Log in

View Full Version : மனப்பெண்ணாள் ஆண்டவனின் முறைப்பெண்!



நாகரா
13-01-2009, 12:39 PM
மனமே நபியாய் நிற்பதை விட்டு
மனத்தை அழிக்க முற்படும் பித்தில்
மனமே ஆணவம் என்பாயோ சொல்லு!
மனத்தை அழிப்பதோ ஆண்டவன் எண்ணம்!
ஆணவமும் அழிக்காது பொறுக்குமத் தெய்வம்
காணுங்கணம் அழிந்திடுமே ஆணவமும் திண்ணம்!
மன இதத்தில் நிற்பதன்றோ மனிதம்!
மனம் வதைத்துக் கொல்வதுவோ உசிதம்!
மனப்பெண்ணாள் ஆண்டவனின் முறைப்பெண்!
மனப்பெண்ணை மணங்கொள்ள முறையின்றி
இழுக்கின்றான் ஆணவமாம் பேயன்!அவன்
இழுப்பதாலே வாடுகிறாள் பார்மனப்பெண்!
பேயான ஆணவத்தை அழிக்கும்வகை
தேராமல் மனமழிக்கநீ முனைவதேனோ!
குருநபியின் ஞானவாளால் வெட்டவனை!(இதுவே "ஜெஹாத்" என்னும் புனிதப் போரின் மெய்ப்பொருள்)
உருவொளிர மனப்பெண்ணும் பரிமாற
வருவானே ஆண்டவனும் மண(ன)ங்கொள்ள!
மனப்பெண்ணும் ஆண்டவனும் ஒன்றுகூட
நினைப்பெங்கும் ஆரமுதம் ஊற்றெடுத்து
மெய்யெங்கும் பாய்ந்திடுமே! ஜோதியுருவில்
உய்ந்தேநீ சேர்ந்திடுவாய் மாயாநிலை!
பொய்க்குருமார் பேச்சுக்கே நீமயங்கி
நல்மனத்தை அழிப்பதற்கே முனைந்திடாதே!
மெய்க்குருநின் உள்ளுள்ளே செப்பும்மொழி
உற்றுக்கேள்! என்வாய்மை விளங்கிடுமே!