PDA

View Full Version : விடைபெறு 2008



mathuran
31-12-2008, 09:04 AM
எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தந்து
மொத்தமாய் பரிதவித்து
பித்தனாய் சுற்றவைத்தாயே...

யுத்தத்தின் கோரங்கள்
சத்தத்தின் அவலங்கள்
எத்தனை துன்பமடா...?
அத்தனையும் கடந்தங்கே
சந்தோஷ நினைவலைகள்
ஆழ்மனதில் நிழலாட
நிலாவொளியில் நீ வாடுகிறாய்...

தீராத வேதனைகள்
புரியாத சோதனைகள்
எத்தனைதான் தாங்குமெந்தன்
புண்பட்ட நெஞ்சமிது...
கொஞ்சமாவது இரக்கம்காட்டி
சொர்க்கமதை அருகில் காட்டு...

அநியாய கொலைகளால்
அநாதைகள் அதிகரிக்க
காதல் பிரிவுகளால்
இதயங்கள் சிதறடித்தாய்...
உருண்டையான உலகத்தை
இருண்டதாய் மாற்றிடவே
உலகத்து சமநிலையை
சிலநேரம் குழப்பிவிட்டாய்...
ஈரமில்லா நெஞ்சங்களை
கொஞ்சநேரம் குளிரவைக்க
கடலுக்குள் இழுத்துச் சென்றாய்...
இத்தனையும் செய்துவிட்டாய்
வாழ்க்கையின் இன்பமதை
திருப்பித்தாராயோ...?

நீங்காத சொந்தமதை
இவ்வாண்டில் மீட்டுவந்தாய்...
துன்பத்தை குழிதோண்டி
புதைக்கவைத்தாய்...
போகின்ற இரண்டாயிரத்தெட்டே
உன் உளம்தொட்டு வாழ்த்திவிடு
என்னவள் மனம்தொட்டதுபோல்
கரம்பிடித்து வாழவேண்டுமென...

Mano.G.
31-12-2008, 09:35 AM
2009 ஆம் ஆண்டு உங்கள் கனவுகளை
நினைவாக்க நீங்களும் பாடுபடுங்கள்
உங்களுக்காக நாங்களும் பிராத்திக்கிறோம்

மனோ.ஜி

சிவா.ஜி
31-12-2008, 10:07 AM
நிச்சயம் உங்கள் கனவுகள் நனவாகும் நாள் மிக விரைவில் வரும். இழந்தவைகள் எத்தனையோ...பெறப்போவது அத்தனையையும் மீட்டுத்தராதென்றாலும், ஆறுதலாவது தரும். வாழ்த்துகள் மதுரன்

நிரன்
31-12-2008, 01:36 PM
துன்பங்கள் எல்லாம் மறையட்டும்
வரும் காலம் இன்பத்தை மட்டுமே
பரிசளிக்க வேண்டும்.


உங்கள் கவிதையும் அருமை

தமிழ்தாசன்
31-12-2008, 03:38 PM
நிழலாடுது உன் நிகழ்வுகள்
உருவாகுது புது உறவுகள்
நினைவாகுது பல கனவுகள்
கனவாகுது பல நினைவுகள்
வழமான எதிர்காலம் வரவேற்குது வாசலில் நின்றே!

காத்திருப்போம்!

Keelai Naadaan
01-01-2009, 02:56 AM
இதுவும் கடந்து போகும்
விடியாத இரவு இல்லை
மாற்றம் ஒன்றே மாறாதது
வரும் காலம் மனம் நிறைவாக அமைய வேண்டுகிறேன்

mathuran
01-01-2009, 02:56 AM
2009 ஆம் ஆண்டு உங்கள் கனவுகளை
நினைவாக்க நீங்களும் பாடுபடுங்கள்
உங்களுக்காக நாங்களும் பிராத்திக்கிறோம்

மனோ.ஜி

நன்றி மனோஜ். உலகிலுள்ள அனைவரும் நிம்மதியாக வாழ எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திப்போம்.

mathuran
01-01-2009, 02:58 AM
நன்றி சிவா.ஜி. அனைவரது கனவும் நிஜமாக வேண்டுமென பிரார்த்திப்போம்.

mathuran
01-01-2009, 03:00 AM
இதுவும் கடந்து போகும்
விடியாத இரவு இல்லை
மாற்றம் ஒன்றே மாறாதது
வரும் காலம் மனம் நிறைவாக அமைய வேண்டுகிறேன்

நன்றி கீழை நாடான் அவர்களே. அடிக்கடி மாறுகின்ற மாற்றங்கள் மாறவேண்டுமென பிரார்த்திப்போம்...

mathuran
01-01-2009, 03:02 AM
இதுவும் கடந்து போகும்
விடியாத இரவு இல்லை
மாற்றம் ஒன்றே மாறாதது
வரும் காலம் மனம் நிறைவாக அமைய வேண்டுகிறேன்


நிழலாடுது உன் நிகழ்வுகள்
உருவாகுது புது உறவுகள்
நினைவாகுது பல கனவுகள்
கனவாகுது பல நினைவுகள்
வழமான எதிர்காலம் வரவேற்குது வாசலில் நின்றே!

காத்திருப்போம்!

நன்றி தமிழ்தாசன் அவர்களே... வாசலில் வசந்தம் வருமென உளநம்பிக்கையுடன் காத்திருக்கேன்...

mathuran
01-01-2009, 03:04 AM
துன்பங்கள் எல்லாம் மறையட்டும்
வரும் காலம் இன்பத்தை மட்டுமே
பரிசளிக்க வேண்டும்.


உங்கள் கவிதையும் அருமை

நன்றி நிரஞ்சன். துன்பமில்லாத வாழ்க்கையில்லை. இன்பந்தருகின்ற துன்பங்கள் இருக்கட்டும், நோகடிக்கும் துன்பங்கள் விட்டகலட்டும்...

shibly591
01-01-2009, 04:02 AM
தீராத வேதனைகள்
புரியாத சோதனைகள்
எத்தனைதான் தாங்குமெந்தன்
புண்பட்ட நெஞ்சமிது...
கொஞ்சமாவது இரக்கம்காட்டி
சொர்க்கமதை அருகில் காட்டு...

நீங்காத சொந்தமதை
இவ்வாண்டில் மீட்டுவந்தாய்...
துன்பத்தை குழிதோண்டி
புதைக்கவைத்தாய்...
போகின்ற இரண்டாயிரத்தெட்டே
உன் உளம்தொட்டு வாழ்த்திவிடு
என்னவள் மனம்தொட்டதுபோல்
கரம்பிடித்து வாழவேண்டுமென...

மனசை சற்றே வலிக்க வைக்குமு; வரிகளோடான உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனைகளும்..

விடைகொடுப்போம் 2008 இற்கு..

வரவேற்போம் 2009 ஐ..

நல்ல பவிதைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

Narathar
01-01-2009, 04:12 AM
மதுரன் அவர்களுக்கு!
இந்தப்புத்தாண்டில் உங்கள்
அனைத்து கனவுகளும் நனவாகி
உஙள் வாழ்வில் மறக்கமுடியாத
ஒரு ஆண்டாக இவ்வாண்டு நிலைத்திருக்க
வாழ்த்துகின்றேன்

http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002034A.gif

mathuran
01-01-2009, 05:33 AM
மனசை சற்றே வலிக்க வைக்குமு; வரிகளோடான உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனைகளும்..

விடைகொடுப்போம் 2008 இற்கு..

வரவேற்போம் 2009 ஐ..

நல்ல பவிதைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

நன்றி ஷிப்லி. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்க வேண்டும். வலிகள் மறக்க வேண்டும். துளி சொன்னாலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஷிப்லி.

mathuran
01-01-2009, 05:35 AM
மதுரன் அவர்களுக்கு!
இந்தப்புத்தாண்டில் உங்கள்
அனைத்து கனவுகளும் நனவாகி
உஙள் வாழ்வில் மறக்கமுடியாத
ஒரு ஆண்டாக இவ்வாண்டு நிலைத்திருக்க
வாழ்த்துகின்றேன்

http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002034A.gif

நாரதர் அவர்களே உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உலகிலுள்ள அனைவரம் நலமாக வாழ பிரார்த்திப்போம்.

சசிதரன்
01-01-2009, 06:20 AM
உங்கள் கனவுகள் பலிக்க வாழ்த்துக்கள் நண்பர் மதுரன் அவர்களே... இந்த புத்தாண்டு உங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியையும் வழங்க வேண்டுகிறேன்... நல்லதொரு கவிதை..:)

mathuran
01-01-2009, 08:55 AM
உங்கள் கனவுகள் பலிக்க வாழ்த்துக்கள் நண்பர் மதுரன் அவர்களே... இந்த புத்தாண்டு உங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியையும் வழங்க வேண்டுகிறேன்... நல்லதொரு கவிதை..:)

நன்றி சசிதரன்... இந்தப் புத்தாண்டு எனக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைவருக்கும் மகிழ்வைத் தரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்...