிக் கொண்டு நண்பர் வீட்டை அடைந்தேன். வழக்கம் போல நண்பன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருக்க, அவங்க அம்மாவும் அப்பாவும் வாய் நிறைய மனம் நிறைய வரவேற் உபசரித்தார்கள். நண்பன் காலை உணவே அப்பொழுது தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான் மணி 11.00, என்னையும் அவங்க அம்மா சாப்பிட சொன்னார்கள்,
“டேய் சப்பாத்தி போட்டு தரேன் சாப்பிடுறீயா”
“வேண்டாம் மா, காலையில் தோசை சாப்பிட்டு வந்தேன்”
“உனக்கு என்ன சப்பாத்தி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும்”
“அம்மா உண்மையை சொன்ன நான் சப்பாத்தி சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிறது, எப்பவும் இட்லி, தோசை, உப்புமா அந்த மாதிரி தான், அப்புறம் சாதம்”
“அப்ப சாப்பிடேன் டா”
“அய்யோ எனக்கு சப்பாத்தி பு(பி)டிக்காது மா”
“சரி அப்ப இந்தா நீ வாங்கி வந்த அல்வாவை சாப்பிடு” என்றாள் அம்மா பாசமாக, நான் வீட்டுக்கு சென்றால் எனக்கு எதாவது சாப்பிட கொடுத்து விடவேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு மனம் நிறையும். எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நான் சாப்பிட்டு விட்டு உக்கார்ந்து இருந்தேன். நண்பனின் அப்பா வந்தார்
”அப்பா நீங்க கொஞ்சம் அல்வா சாப்பிடுங்களே”
“ஏண்டா சொத்து மீது உனக்கு ரொம்ப நாளா கண்ணா”
”புரியவில்லையே”
“எனக்கு சக்கரை வியாதிடா, சோலியை முடிக்க பாக்கிறீயா”
“ஐயோ சாரிப்பா மறந்துட்டேன்”
“பரவாயில்லை கொஞ்சம் கோடு”
அம்மா உள்ளே இருந்து “நல்லா இருக்கே கதை, டேய் தஸ்னா எழுந்து வாடா இந்த பக்கம், அந்த மனுஷன் வாயில் இருந்து கூட புடுங்கி திண்ணுடுவாரு”
”அடிப்பாவி ஒரு துண்டு அல்வாவுக்கா இப்படி ஊர கூப்பிடுற”
“ஆ துண்னுபுட்டு தூக்கம் வரல, உடம்பு அரிக்குதுனு சொல்லுவதற்கா?, அவருக்கு சுகரு 250 இருக்குடா தஸ்னா?”
எனக்கு சுகர் பற்றி எதுவும் தெரியாது, இருந்தாலும் அவர்கள் சண்டைப் போடுவதை தலை ஆட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். என் நண்பன் கொலையே விழுந்தாலும் திரும்ப மாட்டான், கிரிக்கெடில் அப்படி அவன் பைத்தியம்.
“ஏய் ஏய் பொய் சொல்லாத நான் இப்போ 200 க்கு குறைச்சிட்டேன்”
“கிழிச்சிங்க”
இரு இப்பவே காட்றேன் என்று auqacheck (சக்கரை அளவை கண்டுபிடிக்கும் மீட்டரை) எடுத்து தன்னுடைய விரலில் ரத்ததை எடுத்து செக் செய்தார். 230 காட்டியது.
“பார்த்தீயாடா தஸ்னா இவரு இப்படி தான் டா சரியான ஆளு, இப்படி வச்சுனு பொய் சொல்றார் பாரு”
நான் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினேன், ஆனால் என்னுடைய ஆர்வம் பூரா அந்த மீட்டர் மேலே தான் இருந்தது, இதை இதற்கு முன் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியாது என்று அதை வாங்கி பார்த்தேன்.
“என்னடா நீயும் சுகர் சேக் பண்றீயா”
“ம்ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டினேன்.
என்னுடைய விரலில் நுனியில் ரத்தத்தை எடுத்து மீட்டரில் வைத்தேன். அது ரீடிங் காட்டியது, அப்பாவின் முகம் மாறியது, எனக்கு தூக்கி வாரி போட்டது.
”என்னப்பா எவ்வளவு”
“.........”
மீட்டரை வாங்கிப் பார்த்தேன். 240 காட்டியது, எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
“அப்பா என்னப்பா இது”
“........”
”எவ்வளவு ப்பா நார்மல்”
“120...130...”
கனத்த மெளனம் நிலவியது, இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த அம்மா
“எங்க புள்ள இப்ப தானே அல்வா சாப்பிட்டான், அதனால அதிகமா காட்டி இருக்கும்”
“சாப்பிட்டு இரண்டு நிமிஷம் கூட ஆவல, எப்படி ரத்தத்தில் அது கலந்து இருக்கும்”
அம்மா “..........”
“அவனுக்கு ஏற்கனவே சுகர் இருந்து இருக்கு, டேய் எப்ப பார்த்தாலும் சாதம் தான் சாப்பிடுவியா”
“இல்.....இல்ல.....ப்பா தோசை இட்லி கூட சாப்பிடுவேன்”
“அது மட்டும் என்ன அரசியில் இருந்து தானே வருது, எல்லாம் கார்போ-ஹய்ட்ரேட் தான்”
“.......”
“சரி பரவாயில்லை கவலைப்படாதே, கண்ரோல் பண்ணிவிடலாம், காலையில் எழுந்து வாக்கிங் போ, ராத்திரி சப்பாத்தி மட்டும் சாப்பிடு, மதியம் சாதம் கொஞ்சமா சாப்பிடு. அதுக்கு தான் சொல்லுவாங்க
Breakfast like a king
lunch like a ordinary man
dinner like a begger ன்னு
சொல்லுவாங்க என்றார்.
”என்னப்பா Grammer தப்பு என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை, என்னுடைய சுகர் என்னை கொன்றது”
திடீர்னு எழுந்து என்னுடைய பிரண்டு என்னிடம் வந்து கையை கொடுத்து
”எப்படா ரீட்டு” என்றான்.
அம்மா அப்பா இருந்ததால் என்னால் அவனை திட்ட முடியவில்லை, மனதிற்குள் சென்னை பாஷையில் திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டேன்.
மூவரும் வீட்டு வாசலுக்கு வந்து என்னை வழி அனுப்பினார்கள். எனக்கு என்னவோ போல இருந்தது, எங்கோ வழி அனுப்புவது போல இருந்தது. மனம் தளர்ந்தது, வீட்டுக்கு சென்று படுத்து விட்டேன், யாரிடமும் பேசவில்லை. அடுத்த நாள் மூன்று வேலை சப்பாத்தி சாப்பிட்டேன், வாந்தி வருவது போல ஆகிவிட்டது, அடுத்த நாள் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டேன் வாந்தியே வந்துவிட்டது. காலையில் எழுந்து ஜாகிங் போனேன், அங்கு பார்த்தால் பல மாமி, மாமாக்கள் தெருவையே குலுக்கிக் கொண்டு ஓடினார்கள். ரொம்ப நாள் கழித்து ஓடியதால் கை கால்கள் எல்லாம் எனக்கு பிடித்துக் கொண்டது. அப்படியே நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன். என் மேல் அப்படியே சக்கரை ஒட்டிக் கொண்டு இருப்பது போல ஒரு பிரமை என்னை அறியாமல் என்னுடைய கைகளால் தட்டிவிட்டேன். நண்பர்களிடம் வேறு அந்த நண்பன் சக்கரை விஷயத்தை சொல்லிவிட்டான். என்னிடம் வந்து
“மச்சான் படத்துக்கு போலாமா டா?”
“என்ன படம் டா”
“சக்கரைக்கட்டி”
அவனை கொடூரமாக நான் பார்க்க, அவன் எந்த சலனமும் இல்லாமல்
”எஹே ஹா ஹாஹே” என்று ராகமாக சிரித்தான். இன்னொருவன் வந்து என்னுடைய தோள் மீது கையை போட்டு
“விடுறா மச்சான், 40 வயசு ஆனால் இதெல்லாம் சகஜம் டா”
சென்னை தமிழில் அவனை திட்டிவிட்டு. இன்னொருவன்
”டேய் டேய் அவனை தொடாதீங்க டா, சக்கரை வியாதி ஒட்டிக்கும்”
நான் “அது ஒண்ணு பரவர வியாதி இல்ல”
“இருந்தாலும் ஜாக்கிரதையா இருப்பது நல்லது தானே” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான்.
இன்னொருவன் கோபமாக எங்களிடம் வந்து அவர்களை நோக்கி
“ஏண்டா உங்களுக்கு அறிவு கிடையாது, அவனை போய் இப்படி கிண்டல் பண்றீங்களே மனசாட்சியில்லாமல்......... அவன் இருக்கப்போறதே கொஞ்ச காலம் தான்........”
நான் “அடி செருப்பால நாயிங்களா.............................(சென்சார் கட்)”
அன்று மாலை டாக்டரிடம் போய் மறுபடியும் செக் செய்தேன், 130 இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம்
“டாக்டர் இரண்டு நாளைக்கு முன் 240 இருந்தது டாக்டர்”
“வெரி குட், நல்ல டயட்டுல இருக்கீங்க போல ஆனால் இரண்டு நாள்ல இவ்வளவு குறைய சான்ஸ் இல்லையே”
”..................”
“டெஸ்டு எடுக்கும் பொழுது ஸ்வீட் எதாவது சாப்டீங்களா”
“ஆமா டாக்டர் அல்வா சாப்பிட்டேன், ஆனா அது ரத்ததில் கலக்க லேட் ஆகுமே டாக்டர்”
“எந்த விரலில் ரத்தம் எடுத்தீங்க”
என்னுடைய வலது கையின் ஆள்காட்டி விரலை காண்பித்தேன்.
”குட் அல்வா சாப்பிட்டு கையை கழுவினீங்களா”
“இ...............இல்.......இல்ல டாக்டர்”
”அதனால தான் குழப்பமே, ரத்தம் வெளியே வரும் பொழுது விரல் மேல் பரப்பில் உள்ள சக்கரையுடன் கலந்து இருக்கு, அவ்வளவு தான். யூ ஆர் ஆல்ரேட்”
அப்படியே அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது, ஆண் டாக்டர் என்பதால் விட்டு விட்டேன். என்ன இருந்தாலும் அவர் தான் என்னுடைய சக்கரைகட்டி.
“டேய் சப்பாத்தி போட்டு தரேன் சாப்பிடுறீயா”
“வேண்டாம் மா, காலையில் தோசை சாப்பிட்டு வந்தேன்”
“உனக்கு என்ன சப்பாத்தி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும்”
“அம்மா உண்மையை சொன்ன நான் சப்பாத்தி சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிறது, எப்பவும் இட்லி, தோசை, உப்புமா அந்த மாதிரி தான், அப்புறம் சாதம்”
“அப்ப சாப்பிடேன் டா”
“அய்யோ எனக்கு சப்பாத்தி பு(பி)டிக்காது மா”
“சரி அப்ப இந்தா நீ வாங்கி வந்த அல்வாவை சாப்பிடு” என்றாள் அம்மா பாசமாக, நான் வீட்டுக்கு சென்றால் எனக்கு எதாவது சாப்பிட கொடுத்து விடவேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு மனம் நிறையும். எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நான் சாப்பிட்டு விட்டு உக்கார்ந்து இருந்தேன். நண்பனின் அப்பா வந்தார்
”அப்பா நீங்க கொஞ்சம் அல்வா சாப்பிடுங்களே”
“ஏண்டா சொத்து மீது உனக்கு ரொம்ப நாளா கண்ணா”
”புரியவில்லையே”
“எனக்கு சக்கரை வியாதிடா, சோலியை முடிக்க பாக்கிறீயா”
“ஐயோ சாரிப்பா மறந்துட்டேன்”
“பரவாயில்லை கொஞ்சம் கோடு”
அம்மா உள்ளே இருந்து “நல்லா இருக்கே கதை, டேய் தஸ்னா எழுந்து வாடா இந்த பக்கம், அந்த மனுஷன் வாயில் இருந்து கூட புடுங்கி திண்ணுடுவாரு”
”அடிப்பாவி ஒரு துண்டு அல்வாவுக்கா இப்படி ஊர கூப்பிடுற”
“ஆ துண்னுபுட்டு தூக்கம் வரல, உடம்பு அரிக்குதுனு சொல்லுவதற்கா?, அவருக்கு சுகரு 250 இருக்குடா தஸ்னா?”
எனக்கு சுகர் பற்றி எதுவும் தெரியாது, இருந்தாலும் அவர்கள் சண்டைப் போடுவதை தலை ஆட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். என் நண்பன் கொலையே விழுந்தாலும் திரும்ப மாட்டான், கிரிக்கெடில் அப்படி அவன் பைத்தியம்.
“ஏய் ஏய் பொய் சொல்லாத நான் இப்போ 200 க்கு குறைச்சிட்டேன்”
“கிழிச்சிங்க”
இரு இப்பவே காட்றேன் என்று auqacheck (சக்கரை அளவை கண்டுபிடிக்கும் மீட்டரை) எடுத்து தன்னுடைய விரலில் ரத்ததை எடுத்து செக் செய்தார். 230 காட்டியது.
“பார்த்தீயாடா தஸ்னா இவரு இப்படி தான் டா சரியான ஆளு, இப்படி வச்சுனு பொய் சொல்றார் பாரு”
நான் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினேன், ஆனால் என்னுடைய ஆர்வம் பூரா அந்த மீட்டர் மேலே தான் இருந்தது, இதை இதற்கு முன் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியாது என்று அதை வாங்கி பார்த்தேன்.
“என்னடா நீயும் சுகர் சேக் பண்றீயா”
“ம்ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டினேன்.
என்னுடைய விரலில் நுனியில் ரத்தத்தை எடுத்து மீட்டரில் வைத்தேன். அது ரீடிங் காட்டியது, அப்பாவின் முகம் மாறியது, எனக்கு தூக்கி வாரி போட்டது.
”என்னப்பா எவ்வளவு”
“.........”
மீட்டரை வாங்கிப் பார்த்தேன். 240 காட்டியது, எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
“அப்பா என்னப்பா இது”
“........”
”எவ்வளவு ப்பா நார்மல்”
“120...130...”
கனத்த மெளனம் நிலவியது, இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த அம்மா
“எங்க புள்ள இப்ப தானே அல்வா சாப்பிட்டான், அதனால அதிகமா காட்டி இருக்கும்”
“சாப்பிட்டு இரண்டு நிமிஷம் கூட ஆவல, எப்படி ரத்தத்தில் அது கலந்து இருக்கும்”
அம்மா “..........”
“அவனுக்கு ஏற்கனவே சுகர் இருந்து இருக்கு, டேய் எப்ப பார்த்தாலும் சாதம் தான் சாப்பிடுவியா”
“இல்.....இல்ல.....ப்பா தோசை இட்லி கூட சாப்பிடுவேன்”
“அது மட்டும் என்ன அரசியில் இருந்து தானே வருது, எல்லாம் கார்போ-ஹய்ட்ரேட் தான்”
“.......”
“சரி பரவாயில்லை கவலைப்படாதே, கண்ரோல் பண்ணிவிடலாம், காலையில் எழுந்து வாக்கிங் போ, ராத்திரி சப்பாத்தி மட்டும் சாப்பிடு, மதியம் சாதம் கொஞ்சமா சாப்பிடு. அதுக்கு தான் சொல்லுவாங்க
Breakfast like a king
lunch like a ordinary man
dinner like a begger ன்னு
சொல்லுவாங்க என்றார்.
”என்னப்பா Grammer தப்பு என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை, என்னுடைய சுகர் என்னை கொன்றது”
திடீர்னு எழுந்து என்னுடைய பிரண்டு என்னிடம் வந்து கையை கொடுத்து
”எப்படா ரீட்டு” என்றான்.
அம்மா அப்பா இருந்ததால் என்னால் அவனை திட்ட முடியவில்லை, மனதிற்குள் சென்னை பாஷையில் திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டேன்.
மூவரும் வீட்டு வாசலுக்கு வந்து என்னை வழி அனுப்பினார்கள். எனக்கு என்னவோ போல இருந்தது, எங்கோ வழி அனுப்புவது போல இருந்தது. மனம் தளர்ந்தது, வீட்டுக்கு சென்று படுத்து விட்டேன், யாரிடமும் பேசவில்லை. அடுத்த நாள் மூன்று வேலை சப்பாத்தி சாப்பிட்டேன், வாந்தி வருவது போல ஆகிவிட்டது, அடுத்த நாள் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டேன் வாந்தியே வந்துவிட்டது. காலையில் எழுந்து ஜாகிங் போனேன், அங்கு பார்த்தால் பல மாமி, மாமாக்கள் தெருவையே குலுக்கிக் கொண்டு ஓடினார்கள். ரொம்ப நாள் கழித்து ஓடியதால் கை கால்கள் எல்லாம் எனக்கு பிடித்துக் கொண்டது. அப்படியே நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன். என் மேல் அப்படியே சக்கரை ஒட்டிக் கொண்டு இருப்பது போல ஒரு பிரமை என்னை அறியாமல் என்னுடைய கைகளால் தட்டிவிட்டேன். நண்பர்களிடம் வேறு அந்த நண்பன் சக்கரை விஷயத்தை சொல்லிவிட்டான். என்னிடம் வந்து
“மச்சான் படத்துக்கு போலாமா டா?”
“என்ன படம் டா”
“சக்கரைக்கட்டி”
அவனை கொடூரமாக நான் பார்க்க, அவன் எந்த சலனமும் இல்லாமல்
”எஹே ஹா ஹாஹே” என்று ராகமாக சிரித்தான். இன்னொருவன் வந்து என்னுடைய தோள் மீது கையை போட்டு
“விடுறா மச்சான், 40 வயசு ஆனால் இதெல்லாம் சகஜம் டா”
சென்னை தமிழில் அவனை திட்டிவிட்டு. இன்னொருவன்
”டேய் டேய் அவனை தொடாதீங்க டா, சக்கரை வியாதி ஒட்டிக்கும்”
நான் “அது ஒண்ணு பரவர வியாதி இல்ல”
“இருந்தாலும் ஜாக்கிரதையா இருப்பது நல்லது தானே” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான்.
இன்னொருவன் கோபமாக எங்களிடம் வந்து அவர்களை நோக்கி
“ஏண்டா உங்களுக்கு அறிவு கிடையாது, அவனை போய் இப்படி கிண்டல் பண்றீங்களே மனசாட்சியில்லாமல்......... அவன் இருக்கப்போறதே கொஞ்ச காலம் தான்........”
நான் “அடி செருப்பால நாயிங்களா.............................(சென்சார் கட்)”
அன்று மாலை டாக்டரிடம் போய் மறுபடியும் செக் செய்தேன், 130 இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம்
“டாக்டர் இரண்டு நாளைக்கு முன் 240 இருந்தது டாக்டர்”
“வெரி குட், நல்ல டயட்டுல இருக்கீங்க போல ஆனால் இரண்டு நாள்ல இவ்வளவு குறைய சான்ஸ் இல்லையே”
”..................”
“டெஸ்டு எடுக்கும் பொழுது ஸ்வீட் எதாவது சாப்டீங்களா”
“ஆமா டாக்டர் அல்வா சாப்பிட்டேன், ஆனா அது ரத்ததில் கலக்க லேட் ஆகுமே டாக்டர்”
“எந்த விரலில் ரத்தம் எடுத்தீங்க”
என்னுடைய வலது கையின் ஆள்காட்டி விரலை காண்பித்தேன்.
”குட் அல்வா சாப்பிட்டு கையை கழுவினீங்களா”
“இ...............இல்.......இல்ல டாக்டர்”
”அதனால தான் குழப்பமே, ரத்தம் வெளியே வரும் பொழுது விரல் மேல் பரப்பில் உள்ள சக்கரையுடன் கலந்து இருக்கு, அவ்வளவு தான். யூ ஆர் ஆல்ரேட்”
அப்படியே அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது, ஆண் டாக்டர் என்பதால் விட்டு விட்டேன். என்ன இருந்தாலும் அவர் தான் என்னுடைய சக்கரைகட்டி.