rambal
04-09-2003, 10:26 AM
ஒரு தவறு...
வாசகர்களே.. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.. அது, விகாஸின் சரித்திர காதல் நாவலோடு ராமின் இலக்கியம் பற்றிய
ய்வுக்குறிப்புகள் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டன.. இவற்றை பிரித்துப் படித்து பொருள் காண வேண்டும் என்று
அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
நாவல் பற்றிய குறிப்புகளும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் ஒரே நேரத்தில் கிடைக்க, அந்த ஒரு கணம்
என் மனம் என்னையறியாமல் ஆனந்தப்பட்டு இவைகளை தொகுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
கோளாறு ஏற்பட்டு ஆர்வக் கோளாறாகி ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது..
ஜடாமுனியின் சித்து வேலைகளினால் ஏற்பட்ட இந்தக் குழப்பத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது..
ஆதலினால், ஜடாமுனி சித்தரை மன்னிப்புக் கேட்க அழைக்கிறேன்..
இனிவருவது, ஜடாமுனி சித்தரின் குரல்:
பிண்டமடா - உப்புப் பிண்டமாடா
ஊத்தை எடுத்த சதைத் துண்டமடா
காதல் கல்லறைப் பூவடா
இலக்கியம் பூக்கல்லறையடா - புரியாத
விகாஸ்சும் ராமும் சித்தம் கலங்க வேண்டுமடா
ராம்பால் தப்பு ஏதும் இல்லையடா - இந்த
ஜடாமுனியின் சித்தடா - எல்லாம் சித்தடா!
இப்படியாக ஜடாமுனியின் சித்தால் உங்களை கொஞ்சம் குழப்பி விட்டேன்..
மேலே ஜடாமுனியே இது தனது சித்து என்று ஒப்புக் கொண்டதால் வாசகர்களாகிய நீங்கள்
என்னைக் குறை கூற முடியாது என்று நினைக்கிறேன்..
இனி வரும், பகுதிகளை ஜடாமுனி சித்தர் கண்ணில் படாமல் எழுத முயற்சிக்கிறேன்..
நன்றி..
இப்படிக்கு உங்கள் அன்புள்ள,
ராம்பால்...
வாசகர்களே.. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.. அது, விகாஸின் சரித்திர காதல் நாவலோடு ராமின் இலக்கியம் பற்றிய
ய்வுக்குறிப்புகள் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டன.. இவற்றை பிரித்துப் படித்து பொருள் காண வேண்டும் என்று
அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
நாவல் பற்றிய குறிப்புகளும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் ஒரே நேரத்தில் கிடைக்க, அந்த ஒரு கணம்
என் மனம் என்னையறியாமல் ஆனந்தப்பட்டு இவைகளை தொகுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
கோளாறு ஏற்பட்டு ஆர்வக் கோளாறாகி ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது..
ஜடாமுனியின் சித்து வேலைகளினால் ஏற்பட்ட இந்தக் குழப்பத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது..
ஆதலினால், ஜடாமுனி சித்தரை மன்னிப்புக் கேட்க அழைக்கிறேன்..
இனிவருவது, ஜடாமுனி சித்தரின் குரல்:
பிண்டமடா - உப்புப் பிண்டமாடா
ஊத்தை எடுத்த சதைத் துண்டமடா
காதல் கல்லறைப் பூவடா
இலக்கியம் பூக்கல்லறையடா - புரியாத
விகாஸ்சும் ராமும் சித்தம் கலங்க வேண்டுமடா
ராம்பால் தப்பு ஏதும் இல்லையடா - இந்த
ஜடாமுனியின் சித்தடா - எல்லாம் சித்தடா!
இப்படியாக ஜடாமுனியின் சித்தால் உங்களை கொஞ்சம் குழப்பி விட்டேன்..
மேலே ஜடாமுனியே இது தனது சித்து என்று ஒப்புக் கொண்டதால் வாசகர்களாகிய நீங்கள்
என்னைக் குறை கூற முடியாது என்று நினைக்கிறேன்..
இனி வரும், பகுதிகளை ஜடாமுனி சித்தர் கண்ணில் படாமல் எழுத முயற்சிக்கிறேன்..
நன்றி..
இப்படிக்கு உங்கள் அன்புள்ள,
ராம்பால்...