ஆதவா
10-01-2009, 06:57 AM
மிருதுளாவுக்கும், பிரதாப்புக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்த இரண்டு வருட வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாலும், இன்று நடந்ததைப் போன்று பெரிய அளவில் நடந்ததில்லை... காலையிலேயே பிரதாப் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். மிருதுளாவிடம் பேசவில்லை.. அதன் எதிரொலி, பிரதாப்பின் அலுவலகத்திலேயே பணிபுரியும் மிருதுளா, மதிய இடைவெளியில் பிரச்சனை கிளப்ப,... அலுவலகம் முழுக்க வெடித்தது அவர்களுக்கிடையேயான பிளவு..
மாலை நான்கு.
மிருதுளா மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு இடதுபுறமுள்ள அறைக்குள் நுழைந்தான்... உடன் மிருதுளாவும் வந்தாள்... காலையிலிருந்து பிரச்சனைகள் இருவரையும் அழுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த கோபத்தை வளர்த்தியிருந்தார்கள்.. பிரதாப்பைக் காணும்போதெல்லாம் மிருதுளாவுக்கும், மிருதுளாவைக் காணும்போதெல்லாம் பிரதாப்புக்கும் கன்னத்தில் அறைவிட்டு கோபம் தீர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றும்.. இருவரும் கோபங்கள் கொப்பளிக்க, அந்த அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்..
பிரதாப் தன் கையில் ஹாக்கி தடியை வைத்திருந்தான், மிருதுளா பெரிய அளவிலான வலிமையான தோசைக் கரண்டியை வைத்திருந்தாள்.. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள்.. பிரதாப்பின் ஆவேசத்தை அன்று கண்ட மிருதுளா, தானும் சளைத்தவளல்ல என்று தோசைக்கரண்டியாலே அவனை திருப்பி எடுத்தாள்... பெரும்பாலும் இவ்விரு ஆயுதங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தமையால் நல்லவேளையாக இருவருக்கும் அவ்வளவாக பலத்த காயமில்லை... ஆனால் காயம் பார்க்காமல் விடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ, கையில் இருந்த பொருளையெல்லாம் வீசினாள் மிருதுளா... அதனன ஹாக்கி தடியாலேயே தடுத்தான்... ஏதோ கிரிக்கெட் ஆடுவது போன்று சூழல் இருந்தது... அச்சமயத்தில் பிரதாப்பின் நெற்றியில், கோகோ டின் தெறித்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது...
மிருதுளாவுக்கு இன்னமும் வெறி அடங்கவில்லை. மெத்தைக்கு அடியில் சொறுகிவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்தாள்.. ஓங்கி நடு மண்டையில் நச்சென்று அடித்தாள். சற்று பலத்த அடிதான் என்றாலும் சற்று சுதாகரித்துக் கொண்ட பிரதாப், அருகேயிருந்த கிதார் ஒன்றை எடுத்து திருப்பி அடித்தான்..
கணவன் மனைவி இருவரும் ஆக்ரோஷத்துடனும் பலத்த சப்தத்துடனும் ரவுடிகள் சண்டையிடுவதைப் போன்று சண்டையிட்டு, உடம்பெல்லாம் காயம்பட்டு இருப்பதைக் கண்டால் எவ்வளவு பெரிய குற்றவாளிக்கும் சற்றேனும் உதறல் எடுத்திருக்கும்..
கொஞ்சம் நேரத்தில் சோர்வுற்ற பிரதாப் அடுத்தடுத்து மிருதுளா அடித்த அடியால் பலத்த காயமுற்றான்.. அவனால் இனி ஒரு அடியும் எடுத்து வைக்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான்.. நிலைகுலைந்து அருகேயிருந்த மெத்தையில் மயங்கி விழுந்தான்... மெத்தையில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது... மிருதுளா இதனைக் கண்டதும் கையில் இருந்த மட்டையை கீழே போட்டுவிட்டு ஓடிவந்தாள்.. அவளுக்கு இப்பொழுது பதற்றம்..
கணவன் மனைவி சண்டைகள் எல்லாம் வாயோடு முடிந்துவிடலாம்.. ஆனால் இப்படி கொலைப்பாதைக்குத் தள்ளப்படும் என்று இருவருமே நினைக்கவில்லை..
தவறுகள் உணரப்படும் வேளையில் மனிதர்கள் காயப்பட்டிருப்பார்கள்.. இங்கேயும் அப்படித்தான்.. அவசரம் என்பது வாழ்க்கைக்கு உதவாது.. நிதானமான வேகமும், கவனமான முடிவும்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும்... இதனை மிருதுளாவும், பிரதாப்பும் நன்கு உணர்ந்திருப்பார்கள்..
பதற்றத்தோடு ஓடிவந்த மிருதுளா, தன் சேலைத் தலைப்பால் பிரதாப்பின் தலையைச் சுற்றி கட்டு கட்டினாள். இரத்தம் ஓரளவு வடிவது நின்றது. பலத்த காயத்தோடு மரணப்படுக்கையில் வீழ்ந்த பிரதாப்பை தன் மடியில் கிடத்தி, " அய்யோ, பிரதூ!! சாரிடா..... இப்படி ஆகும்னு நினைச்சுப்பார்க்கலைடா... எழுந்திரு... எழுந்திரு...." என்று கதறி அழுதாள்.. " உனக்கும் நிறைய காயம் பட்டிருச்சா டார்லிங் " என்று அந்த நிலையிலும் பரிதாபப்பட்டான்.... இருவரது அழுகையும் கண்ணீரும் அந்த அறைமுழுவதும் எதிரொலித்தது...
சற்றுநேரத்தில் பிரதாப்பின் கைக்கடிகாரம் சப்தத்துடன் ஒளித்தது... நேரம் : மாலை 5.30, ஜனவரி 25, 2133 என்றது... மிருதுளாவும், பிரதாப்பும், அந்த விர்சுவல் மெஷினை விட்டு வெளியே வந்தார்கள்... இருவரது முகத்திலும் காதல் ரேகை புன்னகை வழியே வழிந்தோடியது..
(நீண்டநாட்கள் கழித்து மன்றம் திரும்பிய சிவா.ஜி அண்ணாவுக்கு இக்கதை சமர்ப்பணம்..)
மாலை நான்கு.
மிருதுளா மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு இடதுபுறமுள்ள அறைக்குள் நுழைந்தான்... உடன் மிருதுளாவும் வந்தாள்... காலையிலிருந்து பிரச்சனைகள் இருவரையும் அழுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த கோபத்தை வளர்த்தியிருந்தார்கள்.. பிரதாப்பைக் காணும்போதெல்லாம் மிருதுளாவுக்கும், மிருதுளாவைக் காணும்போதெல்லாம் பிரதாப்புக்கும் கன்னத்தில் அறைவிட்டு கோபம் தீர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றும்.. இருவரும் கோபங்கள் கொப்பளிக்க, அந்த அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்..
பிரதாப் தன் கையில் ஹாக்கி தடியை வைத்திருந்தான், மிருதுளா பெரிய அளவிலான வலிமையான தோசைக் கரண்டியை வைத்திருந்தாள்.. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள்.. பிரதாப்பின் ஆவேசத்தை அன்று கண்ட மிருதுளா, தானும் சளைத்தவளல்ல என்று தோசைக்கரண்டியாலே அவனை திருப்பி எடுத்தாள்... பெரும்பாலும் இவ்விரு ஆயுதங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தமையால் நல்லவேளையாக இருவருக்கும் அவ்வளவாக பலத்த காயமில்லை... ஆனால் காயம் பார்க்காமல் விடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ, கையில் இருந்த பொருளையெல்லாம் வீசினாள் மிருதுளா... அதனன ஹாக்கி தடியாலேயே தடுத்தான்... ஏதோ கிரிக்கெட் ஆடுவது போன்று சூழல் இருந்தது... அச்சமயத்தில் பிரதாப்பின் நெற்றியில், கோகோ டின் தெறித்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது...
மிருதுளாவுக்கு இன்னமும் வெறி அடங்கவில்லை. மெத்தைக்கு அடியில் சொறுகிவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்தாள்.. ஓங்கி நடு மண்டையில் நச்சென்று அடித்தாள். சற்று பலத்த அடிதான் என்றாலும் சற்று சுதாகரித்துக் கொண்ட பிரதாப், அருகேயிருந்த கிதார் ஒன்றை எடுத்து திருப்பி அடித்தான்..
கணவன் மனைவி இருவரும் ஆக்ரோஷத்துடனும் பலத்த சப்தத்துடனும் ரவுடிகள் சண்டையிடுவதைப் போன்று சண்டையிட்டு, உடம்பெல்லாம் காயம்பட்டு இருப்பதைக் கண்டால் எவ்வளவு பெரிய குற்றவாளிக்கும் சற்றேனும் உதறல் எடுத்திருக்கும்..
கொஞ்சம் நேரத்தில் சோர்வுற்ற பிரதாப் அடுத்தடுத்து மிருதுளா அடித்த அடியால் பலத்த காயமுற்றான்.. அவனால் இனி ஒரு அடியும் எடுத்து வைக்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான்.. நிலைகுலைந்து அருகேயிருந்த மெத்தையில் மயங்கி விழுந்தான்... மெத்தையில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது... மிருதுளா இதனைக் கண்டதும் கையில் இருந்த மட்டையை கீழே போட்டுவிட்டு ஓடிவந்தாள்.. அவளுக்கு இப்பொழுது பதற்றம்..
கணவன் மனைவி சண்டைகள் எல்லாம் வாயோடு முடிந்துவிடலாம்.. ஆனால் இப்படி கொலைப்பாதைக்குத் தள்ளப்படும் என்று இருவருமே நினைக்கவில்லை..
தவறுகள் உணரப்படும் வேளையில் மனிதர்கள் காயப்பட்டிருப்பார்கள்.. இங்கேயும் அப்படித்தான்.. அவசரம் என்பது வாழ்க்கைக்கு உதவாது.. நிதானமான வேகமும், கவனமான முடிவும்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும்... இதனை மிருதுளாவும், பிரதாப்பும் நன்கு உணர்ந்திருப்பார்கள்..
பதற்றத்தோடு ஓடிவந்த மிருதுளா, தன் சேலைத் தலைப்பால் பிரதாப்பின் தலையைச் சுற்றி கட்டு கட்டினாள். இரத்தம் ஓரளவு வடிவது நின்றது. பலத்த காயத்தோடு மரணப்படுக்கையில் வீழ்ந்த பிரதாப்பை தன் மடியில் கிடத்தி, " அய்யோ, பிரதூ!! சாரிடா..... இப்படி ஆகும்னு நினைச்சுப்பார்க்கலைடா... எழுந்திரு... எழுந்திரு...." என்று கதறி அழுதாள்.. " உனக்கும் நிறைய காயம் பட்டிருச்சா டார்லிங் " என்று அந்த நிலையிலும் பரிதாபப்பட்டான்.... இருவரது அழுகையும் கண்ணீரும் அந்த அறைமுழுவதும் எதிரொலித்தது...
சற்றுநேரத்தில் பிரதாப்பின் கைக்கடிகாரம் சப்தத்துடன் ஒளித்தது... நேரம் : மாலை 5.30, ஜனவரி 25, 2133 என்றது... மிருதுளாவும், பிரதாப்பும், அந்த விர்சுவல் மெஷினை விட்டு வெளியே வந்தார்கள்... இருவரது முகத்திலும் காதல் ரேகை புன்னகை வழியே வழிந்தோடியது..
(நீண்டநாட்கள் கழித்து மன்றம் திரும்பிய சிவா.ஜி அண்ணாவுக்கு இக்கதை சமர்ப்பணம்..)