PDA

View Full Version : கலியுகம்...!



mathuran
12-01-2009, 09:22 AM
பொத்திவைத்த இதயத்தினை
காற்றோடு பறக்கவிட்டு
கைகொட்டி சிரிக்கின்றேன்
நேற்றோடு முறிந்த சொந்தம்
மீண்டுவந்த சந்தோஷத்தில்...

தேற்றங்கள் பலபடித்து
கணக்குப்போட்டு பழகியதால்
வாழ்க்கைக் கணக்கை சரியாக
கணிப்பிடத்தான் மறந்திட்டேன்...
ஊற்றெடுக்கும் அன்பதனை
பார்போற்ற சொல்லியதால்
மார்பெல்லாம் குளிருதடி...

யார்யாரோ வந்துபோன வாழ்வதனை
வேரறுத்து வீசிவிட்டேன்...
உண்மை அன்பை
உள்ளங்கையின் உணர்ந்திடவே
பெண்மை உன்னை
தொலைத்ததனை நினைக்கின்றேன்...
நீர்க்குமிழி வாழ்விதனில்
குழிபறித்த பாவி நானல்லவோ...?

வாழ்வென்றால் வசந்தமென்பர்
உணரத்தான் முடிவதில்லை...
துடிக்கின்ற உணர்வுகளை
அடக்கித்தான் நானிருக்கேன்,
தூற்றிய உள்ளங்கள்
எமைப்போற்றும் காலமதை
கலியுகத்தில் தேடுகிறேன்...

ஆற்றல்கள் பல கண்டாய்
தேற்றுதல் வார்த்தை வடிப்பாய்,
துடிக்கின்ற இதயத்தை
வெடிக்காமல் பார்த்திடுவாய்...
படிக்கின்ற காலத்தில்
பருவத்தை உருக்கியதால்
வெறுக்கின்ற வாழ்வதனை
தொலைத்துவிட்டேன் சீக்கிரமே...
நிம்மதியை மீட்டுத்தர
முழுமதியாய் நீயுதித்தாய்...
அவள் நினைவோடு நிஜமாக
காலமெல்லாம் சேர்ந்துவர
வரம்தாராய் கலியுகமே...

இளசு
17-01-2009, 10:38 PM
இவர்தான் இனி என ஒரு பொறி பிறக்குமே
அக்கணம் - ஒரு யுகத்துக்குச் சமம்!

கவிதைக்கு வாழ்த்துகள் மதுரன்!

செல்வா
19-02-2009, 10:33 PM
சபாஷ்
கடவுளிடம் வரம் கேட்கும் காலம் போய்
காலத்திடம் வரம் கேட்கும் காலம் வந்தாச்சு
கடவுள் காலத்தைக் கடந்தவர் என்ற நம்பிக்கைகள் உடைய
கலியுகத்தில் கடவுளை கைவிட்டு
காலத்திடம் சரண்புகுந்து விட்டார் நம் கவிஞர்...
என்னைக் கேட்டால் கடவுளையும் விடுத்து
காலத்தையும் விடுத்து
காதலிடமும்
காதலியிடமும்
வரத்தைக் கேட்கலாம்
வாழ்த்துக்கள் மதுரன்.