ஆதவா
09-02-2009, 12:49 PM
அந்த குழந்தை
எதற்காகவோ அழுகிறது
அவள் வாயிலிருந்து
ஒழுகும் எச்சில்,
எப்பொழுதோ எதிர்பார்த்து
உமிழும் ஒற்றைச் சொல்லைப் போன்று
ஒழுகிக் கொண்டு இருக்கிறது
குழந்தையின் கண்கள் வீங்கியிருக்கின்றன
அவள் எதையோ தேடுகிறாள்
காய்ந்து போன சேற்றுப் படிமத்தில்
குத்தி முளைத்திருக்கும்
தக்காளிச் செடியினருகே
அவளின் தேடுதல் இருக்கலாம்
அவள் பக்குவப்பட்டிருக்கவில்லை
அழுகைகள் மாறி மாறி ஒலிக்கின்றன
ஒரு தக்காளி உதிரப்பார்க்கிறது
இவள் கைப்பட்டும் தாங்கி நிற்கிறது
அந்த குழந்தைக்குத் தேவையானது
தக்காளிச் செடியிடம் கிடைக்கவில்லை
அவள் சபிக்கிறாள்,
விமோசனமில்லாத சாபத்திற்கு
தக்காளி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது
குழந்தை திரும்புகிறாள்
அவளுக்கு அழுத காரணங்கள் தெரியவில்லை
ஒருவேளை, எந்த காரணமுமின்றி
சிதறிக் கிடக்கும் அம்மாவுக்காக இருக்கலாம்.
எதற்காகவோ அழுகிறது
அவள் வாயிலிருந்து
ஒழுகும் எச்சில்,
எப்பொழுதோ எதிர்பார்த்து
உமிழும் ஒற்றைச் சொல்லைப் போன்று
ஒழுகிக் கொண்டு இருக்கிறது
குழந்தையின் கண்கள் வீங்கியிருக்கின்றன
அவள் எதையோ தேடுகிறாள்
காய்ந்து போன சேற்றுப் படிமத்தில்
குத்தி முளைத்திருக்கும்
தக்காளிச் செடியினருகே
அவளின் தேடுதல் இருக்கலாம்
அவள் பக்குவப்பட்டிருக்கவில்லை
அழுகைகள் மாறி மாறி ஒலிக்கின்றன
ஒரு தக்காளி உதிரப்பார்க்கிறது
இவள் கைப்பட்டும் தாங்கி நிற்கிறது
அந்த குழந்தைக்குத் தேவையானது
தக்காளிச் செடியிடம் கிடைக்கவில்லை
அவள் சபிக்கிறாள்,
விமோசனமில்லாத சாபத்திற்கு
தக்காளி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது
குழந்தை திரும்புகிறாள்
அவளுக்கு அழுத காரணங்கள் தெரியவில்லை
ஒருவேளை, எந்த காரணமுமின்றி
சிதறிக் கிடக்கும் அம்மாவுக்காக இருக்கலாம்.