PDA

View Full Version : செத்தொழிகிற மனிதநேயம்..!!!!



sriram
01-02-2009, 10:36 AM
செத்தொழிகிற மனிதநேயம்..!!!!

இது கேட்க நாதியில்லையோ….?
இது கேட்க நாதியில்லையோ….?
ஈழத்தில் தமிழினம் அழிகிறதே..!!!
இது கேட்க நாதியில்லையோ….?-நெஞ்சில்
கொஞ்சம் கூட இரக்கம் இல்லையோ…!!?

பொறுத்தது போதுமடா..!!! இது நீ
பொங்கி எழும் நேரமடா…!!!

ஏழு கோடி தமிழன் இங்கிருந்தென்ன லாபம்..?
ஒன்று சேர்ந்து ஏற்றுங்கள் அணையா த தீபம்..!!
உலக கவனம் கொணர உன்னாலே முடியும்..!
ஈழத்தமிழ் வாழ்வில் என்றங்கு விடியும்…?

தமிழா…உன் மனம் என்ன மரத்து போனதா…??
இல்லை ..உன் இதயம் சிறுத்து போனதா..?
உலகம் அதிர குரல் எழுப்பு..!!!
ஒரு சேர குரல் எழுப்பு..!!!-இது
நம் இனம் காக்க ஒரு அழைப்பு….!!!
-Sriram.

அமரன்
03-02-2009, 08:14 AM
வெண்பாப் புனைவை இளகவைத்து
வெல்லப் பாகாய் ஆக்கியவரே. வருக வருக..

கொதி நிலையில் வெளிவரும்
ஆவியாக இல்லாமல்
கொதிக்க வைக்க நெருப்பை
உமிழ்கிறது கவிதை.

உலை வாய் மட்டுமல்ல
ஊர் வாயும் திறக்கட்டும்.
உலகின் மூலை முடுக்கெங்கும்
தமிழன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

உங்கள் அழைப்புக்கு எசப்பாட்டாய்
ஒரு அறைகூவல் விடுப்பு
மென்முறையில் வன்முற்றையை
இல்லாமல் செய்வோம் வாருங்கள்.