ரங்கராஜன்
25-01-2009, 07:00 AM
நானும் மனிதன் தானே?
ஜீப்பை விட்டு இறங்கினான் ரவி, காக்கி ஃபாண்டு, கலர் சட்டை, மூன்று நாள் தாடி, தூக்கம் இல்லாத சிவந்த கண்கள், அசதியான முகம். மாடி நோக்கி சென்றான், மூலையில் பான்பராக் கோலங்கள் உள்ள மாடி படிக்கட்டில் ஏறினான். முதல் மாடியில் இரும்பு கதவு தட்டினான், கதவு திறக்கப்பட்டது. உள்ளே இருந்த உயர் அதிகாரி வெளியே வந்தார். அறையின் உள்ளே இருந்து சத்தமாக குரல் வந்தது.
“யாரு இவன் தானா, என்னிடம் இருந்து உண்மையை வரவழை... ............” அதற்குள் கதவு மூடப்பட்டதால், வாக்கியம் முடிவடையவில்லை.
“மிஸ்டர். ரவி, இந்த மாதிரி ஒரு நிலைமையில் உங்களை நான் தொந்தரவு செய்யக்கூடாது, இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை, ரொம்ப திமிரா பேசறான், எதற்கும் பதில் சொல்ல மறுக்கிறான்”
“பேந்தட்டால் மாதிரி எதாவது யூஸ் பண்ண வேண்டியது தானே”
“அது சட்டத்துக்கு எதிரானது”
“பொது மக்களை கொல்வதை விட வா”
“............”
“சரி இப்ப நான் என்ன செய்யணும்”
“அவனிடம் நயமாக பேசி, உண்மையை தெரிஞ்சிக்கனும்”
“நயமாக”
“வேறு வழியில்லை, உங்களால் தான் அது முடியும். அப்ப தான் வருங்கால தாக்குதல்களை தடுக்க முடியும்”
“.........” எதுவும் சொல்லாமல் ஒரு சல்யூடை போட்டுவிட்டு அறையை நோக்கி சென்றான் ரவி.
உள்ளே சென்றான், அங்கு கால் மேல் கால் போட்ட படி உக்கார்ந்து இருந்தான் அவன். கழுத்தை தொடும் அளவிற்கு கோதுமை நிற முடி, நல்ல சிகப்பு, அழகாக தான் இருந்தான். ரவி அவன் அருகில்
நாற்காலியை இழுத்து போட்டு உக்கார்ந்தான்.
“என்னுடைய பெயர் ரவி கந்தசாமி, இன்ட்ராகேஷன் டிப்பார்ட்மேட், ஏ.சி”
“என் பேரு மகாத்மா காந்தி, அகிம்சை டிப்பார்ட்மேட்” என்றான் நக்கலாக காதை குடைந்துக் கொண்டு.
“ஓ அப்படியா, உங்களுடைய நெஞ்சு எலும்பு உடைந்து உண்டியல் மாதிரி சத்தம் வருவதை நீங்க இதுவரை கேட்டு இருக்கிறீங்களா? இன்னொரு முறை எங்கள் காந்தியை பற்றி கிண்டலாக பேசினால், அதை கேட்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்”
“ஹா ஹா அப்படி செஞ்சா, என்னுடைய எழும்பு சத்தம் அடங்குவதற்குள், குண்டு சத்தம் உங்க நாடு பூரா கேட்கும். என் பின்னாடி என்னுடைய நாடே எனக்காக நிக்குது”
“நிஜமாவா, அப்ப இது என்ன?” என்று தன்னுடைய கையில் இருந்த நாளிதழை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதில் தலைப்புச் செய்தியாய்.
“இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பிடிப்பட்டவனும் எங்கள் நாட்டு பிரஜை கிடையாது” $$$$$$$$ நாடு அறிவிப்பு என்று எழுதி இருந்தது.
முதல் முறையாக அவனின் முகம் இருக ஆரம்பித்தது, கண்கள் ரவியை பார்க்க தயங்கியது.
“உன் நாடு பின்னாடி நிக்கும், ஓடிவரும்னு சொன்ன. இப்ப உன் நிலை என்ன தெரியுமா. இந்த உலகத்தில் நீ எங்குமே போக முடியாது”
“என்னுடைய மதக்காரர்கள் என்னை காப்பாற்றுவாங்க”
“நீ வைத்த வெடிகுண்டில் இறந்த பாதி பேர் உங்க மதக்காரர்கள் தான், ஆனால் இந்தியர்கள்”
“நான் என் மதம்னு சொன்னது என்னுடைய நாட்டில் வாழ்பவர்களை தான், அவர்கள் மட்டும் தான் என்னுடைய மதம்”
“ரத்ததிலே உனக்கு தீவிரவாதம் ஊறி விட்டது”
“கஷ்டத்தில் வாழ்ந்து பார், உன் உடம்பிலும் ஊறும், அதற்கு பெருமை படுகிறேன்”
“யாருக்கு தான் கஷ்டம் இல்லை”
“நீ என்ன .......... கஷ்டப்பட்டாய். சிறு வயதில் சாப்பாடு இல்லாமல் வார கணக்கில் இருந்து இருக்கீயா, உன்னுடைய சகோதிரியின் உடல் விற்ற காசில் சாப்பிட்டு இருக்கீயா, உன் தந்தைக்காக விபச்சாரியை அழைத்து வந்து இருக்கீயா, அம்மாவின் விரல் நுனி படாமல் வளர்ந்து இருக்கீயா. அதற்கு பழிவாங்க இதைவிட அதிகமாக செய்வேன், எனக்கு முக்கியம் பணம் மட்டும் தான், நானும் மனிதன் தானே” என்று கத்தினான்.
“அதெல்லாம் அனுபவித்ததில்லை, ஆனால் உன் புண்ணியத்தில் ஆறு மாதமான என் குழந்தை இறந்து விட்டது................... அதுவும் என்னுடைய மனைவி பால் குடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே........... ரயில்வே ஸ்டேஷனில் நீ வைத்த வெடிகுண்டால்”
“உடலாவது கிடைத்ததா?”
“என் மனைவியின் மார்பும் குழந்தையின் தலையும் மட்டும் கிடைத்தது” குரல் தழுதழுத்தது.
“எங்களுடைய குறி நீங்கள் அல்ல”
“குறி எதுவாக இருந்தாலும், அவங்களும் யாரோ ஒருவருக்கு அப்பா, கணவன், குழந்தை தானே”
“புனிதப்போரில் அதை எல்லாம் பார்க்கமுடியாது”
சற்றென்று எழுந்த ரவி காவலாளியிடம் இரண்டு கிளஸில் தண்ணீர் எடுத்து வரச்சொன்னான். தண்ணீர் வந்ததும் கொஞ்ச நேரம் அதை வாங்கி பார்த்தான்.
“இந்த தண்ணியை குடி” என்று அவனிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் குடித்து விட்டு.
“இங்க பார் என்னை இந்த கேஸில் இருந்து விடுதலை செய். உனக்கு கோடி கணக்கில் பணம் வாங்கி தருகிறேன்”
ரவியின் உதட்டில் அசட்டு சிரிப்பு வந்தது.
”என்னுடையை பெண் குழந்தையை நான் தூக்கி கொஞ்சும் பொழுது, அவள் சிரிப்பாள், அப்பொழுது அவள் வாயில் இருந்து எச்சில் துளிகள் என்னுடைய முகத்தில் விழும். அதுக்கு ஈடாகுமா, நீ சொன்ன கோடிகள்” என்றான் அவனின் கண்களை நோக்கி.
எதிரில் அமர்ந்து இருந்த தீவிரவாதி திடீர் என்று தன்னுடைய தொண்டையை பிடித்துக் கொண்டு “ என்ன தண்ணீ ஒரு மாதிரியா இருக்கு”
“சைனைடு கலந்த தண்ணி பின்ன எப்படி இருக்கும்”
“அடப்பாவி................ஏன் ........இப்படி .....செஞ்” என்று துடித்தான் கீழே விழுந்தான். அவனின் காது ஓரமாக சென்ற ரவி
“நானும் மனிதன் தானே” என்றான்.
ரவி வெளியே அவசரமாக தன்னுடைய உயர் அதிகாரியின் அறைக்கு வந்தான்
“என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள், அவனின் முடியை அவனை கைது செய்தவுடன் வெட்டி இருக்க வேண்டாமா?, இப்ப பாருங்க அதற்குள் சைனைடு குப்பியை மறைத்து வைத்து இருக்கிறான், அதை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்” என்றான் மூச்சு இறைக்க.
மேல் அதிகாரி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் “ குட் ரவி, இதையே அனைவரிடமும் சொல்லிடுங்க. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் பிஞ்சு குழந்தையின் சாவுக்கு, என்னால் தர முடிந்த ஆறுதல் இது,................ (என்று பெருமூச்சு விட்டவார்), சட்ட ஒழுங்கை காப்பவனாக இருந்தாலும், நானும் மனிதன் தானே” என்றார் ரவியின் கண்களை நோக்கி.
ஜீப்பை விட்டு இறங்கினான் ரவி, காக்கி ஃபாண்டு, கலர் சட்டை, மூன்று நாள் தாடி, தூக்கம் இல்லாத சிவந்த கண்கள், அசதியான முகம். மாடி நோக்கி சென்றான், மூலையில் பான்பராக் கோலங்கள் உள்ள மாடி படிக்கட்டில் ஏறினான். முதல் மாடியில் இரும்பு கதவு தட்டினான், கதவு திறக்கப்பட்டது. உள்ளே இருந்த உயர் அதிகாரி வெளியே வந்தார். அறையின் உள்ளே இருந்து சத்தமாக குரல் வந்தது.
“யாரு இவன் தானா, என்னிடம் இருந்து உண்மையை வரவழை... ............” அதற்குள் கதவு மூடப்பட்டதால், வாக்கியம் முடிவடையவில்லை.
“மிஸ்டர். ரவி, இந்த மாதிரி ஒரு நிலைமையில் உங்களை நான் தொந்தரவு செய்யக்கூடாது, இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை, ரொம்ப திமிரா பேசறான், எதற்கும் பதில் சொல்ல மறுக்கிறான்”
“பேந்தட்டால் மாதிரி எதாவது யூஸ் பண்ண வேண்டியது தானே”
“அது சட்டத்துக்கு எதிரானது”
“பொது மக்களை கொல்வதை விட வா”
“............”
“சரி இப்ப நான் என்ன செய்யணும்”
“அவனிடம் நயமாக பேசி, உண்மையை தெரிஞ்சிக்கனும்”
“நயமாக”
“வேறு வழியில்லை, உங்களால் தான் அது முடியும். அப்ப தான் வருங்கால தாக்குதல்களை தடுக்க முடியும்”
“.........” எதுவும் சொல்லாமல் ஒரு சல்யூடை போட்டுவிட்டு அறையை நோக்கி சென்றான் ரவி.
உள்ளே சென்றான், அங்கு கால் மேல் கால் போட்ட படி உக்கார்ந்து இருந்தான் அவன். கழுத்தை தொடும் அளவிற்கு கோதுமை நிற முடி, நல்ல சிகப்பு, அழகாக தான் இருந்தான். ரவி அவன் அருகில்
நாற்காலியை இழுத்து போட்டு உக்கார்ந்தான்.
“என்னுடைய பெயர் ரவி கந்தசாமி, இன்ட்ராகேஷன் டிப்பார்ட்மேட், ஏ.சி”
“என் பேரு மகாத்மா காந்தி, அகிம்சை டிப்பார்ட்மேட்” என்றான் நக்கலாக காதை குடைந்துக் கொண்டு.
“ஓ அப்படியா, உங்களுடைய நெஞ்சு எலும்பு உடைந்து உண்டியல் மாதிரி சத்தம் வருவதை நீங்க இதுவரை கேட்டு இருக்கிறீங்களா? இன்னொரு முறை எங்கள் காந்தியை பற்றி கிண்டலாக பேசினால், அதை கேட்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்”
“ஹா ஹா அப்படி செஞ்சா, என்னுடைய எழும்பு சத்தம் அடங்குவதற்குள், குண்டு சத்தம் உங்க நாடு பூரா கேட்கும். என் பின்னாடி என்னுடைய நாடே எனக்காக நிக்குது”
“நிஜமாவா, அப்ப இது என்ன?” என்று தன்னுடைய கையில் இருந்த நாளிதழை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதில் தலைப்புச் செய்தியாய்.
“இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பிடிப்பட்டவனும் எங்கள் நாட்டு பிரஜை கிடையாது” $$$$$$$$ நாடு அறிவிப்பு என்று எழுதி இருந்தது.
முதல் முறையாக அவனின் முகம் இருக ஆரம்பித்தது, கண்கள் ரவியை பார்க்க தயங்கியது.
“உன் நாடு பின்னாடி நிக்கும், ஓடிவரும்னு சொன்ன. இப்ப உன் நிலை என்ன தெரியுமா. இந்த உலகத்தில் நீ எங்குமே போக முடியாது”
“என்னுடைய மதக்காரர்கள் என்னை காப்பாற்றுவாங்க”
“நீ வைத்த வெடிகுண்டில் இறந்த பாதி பேர் உங்க மதக்காரர்கள் தான், ஆனால் இந்தியர்கள்”
“நான் என் மதம்னு சொன்னது என்னுடைய நாட்டில் வாழ்பவர்களை தான், அவர்கள் மட்டும் தான் என்னுடைய மதம்”
“ரத்ததிலே உனக்கு தீவிரவாதம் ஊறி விட்டது”
“கஷ்டத்தில் வாழ்ந்து பார், உன் உடம்பிலும் ஊறும், அதற்கு பெருமை படுகிறேன்”
“யாருக்கு தான் கஷ்டம் இல்லை”
“நீ என்ன .......... கஷ்டப்பட்டாய். சிறு வயதில் சாப்பாடு இல்லாமல் வார கணக்கில் இருந்து இருக்கீயா, உன்னுடைய சகோதிரியின் உடல் விற்ற காசில் சாப்பிட்டு இருக்கீயா, உன் தந்தைக்காக விபச்சாரியை அழைத்து வந்து இருக்கீயா, அம்மாவின் விரல் நுனி படாமல் வளர்ந்து இருக்கீயா. அதற்கு பழிவாங்க இதைவிட அதிகமாக செய்வேன், எனக்கு முக்கியம் பணம் மட்டும் தான், நானும் மனிதன் தானே” என்று கத்தினான்.
“அதெல்லாம் அனுபவித்ததில்லை, ஆனால் உன் புண்ணியத்தில் ஆறு மாதமான என் குழந்தை இறந்து விட்டது................... அதுவும் என்னுடைய மனைவி பால் குடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே........... ரயில்வே ஸ்டேஷனில் நீ வைத்த வெடிகுண்டால்”
“உடலாவது கிடைத்ததா?”
“என் மனைவியின் மார்பும் குழந்தையின் தலையும் மட்டும் கிடைத்தது” குரல் தழுதழுத்தது.
“எங்களுடைய குறி நீங்கள் அல்ல”
“குறி எதுவாக இருந்தாலும், அவங்களும் யாரோ ஒருவருக்கு அப்பா, கணவன், குழந்தை தானே”
“புனிதப்போரில் அதை எல்லாம் பார்க்கமுடியாது”
சற்றென்று எழுந்த ரவி காவலாளியிடம் இரண்டு கிளஸில் தண்ணீர் எடுத்து வரச்சொன்னான். தண்ணீர் வந்ததும் கொஞ்ச நேரம் அதை வாங்கி பார்த்தான்.
“இந்த தண்ணியை குடி” என்று அவனிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் குடித்து விட்டு.
“இங்க பார் என்னை இந்த கேஸில் இருந்து விடுதலை செய். உனக்கு கோடி கணக்கில் பணம் வாங்கி தருகிறேன்”
ரவியின் உதட்டில் அசட்டு சிரிப்பு வந்தது.
”என்னுடையை பெண் குழந்தையை நான் தூக்கி கொஞ்சும் பொழுது, அவள் சிரிப்பாள், அப்பொழுது அவள் வாயில் இருந்து எச்சில் துளிகள் என்னுடைய முகத்தில் விழும். அதுக்கு ஈடாகுமா, நீ சொன்ன கோடிகள்” என்றான் அவனின் கண்களை நோக்கி.
எதிரில் அமர்ந்து இருந்த தீவிரவாதி திடீர் என்று தன்னுடைய தொண்டையை பிடித்துக் கொண்டு “ என்ன தண்ணீ ஒரு மாதிரியா இருக்கு”
“சைனைடு கலந்த தண்ணி பின்ன எப்படி இருக்கும்”
“அடப்பாவி................ஏன் ........இப்படி .....செஞ்” என்று துடித்தான் கீழே விழுந்தான். அவனின் காது ஓரமாக சென்ற ரவி
“நானும் மனிதன் தானே” என்றான்.
ரவி வெளியே அவசரமாக தன்னுடைய உயர் அதிகாரியின் அறைக்கு வந்தான்
“என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள், அவனின் முடியை அவனை கைது செய்தவுடன் வெட்டி இருக்க வேண்டாமா?, இப்ப பாருங்க அதற்குள் சைனைடு குப்பியை மறைத்து வைத்து இருக்கிறான், அதை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்” என்றான் மூச்சு இறைக்க.
மேல் அதிகாரி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் “ குட் ரவி, இதையே அனைவரிடமும் சொல்லிடுங்க. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் பிஞ்சு குழந்தையின் சாவுக்கு, என்னால் தர முடிந்த ஆறுதல் இது,................ (என்று பெருமூச்சு விட்டவார்), சட்ட ஒழுங்கை காப்பவனாக இருந்தாலும், நானும் மனிதன் தானே” என்றார் ரவியின் கண்களை நோக்கி.