PDA

View Full Version : வெள்ளைமாளிகைக்கு நேரடியாக ஒரு மடல்



நிரன்
04-02-2009, 12:33 PM
நண்பர்களே பல வழிகளிலும் நாம் போராடிக்கொண்டுள்ளோம் நம் மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தினை ஏற்படுத்திக்கொடுக்க. பல தளங்களிலும் வாக்குகள், கணக்கெடுப்பு என்பவற்றிற்கு முகம் கொடுத்து வருகிறோம் இதோ இன்னும் ஒரு வழிமுறை. சலிப்புக் கொள்ளாமல் எல்லோரும் உதவுங்கள் நம் மக்களைக் காப்பாற்ற.


இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.

எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை
எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.
அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா!

உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள்.

இதோ ஒரு வழி…

அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.

உதாரணத்திற்கு:

” Please stop the Genocide of TAMILS in Sri Lanka “
” Please help to Srilankan Tamils”
“Please help to Srilankan Tamils Freedom”

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)
நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.

சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு (http://www.whitehouse.gov/contact/)

http://www.whitehouse.gov/contact/

நன்றி தமிழ்வின்

என்னவன் விஜய்
04-02-2009, 03:30 PM
நான் என் மக்களுக்காக அதிபரிடம் என்னென்னக்கதைக்க யோசித்தேனோ அவை அனைத்தையும் ஒரு மடலாக எழுதி 2 தினங்களுக்கு முன்பே இந்த முகவரிக்கு அனுப்பிவிட்டேன்.

பகிற்வுக்கு நன்றி நிரன்.

எல்லோரும் பங்கெடுக்கவும்.

தூயவன்
04-02-2009, 04:21 PM
நானும் அனுப்புகிறேன்.. எமக்காக

ஸ்ரீதர்
05-02-2009, 07:14 AM
நானும் அனுப்பிவிட்டேன்.

Ranjitham
05-02-2009, 08:11 PM
என் கடமையை செய்துவிட்டேன்.
இரன்சிதம்