umakarthick
21-01-2009, 10:19 AM
தாம்பரம் செங்கல்பட்டு பேருந்து கூட்டத்தில் திணறிக் கொண்டே நகர்ந்தது.
என் பக்கத்தில் நின்றிருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!' என்றார் எதிர்முனையிடம்.எனக்கு ஆச்சர்யமாகியது.
நானும் பல முறை கவனித்திருக்கிறேன் , தாம்பரத்தில் இருந்து கொண்டு நான் திருப்பதியில் இருக்கிறேன்,திருத்தணியில் இருக்கிறேன் என்று மொபைலில் பேசுபவர்களை, ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ சே என நினைத்துக் கொண்டே கிடைத்த இருக்கையில் அமர்ந்தேன்.
அமர்ந்தவுடன் என் மொபைல் அலறியது, பிரசாத் கூப்பிடுறான்,கடந்த வாரம் என்னிடம் கடன் கேட்டிருந்தவனிடம் ,இன்று வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று சொல்லி இருந்தது நியாபகத்திற்கு வந்தது.ஆனால் திடீரென்று வீட்டில் டிவி ரிப்பேராகி விட அவனுக்கு வைத்த பணம் செலவாகிவிட்டது.
போனை எடுத்தேன், ஹலோ சொல்லு பிரசாத் ,
அவன்: எப்படி இருக்க ..
நான்:ஆங் நான் நல்லா இருக்கேன்
அவன் :: எங்கடா இருக்க இப்போ
நான்:நான் இப்போ பங்களூரில் இருக்கேண்டா !!!!
என் பக்கத்தில் நின்றிருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!' என்றார் எதிர்முனையிடம்.எனக்கு ஆச்சர்யமாகியது.
நானும் பல முறை கவனித்திருக்கிறேன் , தாம்பரத்தில் இருந்து கொண்டு நான் திருப்பதியில் இருக்கிறேன்,திருத்தணியில் இருக்கிறேன் என்று மொபைலில் பேசுபவர்களை, ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ சே என நினைத்துக் கொண்டே கிடைத்த இருக்கையில் அமர்ந்தேன்.
அமர்ந்தவுடன் என் மொபைல் அலறியது, பிரசாத் கூப்பிடுறான்,கடந்த வாரம் என்னிடம் கடன் கேட்டிருந்தவனிடம் ,இன்று வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று சொல்லி இருந்தது நியாபகத்திற்கு வந்தது.ஆனால் திடீரென்று வீட்டில் டிவி ரிப்பேராகி விட அவனுக்கு வைத்த பணம் செலவாகிவிட்டது.
போனை எடுத்தேன், ஹலோ சொல்லு பிரசாத் ,
அவன்: எப்படி இருக்க ..
நான்:ஆங் நான் நல்லா இருக்கேன்
அவன் :: எங்கடா இருக்க இப்போ
நான்:நான் இப்போ பங்களூரில் இருக்கேண்டா !!!!