kulirthazhal
28-12-2008, 03:00 AM
தூரலின் ஓவியம்
முடிவைக்கொன்று எல்லைசெய்த
வின்வெளியில்
ஓடிவிளையாடுகின்ற நீர்த்துளியே!
உயிரினால்
உலகினை உயிர்ப்பிக்கும்
உனக்கோர்
உருவம்செய்து கடவுள்தோற்றான்.
உனக்குள்
ஏதோ ஒரு மோகம்,
மேகமாகிறாய்.
ஏதோ ஒரு தேடல்,
பயணிக்கிறாய்.
ஏதோ ஒரு கற்பனை,
ஓவியமாகிறாய்.
ஏதோ ஒரு வெட்கம்,
மின்னலாய் நானுகிறாய்.
ஏதோ ஒரு பொறாமை,
நிலவினை மறைக்கிறாய்.
ஏதோ ஒரு கோபம்,
இடியென முழங்குகிறாய்.
ஏதோ ஒரு பந்தம்,
வெண்முகிலோடு கலக்கிறாய்.
ஏதோ ஒரு போராட்டம்,
புயலோடு களம்கான்கிறாய்.
ஏதோ ஒரு நட்பு,
சிட்டுக்களுடன் சிரிக்கிறாய்.
ஏதோ ஒரு சோகம்,
கண்ணீர் வடிக்கிறாய்.
கதிரோடு
காதலாடும் கனத்தினில்
ஆடம்பரமாய் அணிந்த
அத்தனை நிறங்களையும்
என் இந்திய மண்ணில்
இழந்துவிட்டே சங்கமிக்கிறாய்.
வேற்றுமையை மறந்து
சங்கமிக்கும்
இந்திய சித்தாந்தம்
இயற்கை வரைந்ததாய்,
தோல்வியை தீண்டாது.
காமம்கொண்ட தென்றலோடு
சலனத்தால்
சங்கமித்த அழகில்
உலகின் உயிரோட்டமே
புதிதாய் பிறக்கிறது.
நீ உருகி உதிர்ந்தவேளையிலே
இன்பங்களை
வண்ணங்களாய்க்கொண்டு
கற்பனை வடித்த ஓவியமாய்
புவிப்பெண்
புதிதாய் பொலிவுறுகிறாள்.
ஏதோ ஒரு உயிரின்
உணர்வுகளையெல்லாம்
கைக்கொண்டு கிடக்கிறாய்,
உலகினில்
உயிர்களின் பிறப்பிற்கு
உத்தரவிடுகிறாய்,
உன் ஓட்டத்தின்
எல்லா நொடிகளையும்
அழகோடு வடிக்கிறாய்,
காதலின்
எல்லா பிரதிபளிப்பையும்
கண்முன்னே காட்டுகிறாய்,
உனக்காக ஏங்கவைத்து
ஆக்கமும்
அழிவும் செய்கிறாய்.
உறுதியாய்
உன்னை
ஓர் உருவமாய் காண்கிறேன்,
நீயும்
பெண்தான்.......
-குளிர்தழல்.
முடிவைக்கொன்று எல்லைசெய்த
வின்வெளியில்
ஓடிவிளையாடுகின்ற நீர்த்துளியே!
உயிரினால்
உலகினை உயிர்ப்பிக்கும்
உனக்கோர்
உருவம்செய்து கடவுள்தோற்றான்.
உனக்குள்
ஏதோ ஒரு மோகம்,
மேகமாகிறாய்.
ஏதோ ஒரு தேடல்,
பயணிக்கிறாய்.
ஏதோ ஒரு கற்பனை,
ஓவியமாகிறாய்.
ஏதோ ஒரு வெட்கம்,
மின்னலாய் நானுகிறாய்.
ஏதோ ஒரு பொறாமை,
நிலவினை மறைக்கிறாய்.
ஏதோ ஒரு கோபம்,
இடியென முழங்குகிறாய்.
ஏதோ ஒரு பந்தம்,
வெண்முகிலோடு கலக்கிறாய்.
ஏதோ ஒரு போராட்டம்,
புயலோடு களம்கான்கிறாய்.
ஏதோ ஒரு நட்பு,
சிட்டுக்களுடன் சிரிக்கிறாய்.
ஏதோ ஒரு சோகம்,
கண்ணீர் வடிக்கிறாய்.
கதிரோடு
காதலாடும் கனத்தினில்
ஆடம்பரமாய் அணிந்த
அத்தனை நிறங்களையும்
என் இந்திய மண்ணில்
இழந்துவிட்டே சங்கமிக்கிறாய்.
வேற்றுமையை மறந்து
சங்கமிக்கும்
இந்திய சித்தாந்தம்
இயற்கை வரைந்ததாய்,
தோல்வியை தீண்டாது.
காமம்கொண்ட தென்றலோடு
சலனத்தால்
சங்கமித்த அழகில்
உலகின் உயிரோட்டமே
புதிதாய் பிறக்கிறது.
நீ உருகி உதிர்ந்தவேளையிலே
இன்பங்களை
வண்ணங்களாய்க்கொண்டு
கற்பனை வடித்த ஓவியமாய்
புவிப்பெண்
புதிதாய் பொலிவுறுகிறாள்.
ஏதோ ஒரு உயிரின்
உணர்வுகளையெல்லாம்
கைக்கொண்டு கிடக்கிறாய்,
உலகினில்
உயிர்களின் பிறப்பிற்கு
உத்தரவிடுகிறாய்,
உன் ஓட்டத்தின்
எல்லா நொடிகளையும்
அழகோடு வடிக்கிறாய்,
காதலின்
எல்லா பிரதிபளிப்பையும்
கண்முன்னே காட்டுகிறாய்,
உனக்காக ஏங்கவைத்து
ஆக்கமும்
அழிவும் செய்கிறாய்.
உறுதியாய்
உன்னை
ஓர் உருவமாய் காண்கிறேன்,
நீயும்
பெண்தான்.......
-குளிர்தழல்.