PDA

View Full Version : சந்தோசம்...!



கா.ரமேஷ்
26-01-2009, 11:46 AM
சந்தோசம்...
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...

பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...

நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...

சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...

சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...

அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!

அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!

சசிதரன்
26-01-2009, 01:55 PM
இனிய வரிகள் ரமேஷ்... தொடருங்கள்..:)

கா.ரமேஷ்
27-01-2009, 09:43 AM
நன்றி சசி..!

தென்னாட்டு சிங்கம்
28-01-2009, 02:20 AM
பாமரனுக்கும் புரியும் வண்ணம்
பளிச்சென்ற தமிழில் வாழ்வின் ரகசியத்தை
பட்டை தீட்டிய அன்பருக்கு.. மனங்கவர்
நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்..