சுகந்தப்ரீதன்
10-01-2009, 05:11 AM
அன்றைக்கு விடிந்ததா இல்லையா என்றுக்கூட எனக்கு தெரியாது. திடீரென்னு வயிறு வலிப்பதுபோல் இருந்ததால் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன். எழுந்த பிறகுதான் முதல்நாள் இரவு அம்மாவிடம் பள்ளிக்கு கட்ட பணம் கேட்டது, அம்மா தற்போது தன்னிடம் இல்லை என்றது, அதனால் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் படுத்துக்கொண்டது இப்படி ஒவ்வொன்றாக என்னோட நினைவுக்கு வந்தது. நான் சாப்பிடாமல் படுத்த பொழுதே அம்மா என்னிடம் கெஞ்சி கேட்டாள், "ராத்தியில வெறும் வயித்தோட படுக்கக்கூடாதுப்பா, சாப்பிடு படுப்பான்னு". நாந்தான் பிடிவாதமா அவளோட சொல்லை கேட்க மறுத்துவிட்டேன்.
'பசி வந்தா பத்தும் பறந்துடும்'ன்னு சொல்லுவாங்க. அதில் என்னோட பிடிவாதம் மட்டும் பிடிப்போட நிற்க்குமா..? வந்தது வயிற்றுவலி அல்ல வயிற்றுப்பசி என்றறிந்ததுமே எனக்குள்ளிருந்த பிடிவாதம் எங்கே சென்றதென்று தெரியவில்லை. எழுந்ததும் பல்துலக்கும் நல்ல பழக்கம்கூட அப்போதிருந்த பசியில் என்னிடம் இல்லாமல் போயிருந்தது.
நேராக எழுந்துசென்று மின்விளக்கைப் போட்டுவிட்டு, அடுப்படியில் இருந்த சோற்றுப்பானையை திறந்தால் ரெண்டுபேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு அப்படியே தண்ணியில் ஊறிக்கொண்டிருந்தது. 'சோத்துப்பானையை சுத்தமா தொடைக்கக்கூடாது'ன்னு சொல்லி அம்மா கொஞ்சம் சாதத்தை எப்பவும் குண்டுல மிச்சம் வைத்திருப்பது வழக்கம். ஆனால் முதல்நாள் நான் சாப்பிடவில்லை என்றதும் அம்மாவும் சாப்பிடவில்லை போலிருக்கு. நானும் பலமுறை அம்மாவிடம் பாடிகாட்டி இருக்கேன் "தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறடா"-ங்கிற கண்ணத்தாசனோட பாட்டை..!! இருந்தும் அம்மாவுடன் இருந்தவரைக்கும் நான் சாப்பிடவில்லை என்றறிந்த பிறகு அவள் சாப்பிட்டதாக நான் அறிந்ததில்லை.
எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, நான், எங்க அண்ணன் என்று மொத்தம் நால்வர் மட்டும்தான். அதிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணன் எதற்காகவோ வீட்டில் கோபித்துக்கொண்டு, பதிமூன்று வயதில் சென்னைக்கு சம்பாதிக்க சென்றபிறகு எங்கள் குடும்பம் இன்னும் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அண்ணன் வருடத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு மட்டும்தான் ஊருக்கு வருவான். ஒருவாரம்கூட என்னுடன் ஒன்றாய் இருக்காமல் உடனே திரும்பி சென்றுவிடுவான்.
ஓவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும், "என்னாலதான் படிக்க முடியாம போயிடுச்சி, நீயாவது நல்லாப்படிச்சிக்கடா தம்பி"ன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். எதற்காக அவன் அப்படி சொல்கிறானென்று அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் சொல்லைத் தட்டக்கூடாதென்று மட்டும் தோணும்.
இப்படி ஏதேதோ நினைத்தப்படி, தண்ணியில கிடந்த சாதத்தை தட்டில் எடுத்துப்போட்டு சுண்டிப்போன குழம்பை ஊற்றி சாப்பிடும்போது சத்தம்க்கேட்டு அம்மாவும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டாள். நான் பசியோட சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்டதும் அவளோட கண்கள் கலங்கிருச்சி. ஆனாலும் எங்கே நான் சாப்பிடுவதை நிறுத்தி விடுவனோ என்று பயந்து கண்டும் காணாத மாதிரி திரும்பி படுத்துக் கொண்டாள். அது ஒன்றும் எனக்கு முதல்தடவை இல்லையென்றாலும் என்னால்தான் அம்மா சாப்பிடவில்லை என்பதை நினைத்தப்போது குற்ற உணர்வு சற்றுக் கூடுதலாகி தலையை குனிந்தபடியே சாப்பிட்டு முடித்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் ஒன்னுக்கு வருகிறமாதிரி இருந்தது. தூக்கத்துல ஒன்னுக்கு வந்தா எழுந்து துணைக்கு அம்மாவையும் எழுப்பிவந்து திண்ணையில் உட்கார வைத்துவிட்டு தெருவில் சென்று ஒன்னுக்கு அடிப்பதுதான் என்னோட வழக்கம். ஏனோ அன்றைக்கு அம்மாவை எழுப்ப மனமில்லாததால் தனியாகவே வெளியே வந்துவிட்டேன். ஆனால் வந்த பிறகுதான் தெருவிலிருந்த இருட்டைக்கண்டு 'ஏன்டா தனியா வந்தோமென்று' எண்ணத்தோணியது எனக்கு. இருண்டு கிடந்த வீதியில் இருந்த ஒற்றை தெருவிளக்கும் அமிழ்ந்து அமிழ்ந்து எரிந்து எனக்கு மேலும் பயத்தை கூட்டியது. பயத்தில் ஒன்னுக்குவேறு முட்டிக்கொண்டு வந்துவிடும் போலிருந்ததால் ஓடிப்போய் வீட்டுக்கதவை திறந்து வைத்துவிட்டு வந்து, முற்றத்தில் தெரிந்த வெளிச்சத்தில் நின்று, சலத்தை தெருவில் தெளித்துவிட்டு திரும்பிப்போய் பாயில் படுத்துக்கொண்டேன்.
படுத்த கொஞ்ச நேரத்திலேயே நன்றாக உறங்கிவிட்டேன். காலையில் அம்மாதான் என்னை எழுப்பிவிட்டு டீயை கையில கொடுத்தாள். வழக்கமா நாந்தான் காலையில கடைக்குபோய் அம்மாவுக்கு டீ வாங்கி வந்து தருவேன். அம்மா அதுல எனக்கும் கொஞ்சம் பங்கு போட்டு தருவாள். அவளுக்கு அதுதான் காலை உணவென்றாலும் அதை பங்கிட்டு தருவதில் அவளுக்கும், அதை வாங்கி குடிப்பதில் எனக்கும் எப்போதுமே ஒருவித சந்தோசம் இருந்துக் கொண்டிருக்கும்.
டீயை குடித்தபிறகு, பக்கத்துவீட்டு பரமேசுடன் சேர்ந்து ஆத்தங்கரைக்கு சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஏரியில் குளித்துவிட்டு நான் வீட்டுக்கு திரும்பிய நேரம் மணி எட்டாகியிருந்தது. வீட்டுக்குள் வந்ததும் அம்மா சாதத்தை தட்டிலிட்டு என்னிடம் சாப்பிடக் கொடுத்தாள்.
நிதானமாக சாப்பிட்டு முடித்து, சீருடையை அணிந்துக்கொண்டு நான் பள்ளிக்கு புறப்படும்போது அம்மா என்னிடம், "கதிரு, உனக்கு பள்ளிக்கூடத்துக்கு கட்ட நானும் கம்மாத்தா ரெண்டு நாளைக்குன்னு சொல்லி நிறைய இடத்துல பணம் கேட்டுப்பார்த்தேம்பா.. எல்லோரும் இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லுறாங்களே தவிர யாருக்கிட்டயும் கிடைக்கலைப்பா... கடைசியா போனவாரம் மேலக்காட்டுக்கு கரும்புக்கட்ட போனக்கூலி நூத்திஅம்பது ரூவாயை இப்பத்தான் சின்னாயி கொண்டாந்து கொடுத்துட்டு போனாங்க.. இதை எடுத்துட்டுப்போயி இன்னிக்கு கட்டுப்பா.. மீதி நூறு ரூவாயை நீ பள்ளிக்கூடத்துலருந்து வரதுக்குள்ளாற யார்க்கிட்டயாவது கேட்டு வாங்கி வச்சிருக்கேன். அதை நீ நாளைக்கு கட்டிக்கலாம்" என்றாள். காலையில் எழுந்ததிலிருந்து இந்த விசயத்தை நான் சுத்தமாக மறந்துப் போயிருந்தேன். அம்மா சொன்ன பிறகுதான் எனக்கு மறுபடியும் நினைவுக்கு வந்தது.
கட்டடபீஸ் கட்ட அன்றுதான் கடைசிநாள் என்பதாலும் அம்மா கொடுத்த பணம் அதற்கு பத்தாதென்பதாலும் எனக்கு கோபமும் அழுகையும் ஒன்றுசேர்ந்து வந்தது. அழுதுக்கொண்டே அம்மாவிடம், "போ. எனக்கு பணமும் வேணாம் ஒன்னும் வேணாம்.. இன்னிக்கு பணம் கட்டலைன்னா வகுப்புக்குள்ளாற விடமாட்டாங்க.. நான் பள்ளிக்கூடத்துக்கும் போகலை. ஒன்னுத்துக்கும் போகலை போ" என்று கூறிவிட்டு கோபமாக திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டேன். நான் வேறு ஏதாவது காரணத்திற்க்காக பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அந்நேரம் அம்மாவிடம் இருந்து எனக்கு அடிவிழுந்திருக்கும்.
என் காரணம் நியாயமா இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை... என்னருகில் வந்து எந்தலையை கோதியபடி அம்மா என்னிடம், "கதிரு, அப்பா விருத்தாலம் சந்தைக்கு மாடு ஓட்டிக்கிட்டு போயி இன்னியோட மூனுநாளாச்சி.. நேத்து ராத்திரியே சந்தை முடிஞ்சிருக்கும்.. இன்னேரம் வீட்டுக்கு வந்துக்கிட்டு இருப்பாரு... அவரு வந்ததும் மாடு ஓட்டிக்கிட்டு போனக்கூலி மூனுநாளைக்கும் சேர்த்து நூத்துஅம்பது ரூவா கிடைக்கும்.. அதுல நூறுரூவாயை உனக்காக அம்மா நான் தனியா எடுத்து வச்சிருக்கேன்.. இப்ப நீ இதை எடுத்துக்கிட்டு போயி கட்டிட்டு, உங்க வாத்தியார்க்கிட்ட மீதியை நாளைக்கு கண்டிப்பா கட்டிடுறேன்னு சொல்லுப்பா. அவரு ஏத்துக்குவாரு." என்று ஆறுதலாக நம்பிக்கை ஊட்டினாள். சரியென்று நானும் அதை வாங்கி காம்பஸ் டப்பியின் அடியில் பத்திரப்படுத்திக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.
எங்கள் பள்ளி இருக்கும் ஊருக்கும் எங்கள் ஊருக்கும் இடையே ஒரு அஞ்சுமைல் தூரம் இருக்கும். அந்த பாதையில் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறையென்று ஒரேயொரு பேருந்துமட்டும் வந்துவிட்டு போகும். நாங்க பள்ளியை நோக்கி போகும்பொழுது அது ஊரை நோக்கி போகும்.. நாங்க பள்ளியைவிட்டு வருகையில் அதுவும் ஊரைவிட்டு வரும்..!! இப்படி அது எப்பவும் எங்களுக்கு எதிர்திசையில் இருந்ததால் அரசாங்கம் அளித்த இலவசபயணம் எங்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. எங்க ஊர் மக்களும் அந்த பேருந்தோட நேரத்தை பள்ளிக்குழந்தைகளுக்கு ஏத்தமாதிரி மாற்றியமைக்கச் சொல்லி அரசுக்கிட்ட கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இன்றுவரை எந்த அரசும் எங்க மக்களோட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை....!!
அதனால் அவரவர் தகுதிக்கு தகுந்தார்போல் மிதிவண்டியிலோ இல்லை நடந்தோதான் பள்ளிக்கு போக வேண்டியிருந்தது எங்க ஊர் பிள்ளைகளுக்கு. மிதிவண்டி மிதிக்க தெரியாத பன்னிரெண்டு வயது பாலகன், நான் எப்படி பள்ளிக்கு சென்றிருப்பேன் என்று உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?!
(தொடரும்..)
'பசி வந்தா பத்தும் பறந்துடும்'ன்னு சொல்லுவாங்க. அதில் என்னோட பிடிவாதம் மட்டும் பிடிப்போட நிற்க்குமா..? வந்தது வயிற்றுவலி அல்ல வயிற்றுப்பசி என்றறிந்ததுமே எனக்குள்ளிருந்த பிடிவாதம் எங்கே சென்றதென்று தெரியவில்லை. எழுந்ததும் பல்துலக்கும் நல்ல பழக்கம்கூட அப்போதிருந்த பசியில் என்னிடம் இல்லாமல் போயிருந்தது.
நேராக எழுந்துசென்று மின்விளக்கைப் போட்டுவிட்டு, அடுப்படியில் இருந்த சோற்றுப்பானையை திறந்தால் ரெண்டுபேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு அப்படியே தண்ணியில் ஊறிக்கொண்டிருந்தது. 'சோத்துப்பானையை சுத்தமா தொடைக்கக்கூடாது'ன்னு சொல்லி அம்மா கொஞ்சம் சாதத்தை எப்பவும் குண்டுல மிச்சம் வைத்திருப்பது வழக்கம். ஆனால் முதல்நாள் நான் சாப்பிடவில்லை என்றதும் அம்மாவும் சாப்பிடவில்லை போலிருக்கு. நானும் பலமுறை அம்மாவிடம் பாடிகாட்டி இருக்கேன் "தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறடா"-ங்கிற கண்ணத்தாசனோட பாட்டை..!! இருந்தும் அம்மாவுடன் இருந்தவரைக்கும் நான் சாப்பிடவில்லை என்றறிந்த பிறகு அவள் சாப்பிட்டதாக நான் அறிந்ததில்லை.
எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, நான், எங்க அண்ணன் என்று மொத்தம் நால்வர் மட்டும்தான். அதிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணன் எதற்காகவோ வீட்டில் கோபித்துக்கொண்டு, பதிமூன்று வயதில் சென்னைக்கு சம்பாதிக்க சென்றபிறகு எங்கள் குடும்பம் இன்னும் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அண்ணன் வருடத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு மட்டும்தான் ஊருக்கு வருவான். ஒருவாரம்கூட என்னுடன் ஒன்றாய் இருக்காமல் உடனே திரும்பி சென்றுவிடுவான்.
ஓவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும், "என்னாலதான் படிக்க முடியாம போயிடுச்சி, நீயாவது நல்லாப்படிச்சிக்கடா தம்பி"ன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். எதற்காக அவன் அப்படி சொல்கிறானென்று அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் சொல்லைத் தட்டக்கூடாதென்று மட்டும் தோணும்.
இப்படி ஏதேதோ நினைத்தப்படி, தண்ணியில கிடந்த சாதத்தை தட்டில் எடுத்துப்போட்டு சுண்டிப்போன குழம்பை ஊற்றி சாப்பிடும்போது சத்தம்க்கேட்டு அம்மாவும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டாள். நான் பசியோட சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்டதும் அவளோட கண்கள் கலங்கிருச்சி. ஆனாலும் எங்கே நான் சாப்பிடுவதை நிறுத்தி விடுவனோ என்று பயந்து கண்டும் காணாத மாதிரி திரும்பி படுத்துக் கொண்டாள். அது ஒன்றும் எனக்கு முதல்தடவை இல்லையென்றாலும் என்னால்தான் அம்மா சாப்பிடவில்லை என்பதை நினைத்தப்போது குற்ற உணர்வு சற்றுக் கூடுதலாகி தலையை குனிந்தபடியே சாப்பிட்டு முடித்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் ஒன்னுக்கு வருகிறமாதிரி இருந்தது. தூக்கத்துல ஒன்னுக்கு வந்தா எழுந்து துணைக்கு அம்மாவையும் எழுப்பிவந்து திண்ணையில் உட்கார வைத்துவிட்டு தெருவில் சென்று ஒன்னுக்கு அடிப்பதுதான் என்னோட வழக்கம். ஏனோ அன்றைக்கு அம்மாவை எழுப்ப மனமில்லாததால் தனியாகவே வெளியே வந்துவிட்டேன். ஆனால் வந்த பிறகுதான் தெருவிலிருந்த இருட்டைக்கண்டு 'ஏன்டா தனியா வந்தோமென்று' எண்ணத்தோணியது எனக்கு. இருண்டு கிடந்த வீதியில் இருந்த ஒற்றை தெருவிளக்கும் அமிழ்ந்து அமிழ்ந்து எரிந்து எனக்கு மேலும் பயத்தை கூட்டியது. பயத்தில் ஒன்னுக்குவேறு முட்டிக்கொண்டு வந்துவிடும் போலிருந்ததால் ஓடிப்போய் வீட்டுக்கதவை திறந்து வைத்துவிட்டு வந்து, முற்றத்தில் தெரிந்த வெளிச்சத்தில் நின்று, சலத்தை தெருவில் தெளித்துவிட்டு திரும்பிப்போய் பாயில் படுத்துக்கொண்டேன்.
படுத்த கொஞ்ச நேரத்திலேயே நன்றாக உறங்கிவிட்டேன். காலையில் அம்மாதான் என்னை எழுப்பிவிட்டு டீயை கையில கொடுத்தாள். வழக்கமா நாந்தான் காலையில கடைக்குபோய் அம்மாவுக்கு டீ வாங்கி வந்து தருவேன். அம்மா அதுல எனக்கும் கொஞ்சம் பங்கு போட்டு தருவாள். அவளுக்கு அதுதான் காலை உணவென்றாலும் அதை பங்கிட்டு தருவதில் அவளுக்கும், அதை வாங்கி குடிப்பதில் எனக்கும் எப்போதுமே ஒருவித சந்தோசம் இருந்துக் கொண்டிருக்கும்.
டீயை குடித்தபிறகு, பக்கத்துவீட்டு பரமேசுடன் சேர்ந்து ஆத்தங்கரைக்கு சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஏரியில் குளித்துவிட்டு நான் வீட்டுக்கு திரும்பிய நேரம் மணி எட்டாகியிருந்தது. வீட்டுக்குள் வந்ததும் அம்மா சாதத்தை தட்டிலிட்டு என்னிடம் சாப்பிடக் கொடுத்தாள்.
நிதானமாக சாப்பிட்டு முடித்து, சீருடையை அணிந்துக்கொண்டு நான் பள்ளிக்கு புறப்படும்போது அம்மா என்னிடம், "கதிரு, உனக்கு பள்ளிக்கூடத்துக்கு கட்ட நானும் கம்மாத்தா ரெண்டு நாளைக்குன்னு சொல்லி நிறைய இடத்துல பணம் கேட்டுப்பார்த்தேம்பா.. எல்லோரும் இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லுறாங்களே தவிர யாருக்கிட்டயும் கிடைக்கலைப்பா... கடைசியா போனவாரம் மேலக்காட்டுக்கு கரும்புக்கட்ட போனக்கூலி நூத்திஅம்பது ரூவாயை இப்பத்தான் சின்னாயி கொண்டாந்து கொடுத்துட்டு போனாங்க.. இதை எடுத்துட்டுப்போயி இன்னிக்கு கட்டுப்பா.. மீதி நூறு ரூவாயை நீ பள்ளிக்கூடத்துலருந்து வரதுக்குள்ளாற யார்க்கிட்டயாவது கேட்டு வாங்கி வச்சிருக்கேன். அதை நீ நாளைக்கு கட்டிக்கலாம்" என்றாள். காலையில் எழுந்ததிலிருந்து இந்த விசயத்தை நான் சுத்தமாக மறந்துப் போயிருந்தேன். அம்மா சொன்ன பிறகுதான் எனக்கு மறுபடியும் நினைவுக்கு வந்தது.
கட்டடபீஸ் கட்ட அன்றுதான் கடைசிநாள் என்பதாலும் அம்மா கொடுத்த பணம் அதற்கு பத்தாதென்பதாலும் எனக்கு கோபமும் அழுகையும் ஒன்றுசேர்ந்து வந்தது. அழுதுக்கொண்டே அம்மாவிடம், "போ. எனக்கு பணமும் வேணாம் ஒன்னும் வேணாம்.. இன்னிக்கு பணம் கட்டலைன்னா வகுப்புக்குள்ளாற விடமாட்டாங்க.. நான் பள்ளிக்கூடத்துக்கும் போகலை. ஒன்னுத்துக்கும் போகலை போ" என்று கூறிவிட்டு கோபமாக திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டேன். நான் வேறு ஏதாவது காரணத்திற்க்காக பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அந்நேரம் அம்மாவிடம் இருந்து எனக்கு அடிவிழுந்திருக்கும்.
என் காரணம் நியாயமா இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை... என்னருகில் வந்து எந்தலையை கோதியபடி அம்மா என்னிடம், "கதிரு, அப்பா விருத்தாலம் சந்தைக்கு மாடு ஓட்டிக்கிட்டு போயி இன்னியோட மூனுநாளாச்சி.. நேத்து ராத்திரியே சந்தை முடிஞ்சிருக்கும்.. இன்னேரம் வீட்டுக்கு வந்துக்கிட்டு இருப்பாரு... அவரு வந்ததும் மாடு ஓட்டிக்கிட்டு போனக்கூலி மூனுநாளைக்கும் சேர்த்து நூத்துஅம்பது ரூவா கிடைக்கும்.. அதுல நூறுரூவாயை உனக்காக அம்மா நான் தனியா எடுத்து வச்சிருக்கேன்.. இப்ப நீ இதை எடுத்துக்கிட்டு போயி கட்டிட்டு, உங்க வாத்தியார்க்கிட்ட மீதியை நாளைக்கு கண்டிப்பா கட்டிடுறேன்னு சொல்லுப்பா. அவரு ஏத்துக்குவாரு." என்று ஆறுதலாக நம்பிக்கை ஊட்டினாள். சரியென்று நானும் அதை வாங்கி காம்பஸ் டப்பியின் அடியில் பத்திரப்படுத்திக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.
எங்கள் பள்ளி இருக்கும் ஊருக்கும் எங்கள் ஊருக்கும் இடையே ஒரு அஞ்சுமைல் தூரம் இருக்கும். அந்த பாதையில் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறையென்று ஒரேயொரு பேருந்துமட்டும் வந்துவிட்டு போகும். நாங்க பள்ளியை நோக்கி போகும்பொழுது அது ஊரை நோக்கி போகும்.. நாங்க பள்ளியைவிட்டு வருகையில் அதுவும் ஊரைவிட்டு வரும்..!! இப்படி அது எப்பவும் எங்களுக்கு எதிர்திசையில் இருந்ததால் அரசாங்கம் அளித்த இலவசபயணம் எங்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. எங்க ஊர் மக்களும் அந்த பேருந்தோட நேரத்தை பள்ளிக்குழந்தைகளுக்கு ஏத்தமாதிரி மாற்றியமைக்கச் சொல்லி அரசுக்கிட்ட கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இன்றுவரை எந்த அரசும் எங்க மக்களோட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை....!!
அதனால் அவரவர் தகுதிக்கு தகுந்தார்போல் மிதிவண்டியிலோ இல்லை நடந்தோதான் பள்ளிக்கு போக வேண்டியிருந்தது எங்க ஊர் பிள்ளைகளுக்கு. மிதிவண்டி மிதிக்க தெரியாத பன்னிரெண்டு வயது பாலகன், நான் எப்படி பள்ளிக்கு சென்றிருப்பேன் என்று உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?!
(தொடரும்..)