PDA

View Full Version : புலிவேட்டை



மறத்தமிழன்
24-01-2009, 05:45 AM
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் அதிரடிப்படையான கொமாண்டோப்படை அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...
வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. ரஸ்யா.. சீனா... ஜேர்மன்.... இஸ்ரேல்... என இன்னும் பல நாட்டு சிறப்பு படைகள்..... ஒண்ணும் புடுங்க முடியல.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மகாநாடு நடத்தப்பட்டது.
அதிலே ”அவமானம் எந்க நாட்டாலும் முடியல” என பேசப்பட்ட போது....

”எங்களைக் கேட்கலயே.......” ஒரு குரல்...........

பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....

”நாங்கள் எவ்வளவு பலி பிடிக்கிறம் ஆயுதத்தோட... இதப் பிடிக்க மாட்டமா...” என்றார் எகத்தாளமாக...

சரி. அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்கு...
நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயிலலை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக் காடு சென்றன..

அஙகே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி...

ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது.
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்.

"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்,
”ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்..?”

அதற்கு பன்றி,

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்க தமிழங்களுக்கு 25 வருடமா இதத்தான் பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............!!!?:mini023:

நன்றி: மின்னஞ்சல்.

ஓவியன்
24-01-2009, 05:58 AM
மறத்தமிழன் இதே மின்னஞ்சல் எனக்கும் வந்தது...

என்ன செய்ய,
குற்றவாளிகளாக்க பல வழிகள்
அதில் இதுவுமொன்று....

இந்தக் கவிதையை (http://tamilmantram.com/vb/showthread.php?t=12156) மீளவும் ஞாபகமூட்டிய பதிவிது...

மயூ
25-01-2009, 02:24 AM
நான் இந்த கதையை வாசித்திருக்கின்றேன். இலங்கைத் தமிழருக்காக மாற்றி அமைக்கப்பட்ட பதிவை இப்பத்தான் வாசிக்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே

அன்புரசிகன்
25-01-2009, 02:28 AM
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்.

"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்,
”ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்..?”

அதற்கு பன்றி,
ஏதோ அமெரிக்காவுக்கு தெரியாத மாதிரியெல்லே சொல்லுறியள்...

தெரிஞ்சு நித்திர கொள்ளுறமாதிரி நடிக்கிறது தான் அமெரிக்காவின் விசேடம்... :D :D :D