kulirthazhal
21-01-2009, 02:11 PM
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
அந்த
பிறப்பின்போது
விண்ணில் ஏதும்
மின்னவில்லை.
அவன்
அறிவினை யாரும்
ஏந்திக்கொள்ளவில்லை.
அங்கே
ஒற்றையடிப்பாதைகளை
அவன் நேசிக்கவில்லை,
யாரையும்
வழிமறிக்கவும் இல்லை.
அவன் பாதங்களின்
பத்துக்கண்களும்
பார்த்ததெல்லாம் பாதைதான்.
அவன் பாதத்தால்
வரையப்பட்ட
ஒற்றையடிப்பாதையும்
தனிமையில்....
சில புற்கள்மட்டும்
தலைகாட்ட தயாராய்....,
கண்கள்கொண்ட
யாவரும்
கண்டபோதிலும்
அவனின்
பாதத்தில் பூத்த
செந்துளிகளையே
பாதையின்
வாய்ப்பாடாக்கினர்.
கோட்பாடுகள் சொல்வதெல்லாம்
"முதல் பாதைக்குமுன்
ஓர் பாதம்
அஞ்சாமலிருந்தது".
நடந்துசென்றான்,
தொடர்ந்து நடவாததால்
கடந்துபோனான்,
நிழல் கரையும்வரை
விழியில் நின்றான்.
எங்கேயோ
அவன் அவனுக்காய்
நிம்மதியாய்......,
என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
ஈக்கள் மொய்க்காத
வலைக்குள்ளே அழுது,
ஆசானின்
அறிவை மென்று
செரித்து,
தந்தையின் சிறகை
போர்த்திக்கொண்டு
தலையில்கூட
அனல்படாமல் பறந்து,
இலக்கணத்துக்குள்
வலைப்பட்டு
இல்வாழ்க்கை செழித்து
இல்லாமல் போன
எத்தனையோ பிறப்பைப்போல்
அவனும்
முடிவானோ!!!
என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
-குளிர்தழல்.
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
அந்த
பிறப்பின்போது
விண்ணில் ஏதும்
மின்னவில்லை.
அவன்
அறிவினை யாரும்
ஏந்திக்கொள்ளவில்லை.
அங்கே
ஒற்றையடிப்பாதைகளை
அவன் நேசிக்கவில்லை,
யாரையும்
வழிமறிக்கவும் இல்லை.
அவன் பாதங்களின்
பத்துக்கண்களும்
பார்த்ததெல்லாம் பாதைதான்.
அவன் பாதத்தால்
வரையப்பட்ட
ஒற்றையடிப்பாதையும்
தனிமையில்....
சில புற்கள்மட்டும்
தலைகாட்ட தயாராய்....,
கண்கள்கொண்ட
யாவரும்
கண்டபோதிலும்
அவனின்
பாதத்தில் பூத்த
செந்துளிகளையே
பாதையின்
வாய்ப்பாடாக்கினர்.
கோட்பாடுகள் சொல்வதெல்லாம்
"முதல் பாதைக்குமுன்
ஓர் பாதம்
அஞ்சாமலிருந்தது".
நடந்துசென்றான்,
தொடர்ந்து நடவாததால்
கடந்துபோனான்,
நிழல் கரையும்வரை
விழியில் நின்றான்.
எங்கேயோ
அவன் அவனுக்காய்
நிம்மதியாய்......,
என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
ஈக்கள் மொய்க்காத
வலைக்குள்ளே அழுது,
ஆசானின்
அறிவை மென்று
செரித்து,
தந்தையின் சிறகை
போர்த்திக்கொண்டு
தலையில்கூட
அனல்படாமல் பறந்து,
இலக்கணத்துக்குள்
வலைப்பட்டு
இல்வாழ்க்கை செழித்து
இல்லாமல் போன
எத்தனையோ பிறப்பைப்போல்
அவனும்
முடிவானோ!!!
என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.
-குளிர்தழல்.