எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 02:43 PM
இன்னுமின்னும் உரத்தேற்றுகிறாய்
உன் ஆளுமைகளை!
ஒவ்வொரு கணமும் உயர்ந்தவாறிருக்கின்றன
உயிர் கீறும் உன் உரத்தச் சப்தங்கள்
பலம் குன்றிய என் மந்த விரைவுகளிலும்
என் பாதம் மீறிய விரைவோட்டங்களிலும்
சொடுக்கியடியிருக்கும் உன் சாட்டைக்குண்டான அர்த்தம்
இன்னும் விளங்கவில்லை எனக்கு
நன்றாய் விரைகையில் தட்டிக் கொடுப்பதாகவும்
அது அல்லாத சமயங்களில் உன் உரிமைக் கோறலாகவும்
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்
காடுகளற்ற கடைத்தெரு வழிகளில்
உன்னிதழ் பூத்துப் புன்னகைக்கிறாய்
ஏற்ற இடமென எண்ணிக் குதூகலிக்கிறாய்
பச்சைப் புல்வெளி வழிகளில்
இன்னும் சீற்றமெடுக்கிறது உன் சாட்டை
விழி எட்டி என் நாவெட்டாத
அப்பசுமை வெளிகளை
துறந்தபடி விரைகிறேன் நான்
உன் மீதான விசுவாசம் காத்தபடி
வெற்று குரைப்புகளன்றி வேறெதுவுமற்ற
வெண்குஷ்டத் தோல் போர்த்தி நிற்கும்
உன் வீடடு வெண் ஜாதி நாயுடன்
உன் தட்டுணவு பகிர்கையில்
கூரைக் கிழிந்த கொட்டகையில்
கொடுங்குளிர் சுமந்து
நீயிறைத்த எச்சில் தின்றபடி
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்
உணர்வுகளும் ரசனைகளுமற்ற மிருகம்தானென்றாலும்
கட்டுண்டு உன் பணியேற்கும் உன் அடிமைதானென்றாலும்
எலும்பும் தோலுமேற்ற உன் உடல் வழியோடும்
உனக்குண்டான உன் உயிரின் அதே ஒரு மாதிரி
என் மூச்சிலும் நிறைந்திருக்கிறது என்பதையாச்சும்
ஏற்றுக் கொள்வீரா என் இனிய எஜமானரே.
உன் ஆளுமைகளை!
ஒவ்வொரு கணமும் உயர்ந்தவாறிருக்கின்றன
உயிர் கீறும் உன் உரத்தச் சப்தங்கள்
பலம் குன்றிய என் மந்த விரைவுகளிலும்
என் பாதம் மீறிய விரைவோட்டங்களிலும்
சொடுக்கியடியிருக்கும் உன் சாட்டைக்குண்டான அர்த்தம்
இன்னும் விளங்கவில்லை எனக்கு
நன்றாய் விரைகையில் தட்டிக் கொடுப்பதாகவும்
அது அல்லாத சமயங்களில் உன் உரிமைக் கோறலாகவும்
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்
காடுகளற்ற கடைத்தெரு வழிகளில்
உன்னிதழ் பூத்துப் புன்னகைக்கிறாய்
ஏற்ற இடமென எண்ணிக் குதூகலிக்கிறாய்
பச்சைப் புல்வெளி வழிகளில்
இன்னும் சீற்றமெடுக்கிறது உன் சாட்டை
விழி எட்டி என் நாவெட்டாத
அப்பசுமை வெளிகளை
துறந்தபடி விரைகிறேன் நான்
உன் மீதான விசுவாசம் காத்தபடி
வெற்று குரைப்புகளன்றி வேறெதுவுமற்ற
வெண்குஷ்டத் தோல் போர்த்தி நிற்கும்
உன் வீடடு வெண் ஜாதி நாயுடன்
உன் தட்டுணவு பகிர்கையில்
கூரைக் கிழிந்த கொட்டகையில்
கொடுங்குளிர் சுமந்து
நீயிறைத்த எச்சில் தின்றபடி
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்
உணர்வுகளும் ரசனைகளுமற்ற மிருகம்தானென்றாலும்
கட்டுண்டு உன் பணியேற்கும் உன் அடிமைதானென்றாலும்
எலும்பும் தோலுமேற்ற உன் உடல் வழியோடும்
உனக்குண்டான உன் உயிரின் அதே ஒரு மாதிரி
என் மூச்சிலும் நிறைந்திருக்கிறது என்பதையாச்சும்
ஏற்றுக் கொள்வீரா என் இனிய எஜமானரே.