ரங்கராஜன்
16-01-2009, 05:00 AM
சென்னை சங்கமம்
வணக்கம் நண்பர்களே,
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நடேசன் பார்கில் சென்னை சங்கமம் விழா நடந்தது, என்னுடைய பெரியம்மாவின் வற்புறுத்தலின் பெறில் நானும் அந்த விழாவுக்கு
போனேன், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் வேண்டா வெறுப்பாக தான் போனேன். ஆனால் அங்கு போனவுடன் அனைவரையும் போல என்னையே நான் மறந்து விட்டேன். விழா நடந்த
அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கூட்டம் என்றால் கூட்டம் அவ்வளவு கூட்டம், இலவச டி.வி-க்கு நிற்பதை விட அதிகமாக நின்றார்கள்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009222.jpg
முதலில் நடேசன் பூங்காவிற்கு சென்றேன், மேடை போல அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருந்தார்கள், கிராமிய பாடல்கள் பாடினார்கள், கிராமிய வாத்தியங்கள் வாசித்தார்கள், கடைசியாக பொது மக்களின் விசில் சத்ததிற்கு நடுவில் மேடை ஏறினார் அந்த பாடகி, தன்னுடைய கவர்ச்சியான குரலில் பாடலை பாட ஆரம்பித்தார்,
“ஊரோர புளிய மரம்
உசிப்பி விட்ட சலசலக்கும்
நான் பொறந்த மதுரையிலே ”
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009208.jpg
என்று பாடினார் பருத்திவீரன் புகழ் சரோஜா பாட்டி. அதில் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார். கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. சுருதி மாறாமல், பிசக்காமல், சினிமாவில் கேட்பது போலவே பாடினார். பல இளசுகள் மேடை அருகே ஆடமே போட்டார்கள்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009226.jpg
வெளியே தப்பு இசைக் கருவியின் இசை என்னை ஈர்த்தது, ஒடிச் சென்று பார்த்தேன். ஆறு பேர் கொண்ட குழு தப்பை அடித்துக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள், அந்த குழுவின் நடுவில் ஒருவன் மட்டும் வித்தியாசமாக இருந்தான், ஏனென்றால் கிராமிய கலைஞர்கள் அனைவரும் தமிழின் நிறத்தில் கறுப்பாக இருந்தனர், நடுவில் இருந்தவன் மட்டும் வெள்ளையாக இருந்தான். அப்புறம் தான் ஒரு அதிர்ச்சி
அவன் வெளிநாட்டவன் என்று தெரிந்தது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி அவன் ஆண் அல்ல பெண். அவள் அவ்வளவு அழகாக சுருதியுடன் தப்பை அடித்துக் கொண்டு ஜதி மாற்றாமல் ஆடினாள். மறுபடியும்
ஒரு அதிர்ச்சி அவள் ஆட்ட கலைஞர் அல்ல, சுற்றுலா பயணி ஆட்டம் முடிந்ததும் தப்பை கொடுத்து விட்டு தன்னுடைய ஹாண்டி- கேமை எடுத்துக் கொண்டு படம் பிடிக்க சென்று விட்டாள். எந்த கலையையும்
கற்க ஆர்வம் ஒன்று போதும்.
பல விதமான ஆட்டங்களை அன்று கண்டு ரசித்தேன், ஆட்டங்களின் பெயர்கள் சரியாக தெரியவில்லை
1. கரகாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009236.jpg
2. பொய்க்கால் குதிரை ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009244.jpg
3. சாமியாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009220.jpg
4. தேவராட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009230.jpg
5. குறவன் குறத்தி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009210.jpg
6. தப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009200.jpg
7. தப்பாட்டத்திலே பல வகையான ஆட்டங்கள்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009241.jpg
8. பஞ்சாபி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009218.jpg
9. மலையாளர்களின் வாத்தியம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009199.jpg
இவை இல்லாமல் பல கலைகளை செய்து காட்டினார்கள்.
1. களரி பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
2. யோகா பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009225.jpg
3. கத்தி சண்டை
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
4.சிலப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009204.jpg
பஞ்சாபி ஆட்ட கலைஞர்கள் வந்தவுடன் மக்கள் அவர்களை சூழ ஆரம்பித்தார்கள், பஞ்சாபி பெண்கள் மிகவும் அழகாக சிகப்பு நிறத்தில் இருந்தனர். மெல்லிய குரலில் பாடி நடனம் ஆடினார்கள், அடிக்கடி சிரித்துக் கொண்டார்கள், வெட்கப்பட்டார்கள், அவர்களுக்குள்ளே பாடிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தீடீர் என்று பக்கத்தில் நம்முடைய இசை சத்தம் கேட்டது
டண்ட நக்கடி,
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009216.jpg
நம்முடைய தப்பாட்டம் தான், எல்லாரும் அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தோம். நம்ப மாட்டீர்கள் அரை மணி நேரமாக தொடர்ந்து ஆடி அசத்தி விட்டனர், அவர்களின் ஆட்டத்தில் மயங்கி வேடிக்கை பார்த்த ஒருவர் ஆட ஆரம்பித்தார், தப்பாட்டம் முடியும் பொழுது சுமார் 300 பொது மக்கள் ஆடிக் கொண்டு இருந்தனர்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/2_13012009241.jpg
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009242.jpg
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009243.jpg
முடித்தவுடன் அங்கு இருந்த ஆயிரம் பேரும் ஒரு சேர கையை தட்டினார்கள், அந்த கைதட்டல் சத்தத்தை கேட்கும் பொழுது எனக்கே ஒரு விதமான மயக்க நிலை வந்து விட்டது, எனக்கே அப்படி சந்தோஷமாக இருந்தது, அந்த பாராட்டை பெற்ற கலைஞர்களுக்கு எப்படி இருந்து இருக்கும், உண்மையில் பாராட்டி கை தட்டும் சத்தத்தை கேட்பது போல ஒரு போதை இருக்கவே முடியாது. அந்த கலைஞர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம், சிரித்துக் கொண்டே எங்களை பார்த்துக் கொண்டே சென்றார்கள், ஆனந்த கண்ணீருடன்.
எல்லா ஐ.டி அப்பாக்களும் கிராமத்து அப்பாக்களாக மாறி இருந்தனர், தங்களின் பிள்ளைகளை தோளின் மீது அமர்த்தி சுமந்துக் கொண்டு சென்றனர். நடு ரோட்டில் உக்கார்ந்து உணவு சாப்பிட்டனர், கூட்டத்தில் கூச்சம் இல்லாமல்
ஆடினார்கள். அப்புறம் அங்கு இருந்த உணவு கடைகள்,
விருதுநகர் பிரியாணி
கொத்து பரோட்டா
கொத்து கறி
திண்டுக்கல் பிரியாணி
செட்டிநாட்டு கறி குழம்பு
கரண்டி முட்டை
சுட்ட கறி
கறி வருவல்
எல்லாம் கிராமத்து உணவுகள், சூப்பராக இருந்தது, ஆனால் உணவு பார்ப்பதற்கு அழகாக இல்லை, அப்பொழுது தான் என்னுடைய ஓட்டல் நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.
“டேய் எப்பவுமே ருசியா இருக்கும் உணவு பார்க்க நல்லா இருக்காதுடா”
அந்த தைரியத்தில் வாங்கினேன், உண்மையில் ரொம்ப அருமையாக இருந்தது, என்ன விலை தான் ரொம்ப ஓவர், ஒரு கரண்டி பிரியாணியின் விலை 80 ரூபாய்.
இந்த மாதிரி ஒரு விழாவை ஏற்பாடு செய்த கனிமொழி அவர்களுக்கும், அமைச்சர் இறையண்பு (சுற்றுலாதுறை அமைச்சர்) அவர்களுக்கு வாழ்த்துகளை தாராலமாக சொல்லலாம். இந்த சென்னை சங்கமத்தில் நோக்கம் என்ன? என்று ஒரு சின்ன பையனின் கேள்வி எனக்கு புரியவைத்தது.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009227.jpg
பால் நிறத்தில் இருந்த ஒரு அப்பா அதே நிறத்தில் இருக்கும் தன்னுடைய பையனை தோளில் சுமந்துக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது சிறுவன் கேட்டான்
”டாடி என்ன டாடி ஒரே கூட்டமாக எல்லாரும் டான்ஸ் ஆடறாங்க”
“இது தான் திருவிழா கண்ணா, கிராமத்தில் எல்லாம் இப்படி தான் திருவிழா நடக்கும்”
“கிராமம்-னா”
“.......”
இப்படிப்பட்ட விழாக்கள் நடத்துவது நல்லது தான், இல்லையென்றால் பின் வரும் சமுதாயம் நம்முடைய கலாச்சாரத்தை சார்ந்த விஷயங்களை எல்லாம் wikipedia-விலும், google-லையும் தான் அறிந்துக் கொள்ள முடியும்.
நன்றி.
வணக்கம் நண்பர்களே,
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நடேசன் பார்கில் சென்னை சங்கமம் விழா நடந்தது, என்னுடைய பெரியம்மாவின் வற்புறுத்தலின் பெறில் நானும் அந்த விழாவுக்கு
போனேன், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் வேண்டா வெறுப்பாக தான் போனேன். ஆனால் அங்கு போனவுடன் அனைவரையும் போல என்னையே நான் மறந்து விட்டேன். விழா நடந்த
அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கூட்டம் என்றால் கூட்டம் அவ்வளவு கூட்டம், இலவச டி.வி-க்கு நிற்பதை விட அதிகமாக நின்றார்கள்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009222.jpg
முதலில் நடேசன் பூங்காவிற்கு சென்றேன், மேடை போல அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருந்தார்கள், கிராமிய பாடல்கள் பாடினார்கள், கிராமிய வாத்தியங்கள் வாசித்தார்கள், கடைசியாக பொது மக்களின் விசில் சத்ததிற்கு நடுவில் மேடை ஏறினார் அந்த பாடகி, தன்னுடைய கவர்ச்சியான குரலில் பாடலை பாட ஆரம்பித்தார்,
“ஊரோர புளிய மரம்
உசிப்பி விட்ட சலசலக்கும்
நான் பொறந்த மதுரையிலே ”
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009208.jpg
என்று பாடினார் பருத்திவீரன் புகழ் சரோஜா பாட்டி. அதில் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார். கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. சுருதி மாறாமல், பிசக்காமல், சினிமாவில் கேட்பது போலவே பாடினார். பல இளசுகள் மேடை அருகே ஆடமே போட்டார்கள்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009226.jpg
வெளியே தப்பு இசைக் கருவியின் இசை என்னை ஈர்த்தது, ஒடிச் சென்று பார்த்தேன். ஆறு பேர் கொண்ட குழு தப்பை அடித்துக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள், அந்த குழுவின் நடுவில் ஒருவன் மட்டும் வித்தியாசமாக இருந்தான், ஏனென்றால் கிராமிய கலைஞர்கள் அனைவரும் தமிழின் நிறத்தில் கறுப்பாக இருந்தனர், நடுவில் இருந்தவன் மட்டும் வெள்ளையாக இருந்தான். அப்புறம் தான் ஒரு அதிர்ச்சி
அவன் வெளிநாட்டவன் என்று தெரிந்தது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி அவன் ஆண் அல்ல பெண். அவள் அவ்வளவு அழகாக சுருதியுடன் தப்பை அடித்துக் கொண்டு ஜதி மாற்றாமல் ஆடினாள். மறுபடியும்
ஒரு அதிர்ச்சி அவள் ஆட்ட கலைஞர் அல்ல, சுற்றுலா பயணி ஆட்டம் முடிந்ததும் தப்பை கொடுத்து விட்டு தன்னுடைய ஹாண்டி- கேமை எடுத்துக் கொண்டு படம் பிடிக்க சென்று விட்டாள். எந்த கலையையும்
கற்க ஆர்வம் ஒன்று போதும்.
பல விதமான ஆட்டங்களை அன்று கண்டு ரசித்தேன், ஆட்டங்களின் பெயர்கள் சரியாக தெரியவில்லை
1. கரகாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009236.jpg
2. பொய்க்கால் குதிரை ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009244.jpg
3. சாமியாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009220.jpg
4. தேவராட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009230.jpg
5. குறவன் குறத்தி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009210.jpg
6. தப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009200.jpg
7. தப்பாட்டத்திலே பல வகையான ஆட்டங்கள்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009241.jpg
8. பஞ்சாபி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009218.jpg
9. மலையாளர்களின் வாத்தியம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009199.jpg
இவை இல்லாமல் பல கலைகளை செய்து காட்டினார்கள்.
1. களரி பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
2. யோகா பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009225.jpg
3. கத்தி சண்டை
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
4.சிலப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009204.jpg
பஞ்சாபி ஆட்ட கலைஞர்கள் வந்தவுடன் மக்கள் அவர்களை சூழ ஆரம்பித்தார்கள், பஞ்சாபி பெண்கள் மிகவும் அழகாக சிகப்பு நிறத்தில் இருந்தனர். மெல்லிய குரலில் பாடி நடனம் ஆடினார்கள், அடிக்கடி சிரித்துக் கொண்டார்கள், வெட்கப்பட்டார்கள், அவர்களுக்குள்ளே பாடிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தீடீர் என்று பக்கத்தில் நம்முடைய இசை சத்தம் கேட்டது
டண்ட நக்கடி,
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009216.jpg
நம்முடைய தப்பாட்டம் தான், எல்லாரும் அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தோம். நம்ப மாட்டீர்கள் அரை மணி நேரமாக தொடர்ந்து ஆடி அசத்தி விட்டனர், அவர்களின் ஆட்டத்தில் மயங்கி வேடிக்கை பார்த்த ஒருவர் ஆட ஆரம்பித்தார், தப்பாட்டம் முடியும் பொழுது சுமார் 300 பொது மக்கள் ஆடிக் கொண்டு இருந்தனர்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/2_13012009241.jpg
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009242.jpg
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009243.jpg
முடித்தவுடன் அங்கு இருந்த ஆயிரம் பேரும் ஒரு சேர கையை தட்டினார்கள், அந்த கைதட்டல் சத்தத்தை கேட்கும் பொழுது எனக்கே ஒரு விதமான மயக்க நிலை வந்து விட்டது, எனக்கே அப்படி சந்தோஷமாக இருந்தது, அந்த பாராட்டை பெற்ற கலைஞர்களுக்கு எப்படி இருந்து இருக்கும், உண்மையில் பாராட்டி கை தட்டும் சத்தத்தை கேட்பது போல ஒரு போதை இருக்கவே முடியாது. அந்த கலைஞர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம், சிரித்துக் கொண்டே எங்களை பார்த்துக் கொண்டே சென்றார்கள், ஆனந்த கண்ணீருடன்.
எல்லா ஐ.டி அப்பாக்களும் கிராமத்து அப்பாக்களாக மாறி இருந்தனர், தங்களின் பிள்ளைகளை தோளின் மீது அமர்த்தி சுமந்துக் கொண்டு சென்றனர். நடு ரோட்டில் உக்கார்ந்து உணவு சாப்பிட்டனர், கூட்டத்தில் கூச்சம் இல்லாமல்
ஆடினார்கள். அப்புறம் அங்கு இருந்த உணவு கடைகள்,
விருதுநகர் பிரியாணி
கொத்து பரோட்டா
கொத்து கறி
திண்டுக்கல் பிரியாணி
செட்டிநாட்டு கறி குழம்பு
கரண்டி முட்டை
சுட்ட கறி
கறி வருவல்
எல்லாம் கிராமத்து உணவுகள், சூப்பராக இருந்தது, ஆனால் உணவு பார்ப்பதற்கு அழகாக இல்லை, அப்பொழுது தான் என்னுடைய ஓட்டல் நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.
“டேய் எப்பவுமே ருசியா இருக்கும் உணவு பார்க்க நல்லா இருக்காதுடா”
அந்த தைரியத்தில் வாங்கினேன், உண்மையில் ரொம்ப அருமையாக இருந்தது, என்ன விலை தான் ரொம்ப ஓவர், ஒரு கரண்டி பிரியாணியின் விலை 80 ரூபாய்.
இந்த மாதிரி ஒரு விழாவை ஏற்பாடு செய்த கனிமொழி அவர்களுக்கும், அமைச்சர் இறையண்பு (சுற்றுலாதுறை அமைச்சர்) அவர்களுக்கு வாழ்த்துகளை தாராலமாக சொல்லலாம். இந்த சென்னை சங்கமத்தில் நோக்கம் என்ன? என்று ஒரு சின்ன பையனின் கேள்வி எனக்கு புரியவைத்தது.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009227.jpg
பால் நிறத்தில் இருந்த ஒரு அப்பா அதே நிறத்தில் இருக்கும் தன்னுடைய பையனை தோளில் சுமந்துக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது சிறுவன் கேட்டான்
”டாடி என்ன டாடி ஒரே கூட்டமாக எல்லாரும் டான்ஸ் ஆடறாங்க”
“இது தான் திருவிழா கண்ணா, கிராமத்தில் எல்லாம் இப்படி தான் திருவிழா நடக்கும்”
“கிராமம்-னா”
“.......”
இப்படிப்பட்ட விழாக்கள் நடத்துவது நல்லது தான், இல்லையென்றால் பின் வரும் சமுதாயம் நம்முடைய கலாச்சாரத்தை சார்ந்த விஷயங்களை எல்லாம் wikipedia-விலும், google-லையும் தான் அறிந்துக் கொள்ள முடியும்.
நன்றி.