ரங்கராஜன்
16-01-2009, 05:04 PM
32 வது புத்தக கண்காட்சி
வணக்கம் நண்பர்களே
நேற்று சென்னையில் நடந்த 32 வது புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தேன், அதில் இருந்து சில துளிகள்.
நுழைவாயிலில் பெரிய பெரிய பேனர்கள் வைத்து இருந்தார்கள் பதிப்பகத்தினர், தங்களின் புதிய புத்தகங்களையும், படைப்பாளிகளின் படத்துடன் போட்டு இருந்தனர். 100 பதிப்பகத்துக்கு மேல் இருக்கும். வழிநெடுக்க வழக்கம் போல பட்டாணி, சுண்டல், காபி & டீ கடைகள் இருந்தது, டிக்கெட் கவுண்டர் (ticket counter) பக்கத்திலே, புதுசாக கேண்டீன் போட்டு இருந்தார்கள், போன முறையும் இருந்தது. ஆனால் இந்த முறை பீஸா, பர்கர், நூடல்ஸ், சூப், மற்றும் வெஜீடபில் பிரியாணி, தயிர் சாதம், பரொட்டா குருமா, செட் ஐடம்ஸ், ஐஸ் கீரிம்............. அப்பா விரல் வலிக்கிறது, புரிகிறது வேலை மெணக்கெட்டு இதை ஏன் முதலில் எழுதுகிறாய் என்கீறீர்களா???. சும்மா ஒரு ஜாலிக்கு. நான் சென்றவுடன் அதை தான் பார்த்தேன். விலையை கேட்டவுடன்
வெளியில் ஓடிவந்து விட்டேன், ஒரு வேர்கடலை பாக்கெட்டுடன்.
உள்ளே நுழைந்தேன் டிக்கெட் 5 ரூபாய், நடு மைதானத்தில் அரங்கம் அமைத்து இருந்தனர், கட்டை மற்றும் இரும்பு தகடுளின் உதவியுடன் கடைகளை பொட்டி பொட்டியாக பிரித்து இருந்தார்கள். காசுக்கு ஏற்றார் போல சிறிது, பெரிது, மிகப்பெரிது என்று பிரித்து இருந்தனர். வழக்கம் போல வரிசை இல்லாமல் நம்பர்கள் மாறி மாறி கடைகள் இருந்தது.
இந்த முறை போன முறையுடன் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்த்து புத்தகங்களின் விலைகளை அதிகப்படுத்தி தள்ளுபடி விலையில் கொடுத்தனர். சில கடைகள் போட வேண்டுமே என்று போட்டு இருந்தனர். உள்ளே சென்று பார்த்தால் இருந்தது கொஞ்ச புத்தகம், அதுவும் அந்த பதிப்பாளரே எழுதியது சொந்த கதைகள், சோக கதைகள். பதிப்பது இப்பொழுது குடிசை தொழிலாக மாறி வருகிறது, யார் வேண்டுமானால் பதிக்கலாம்.
மக்கள் டி.வி ஒரு கடை விரித்து ராமதாஸ் அவர்கள் எடிட்டராக இயங்கும் ஒரு புதிய தினசரி பத்திரிகையை இலவசமாக தந்துக் கொண்டு இருந்தனர், அதையே டெக்கன் க்ரோனிக்கலும் செய்தது.
சில பதிப்பகங்கள் வேறு வழியில்லாமல் மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். (படைப்பாளிகள் பஞ்சம் போல, நம் மன்ற படைப்பாளிகள் கவனிக்கவும்)
வழக்கம் போல கல்கியின் படைப்புகளை அடுக்கி வைத்து இருந்தனர், பொன்னியின் செல்வன், அலை ஒசை, பார்த்திபன் கனவு எல்லாம் புது புது அட்டையில் மின்னியது. அமரர் கல்கியின் சாதனை இது.
விசா பதிப்பகத்தில் வழக்கம் போல சுஜாதா ஐயாவிற்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி இருந்தனர். அவரின் பல புதிய புத்தகங்கள் இருந்தது. 35, 45 65, 70 என்று வித விதமான விலையில் அதற்கேற்ற காகித தரத்தில்.
தொடர்ந்து பல வருஷங்களாக அவர் புத்தக கண்காட்சிக்கு வருவார், எப்பொழுது வருவார் என்று தெரியாமல், அவரை பார்க்க ஏங்கி, சரியாக கணித்து அவர் வராத நாட்கள் சென்று எத்தனையோ முறை ஏமாந்து இருக்கிறேன் .....வழக்கம் போல இந்த முறையும் ஏமாந்தேன்.
உயிர்மை பதிப்பகம் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகம், காரணம் கேட்டால் சிரிப்பீர்கள். அதில் பதிக்கப்படும் புத்தகங்களின் முகப்பு அட்டையும், உள்ளே இருக்கும் காகிதத்தின் தரமும் என்னை மிகவும் கவர்ந்தது. விலை கொஞ்சம் அதிகம் தான், தமிழின் சில சிறந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் இங்கு கிடைக்கும். பார்த்தசாரதி, சுஜாதா, சல்மா, சாரு நிவேதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று பலர்.
நான் சென்று இருக்கும் பொழுது சாரு நிவேதாவும், உரிமையாளர் மனுஷ்யபுத்திரனும் இருந்தனர். (ரசிகர்களின் புத்தகங்களில் கையெழுத்திட)
இந்த முறை மனதை உறுத்திய விஷயம். அடியாள் என்று ஒரு புதிதாக ஒரு புத்தகம், அதன் அட்டையில் (ஒரு அரசியல் அடியாளின் உண்மை வாக்குமூலம்) என்று அவருடைய படத்துடன் இருந்தது, திருப்பி விலையை பார்த்தேன் 110 ரூபாய் என்று இருந்தது. அப்படியே வைத்து விட்டு பக்கத்தில் இருந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன், பிரித்தேன் பொருளுரையுடன் இருந்தது விலை 15 ரூபாய்.
கண்காட்சிக்கு உள்ளே பஜ்ஜி கடை, காபி & டீ கடை, பழங்கள் கடை என்று ரயில்வே ஸ்டேசன் போல இருந்தது. இதில் என்ன காமெடி என்றால் மக்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் பஜ்ஜிக்காக நின்றனர், அதில் நானும் ஒருவன் (ஹி ஹீ ஹீ).
திடீர் என்று நம்ம தலை மணியா அவர்களின் நியாபகம் வந்து அவருக்கு மெசேஜ் அடித்தேன்.
“என்ன தல எப்படி இருக்கீங்க, நான் புத்தக கண்காட்சியில் இருக்கிறேன், நீங்க இங்கு வந்தீர்களா?”
தலையின் பதில் “புத்தக கண்காட்சியா? அப்படினா?” என்று அனுப்பி இருந்தார்.
அப்புறம் அடுத்த நாள் அவரிடம் போனில் பேசும் பொழுது
“என்னை பார்த்து எப்படி அந்த கேள்வியை நீ கேட்டாய்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் என்ன அப்படி கேள்வி கேட்டு விட்டேன்
“காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் ......” அந்த கேள்வியா கேட்டேன்.
“புத்தக கண்காட்சிக்கு வரவில்லையானு கேட்டேன்”.
அதற்க்கு நம்ம தல “உன்ன யாருடா ஜாங்கிரி கொடுக்க சொன்னது” என்று நம்ம கவுண்ட மணி ஸ்டைலில் அதையே கேட்டுக் கொண்டு இருந்தார்.
அதே போல நம்ம ஆதவனிடம் பேசும் பொழுது நான் புத்தக கண்காட்சிக்கு போனதை சொன்னேன், அவன் என்னிடம் கேட்டான்.
“அப்படியா நல்லது, சரி எனக்கு ஒரு உதவி செய்வாயா டா”
“சொல்லு”
“மறுபடியும் போகும் பொழுது எனக்கு கம்பராமாயண பொருளுரையோடு வாங்கி வருகிறாயா, நான் காசு அனுப்புகிறேன்”
“கம்பராமாயணம் தானே, இருந்தால் நான் வாங்கி வருகிறேன். யார் எழுதியது வேண்டும்”
”(அவன் சிரித்துக் கொண்டு) டேய் கம்பராமாயணம் யார் எழுதி இருப்பா, கம்பர் தான்:lachen001::lachen001::lachen001:. அவர் எழுதியது தான் வேண்டும்” என்று சிரித்தான்.
“(நானும் சிரித்துக் கொண்டு) இல்லடா எந்த பதிப்பகம் வேண்டும் என்று கேட்டேன்” எப்படியோ சமாளித்து விட்டேன்.
எனக்கு எப்பொழுது புத்தக கண்காட்சிக்கு சென்றாலும் ஒரு பழக்கம், இரண்டு முறை செல்வேன். முதல் முறை சென்று எல்லா புத்தகங்களை ஒரு நோட்டம் விட்டு, பிடித்ததை குறித்து கொள்வேன். வீட்டுக்கு சென்று
குறித்து வைத்த புத்தகத்தின் விலை யெல்லாம் கணக்கு செய்து என்னுடைய பர்ஸை சுடாத புத்தகங்களை மட்டும் வரிசை படுத்தி இரண்டாவது முறை சென்று வாங்கி விடுவேன்.
விலை அதிகம் காரணமாக நான் வாங்க நினைத்து வாங்காத புத்தகங்கள்
ஜெயமோகனின் ஏழாம் உலகம்,
சுஜாதாவின் குறுநாவல்களின் தொகுப்பு,
நாடகங்களின் தொகுப்பு,
ரத்தம் ஒரே நிறம்.
பார்த்தசாரதியின் குருதிப்புனல்.
சாரு நிவேதாவின் 0 டிகிரி,
வாலியின் சுயசரிதை என்றென்றும் வாலி,
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு.
சரி வாங்கிய புத்தகங்கள்
வருச நாட்டு ஜமீன் அழிந்த கதை
மரபுப் பொறியியலில் மகத்தான முன்னேற்றம்
மலை மாளிகை (சுஜாதா)
சார்லி சாப்ளின் சுயசரிதை
பாதி ராஜ்யம் (சுஜாதா)
A-1 மூஸ்லிம் அசைவ சமையல்
கி.மு, கி.பி (மதன்)
மகான் ராமானுஜர்
6961 (சுஜாதா)
விரும்பி சொன்ன பொய்கள் (சுஜாதா)
பழங்குடிகளும் பழக்க வழக்கங்களும்
புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஒபாமா.
இது தான் நான் வாங்கி புத்தகங்களின் பட்டியல் 567 ரூபாய் ஆனது.
வணக்கம் நண்பர்களே
நேற்று சென்னையில் நடந்த 32 வது புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தேன், அதில் இருந்து சில துளிகள்.
நுழைவாயிலில் பெரிய பெரிய பேனர்கள் வைத்து இருந்தார்கள் பதிப்பகத்தினர், தங்களின் புதிய புத்தகங்களையும், படைப்பாளிகளின் படத்துடன் போட்டு இருந்தனர். 100 பதிப்பகத்துக்கு மேல் இருக்கும். வழிநெடுக்க வழக்கம் போல பட்டாணி, சுண்டல், காபி & டீ கடைகள் இருந்தது, டிக்கெட் கவுண்டர் (ticket counter) பக்கத்திலே, புதுசாக கேண்டீன் போட்டு இருந்தார்கள், போன முறையும் இருந்தது. ஆனால் இந்த முறை பீஸா, பர்கர், நூடல்ஸ், சூப், மற்றும் வெஜீடபில் பிரியாணி, தயிர் சாதம், பரொட்டா குருமா, செட் ஐடம்ஸ், ஐஸ் கீரிம்............. அப்பா விரல் வலிக்கிறது, புரிகிறது வேலை மெணக்கெட்டு இதை ஏன் முதலில் எழுதுகிறாய் என்கீறீர்களா???. சும்மா ஒரு ஜாலிக்கு. நான் சென்றவுடன் அதை தான் பார்த்தேன். விலையை கேட்டவுடன்
வெளியில் ஓடிவந்து விட்டேன், ஒரு வேர்கடலை பாக்கெட்டுடன்.
உள்ளே நுழைந்தேன் டிக்கெட் 5 ரூபாய், நடு மைதானத்தில் அரங்கம் அமைத்து இருந்தனர், கட்டை மற்றும் இரும்பு தகடுளின் உதவியுடன் கடைகளை பொட்டி பொட்டியாக பிரித்து இருந்தார்கள். காசுக்கு ஏற்றார் போல சிறிது, பெரிது, மிகப்பெரிது என்று பிரித்து இருந்தனர். வழக்கம் போல வரிசை இல்லாமல் நம்பர்கள் மாறி மாறி கடைகள் இருந்தது.
இந்த முறை போன முறையுடன் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்த்து புத்தகங்களின் விலைகளை அதிகப்படுத்தி தள்ளுபடி விலையில் கொடுத்தனர். சில கடைகள் போட வேண்டுமே என்று போட்டு இருந்தனர். உள்ளே சென்று பார்த்தால் இருந்தது கொஞ்ச புத்தகம், அதுவும் அந்த பதிப்பாளரே எழுதியது சொந்த கதைகள், சோக கதைகள். பதிப்பது இப்பொழுது குடிசை தொழிலாக மாறி வருகிறது, யார் வேண்டுமானால் பதிக்கலாம்.
மக்கள் டி.வி ஒரு கடை விரித்து ராமதாஸ் அவர்கள் எடிட்டராக இயங்கும் ஒரு புதிய தினசரி பத்திரிகையை இலவசமாக தந்துக் கொண்டு இருந்தனர், அதையே டெக்கன் க்ரோனிக்கலும் செய்தது.
சில பதிப்பகங்கள் வேறு வழியில்லாமல் மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். (படைப்பாளிகள் பஞ்சம் போல, நம் மன்ற படைப்பாளிகள் கவனிக்கவும்)
வழக்கம் போல கல்கியின் படைப்புகளை அடுக்கி வைத்து இருந்தனர், பொன்னியின் செல்வன், அலை ஒசை, பார்த்திபன் கனவு எல்லாம் புது புது அட்டையில் மின்னியது. அமரர் கல்கியின் சாதனை இது.
விசா பதிப்பகத்தில் வழக்கம் போல சுஜாதா ஐயாவிற்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி இருந்தனர். அவரின் பல புதிய புத்தகங்கள் இருந்தது. 35, 45 65, 70 என்று வித விதமான விலையில் அதற்கேற்ற காகித தரத்தில்.
தொடர்ந்து பல வருஷங்களாக அவர் புத்தக கண்காட்சிக்கு வருவார், எப்பொழுது வருவார் என்று தெரியாமல், அவரை பார்க்க ஏங்கி, சரியாக கணித்து அவர் வராத நாட்கள் சென்று எத்தனையோ முறை ஏமாந்து இருக்கிறேன் .....வழக்கம் போல இந்த முறையும் ஏமாந்தேன்.
உயிர்மை பதிப்பகம் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகம், காரணம் கேட்டால் சிரிப்பீர்கள். அதில் பதிக்கப்படும் புத்தகங்களின் முகப்பு அட்டையும், உள்ளே இருக்கும் காகிதத்தின் தரமும் என்னை மிகவும் கவர்ந்தது. விலை கொஞ்சம் அதிகம் தான், தமிழின் சில சிறந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் இங்கு கிடைக்கும். பார்த்தசாரதி, சுஜாதா, சல்மா, சாரு நிவேதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று பலர்.
நான் சென்று இருக்கும் பொழுது சாரு நிவேதாவும், உரிமையாளர் மனுஷ்யபுத்திரனும் இருந்தனர். (ரசிகர்களின் புத்தகங்களில் கையெழுத்திட)
இந்த முறை மனதை உறுத்திய விஷயம். அடியாள் என்று ஒரு புதிதாக ஒரு புத்தகம், அதன் அட்டையில் (ஒரு அரசியல் அடியாளின் உண்மை வாக்குமூலம்) என்று அவருடைய படத்துடன் இருந்தது, திருப்பி விலையை பார்த்தேன் 110 ரூபாய் என்று இருந்தது. அப்படியே வைத்து விட்டு பக்கத்தில் இருந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன், பிரித்தேன் பொருளுரையுடன் இருந்தது விலை 15 ரூபாய்.
கண்காட்சிக்கு உள்ளே பஜ்ஜி கடை, காபி & டீ கடை, பழங்கள் கடை என்று ரயில்வே ஸ்டேசன் போல இருந்தது. இதில் என்ன காமெடி என்றால் மக்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் பஜ்ஜிக்காக நின்றனர், அதில் நானும் ஒருவன் (ஹி ஹீ ஹீ).
திடீர் என்று நம்ம தலை மணியா அவர்களின் நியாபகம் வந்து அவருக்கு மெசேஜ் அடித்தேன்.
“என்ன தல எப்படி இருக்கீங்க, நான் புத்தக கண்காட்சியில் இருக்கிறேன், நீங்க இங்கு வந்தீர்களா?”
தலையின் பதில் “புத்தக கண்காட்சியா? அப்படினா?” என்று அனுப்பி இருந்தார்.
அப்புறம் அடுத்த நாள் அவரிடம் போனில் பேசும் பொழுது
“என்னை பார்த்து எப்படி அந்த கேள்வியை நீ கேட்டாய்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் என்ன அப்படி கேள்வி கேட்டு விட்டேன்
“காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் ......” அந்த கேள்வியா கேட்டேன்.
“புத்தக கண்காட்சிக்கு வரவில்லையானு கேட்டேன்”.
அதற்க்கு நம்ம தல “உன்ன யாருடா ஜாங்கிரி கொடுக்க சொன்னது” என்று நம்ம கவுண்ட மணி ஸ்டைலில் அதையே கேட்டுக் கொண்டு இருந்தார்.
அதே போல நம்ம ஆதவனிடம் பேசும் பொழுது நான் புத்தக கண்காட்சிக்கு போனதை சொன்னேன், அவன் என்னிடம் கேட்டான்.
“அப்படியா நல்லது, சரி எனக்கு ஒரு உதவி செய்வாயா டா”
“சொல்லு”
“மறுபடியும் போகும் பொழுது எனக்கு கம்பராமாயண பொருளுரையோடு வாங்கி வருகிறாயா, நான் காசு அனுப்புகிறேன்”
“கம்பராமாயணம் தானே, இருந்தால் நான் வாங்கி வருகிறேன். யார் எழுதியது வேண்டும்”
”(அவன் சிரித்துக் கொண்டு) டேய் கம்பராமாயணம் யார் எழுதி இருப்பா, கம்பர் தான்:lachen001::lachen001::lachen001:. அவர் எழுதியது தான் வேண்டும்” என்று சிரித்தான்.
“(நானும் சிரித்துக் கொண்டு) இல்லடா எந்த பதிப்பகம் வேண்டும் என்று கேட்டேன்” எப்படியோ சமாளித்து விட்டேன்.
எனக்கு எப்பொழுது புத்தக கண்காட்சிக்கு சென்றாலும் ஒரு பழக்கம், இரண்டு முறை செல்வேன். முதல் முறை சென்று எல்லா புத்தகங்களை ஒரு நோட்டம் விட்டு, பிடித்ததை குறித்து கொள்வேன். வீட்டுக்கு சென்று
குறித்து வைத்த புத்தகத்தின் விலை யெல்லாம் கணக்கு செய்து என்னுடைய பர்ஸை சுடாத புத்தகங்களை மட்டும் வரிசை படுத்தி இரண்டாவது முறை சென்று வாங்கி விடுவேன்.
விலை அதிகம் காரணமாக நான் வாங்க நினைத்து வாங்காத புத்தகங்கள்
ஜெயமோகனின் ஏழாம் உலகம்,
சுஜாதாவின் குறுநாவல்களின் தொகுப்பு,
நாடகங்களின் தொகுப்பு,
ரத்தம் ஒரே நிறம்.
பார்த்தசாரதியின் குருதிப்புனல்.
சாரு நிவேதாவின் 0 டிகிரி,
வாலியின் சுயசரிதை என்றென்றும் வாலி,
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு.
சரி வாங்கிய புத்தகங்கள்
வருச நாட்டு ஜமீன் அழிந்த கதை
மரபுப் பொறியியலில் மகத்தான முன்னேற்றம்
மலை மாளிகை (சுஜாதா)
சார்லி சாப்ளின் சுயசரிதை
பாதி ராஜ்யம் (சுஜாதா)
A-1 மூஸ்லிம் அசைவ சமையல்
கி.மு, கி.பி (மதன்)
மகான் ராமானுஜர்
6961 (சுஜாதா)
விரும்பி சொன்ன பொய்கள் (சுஜாதா)
பழங்குடிகளும் பழக்க வழக்கங்களும்
புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஒபாமா.
இது தான் நான் வாங்கி புத்தகங்களின் பட்டியல் 567 ரூபாய் ஆனது.