umakarthick
05-02-2009, 01:03 PM
டென்த் ஏ காயத்ரிக்கு...
நீ குடியிருந்த வீடு...
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.
நீ தட்டச்சிய பயிலகம்...
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஓடிப்போன துக்கத்தில்
asdfgfக்கு மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.
நீ தரிசனம் தந்த கோயில்...
வெளவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.
உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித் தாளில்
கன்னி கழியாமல்.
தெரியும்.
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.
சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும், சால்னாவுமாய்
தேய்ந்து, துரும்பாகி
தூர்ந்திருக்கும் உன் வாழ்வு.
பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
'காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?'
என் பதில்:
'பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல'
- நா.முத்துக் குமார்
நீ குடியிருந்த வீடு...
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.
நீ தட்டச்சிய பயிலகம்...
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஓடிப்போன துக்கத்தில்
asdfgfக்கு மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.
நீ தரிசனம் தந்த கோயில்...
வெளவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.
உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித் தாளில்
கன்னி கழியாமல்.
தெரியும்.
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.
சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும், சால்னாவுமாய்
தேய்ந்து, துரும்பாகி
தூர்ந்திருக்கும் உன் வாழ்வு.
பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
'காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?'
என் பதில்:
'பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல'
- நா.முத்துக் குமார்