வசீகரன்
21-01-2009, 06:43 AM
மெல்ல தாலாட்டிடும்
நினைவுமேகங்கள்...
தென்றலாய் வருடிச்செல்லும்
எண்ணத்திவலைகள்...
மழையாக பொழிந்து உலகம்
சிலிர்த்த நேரம்
கை கோர்த்து நனைந்து
நடந்த தடயங்கள்...
வசந்த வானில் மலர் சொறிந்த
நந்தவனங்களில் மரநிழல்களில்
தோள்சாய்ந்து மனம் முழுதும்
ஆசைகள் சுமந்து
பேசிய கனவுக்காலங்கள்...
கோடை வெம்மையில் பேருந்து
பயணங்களில் வியர்வை பிசுபிசுப்புடன்
ஒட்டி உறவாடி பயணித்த நாட்கள்...
சாலையோர அண்ணா கடையில்
நீயும் நானும் போட்டிபோட்டு
முண்டியடித்து
கை வியர்வை கலந்த
மோர்பானம் பருகிய
நினைவுகள்...
கூதற்காற்றில் கைகள்
இறுகபற்றிக்கொண்டு ஆசுவாசமாய்
ஆலயம் சென்ற
அதிகாலை நேரங்கள்...
பரபரப்பான உலகில் நடந்து
செல்லுகையில்
ஏனோ திடீரென நினைவடித்து
நான் சிரித்து விட
அருகில் செல்வோர்
ஆச்சரியமாய்
பார்த்து விட வைத்த நினைவுகள்...
பழைய பாடபுத்தகங்களை
திறந்து பார்க்கும் போதெல்லாம்
வந்து விடும்
நினைவுகள்...நினைவுகள்...இதயம் முழுதும்
உன் இனிய நினைவுகள்...
காலமேகங்களாய் கலைந்தோம்...
நிறைய பயணங்களை கொண்டோம்...
அனுபவங்களை சேகரித்தோம்...
இன்றும் பார்க்கிறோம்...
எனினும்
பரிமாற்றங்களில் ஒளியில்லை...
புன்னகைக்கிறோம்
பூக்கள் இல்லை...
சிரிக்கிறோம்
சிரிப்பில் உயிர் இல்லை...
நாம் நமது இளமைக்காலங்களை
கடந்து விட்டோம்
இல்லையா தோழி...
நமது இனிமைக்குறும்புகள்
இத்துடன் நிறைவுற்றன
இல்லையா தோழி...!
நினைவுமேகங்கள்...
தென்றலாய் வருடிச்செல்லும்
எண்ணத்திவலைகள்...
மழையாக பொழிந்து உலகம்
சிலிர்த்த நேரம்
கை கோர்த்து நனைந்து
நடந்த தடயங்கள்...
வசந்த வானில் மலர் சொறிந்த
நந்தவனங்களில் மரநிழல்களில்
தோள்சாய்ந்து மனம் முழுதும்
ஆசைகள் சுமந்து
பேசிய கனவுக்காலங்கள்...
கோடை வெம்மையில் பேருந்து
பயணங்களில் வியர்வை பிசுபிசுப்புடன்
ஒட்டி உறவாடி பயணித்த நாட்கள்...
சாலையோர அண்ணா கடையில்
நீயும் நானும் போட்டிபோட்டு
முண்டியடித்து
கை வியர்வை கலந்த
மோர்பானம் பருகிய
நினைவுகள்...
கூதற்காற்றில் கைகள்
இறுகபற்றிக்கொண்டு ஆசுவாசமாய்
ஆலயம் சென்ற
அதிகாலை நேரங்கள்...
பரபரப்பான உலகில் நடந்து
செல்லுகையில்
ஏனோ திடீரென நினைவடித்து
நான் சிரித்து விட
அருகில் செல்வோர்
ஆச்சரியமாய்
பார்த்து விட வைத்த நினைவுகள்...
பழைய பாடபுத்தகங்களை
திறந்து பார்க்கும் போதெல்லாம்
வந்து விடும்
நினைவுகள்...நினைவுகள்...இதயம் முழுதும்
உன் இனிய நினைவுகள்...
காலமேகங்களாய் கலைந்தோம்...
நிறைய பயணங்களை கொண்டோம்...
அனுபவங்களை சேகரித்தோம்...
இன்றும் பார்க்கிறோம்...
எனினும்
பரிமாற்றங்களில் ஒளியில்லை...
புன்னகைக்கிறோம்
பூக்கள் இல்லை...
சிரிக்கிறோம்
சிரிப்பில் உயிர் இல்லை...
நாம் நமது இளமைக்காலங்களை
கடந்து விட்டோம்
இல்லையா தோழி...
நமது இனிமைக்குறும்புகள்
இத்துடன் நிறைவுற்றன
இல்லையா தோழி...!