rambal
03-09-2003, 06:39 AM
கவிதை எழுதும் கதை...
பாஷைகளற்ற மொழியில்
இருந்து
வார்த்தைகள் அற்ற
உணர்ச்சிகளின் துணை கொண்டு
ரம்பமாகிறது..
பாசாங்கு இல்லாத
சுயத்தின் விளிம்பில்
மனுஷர்களின் பெருமூச்சுப்
புலம்பல்களுக்கிடையில்
ந்தீயாய் பெருக்கெடுத்து
விரவி..
ஒரு பிரவாகமாய்..
சடுதியில் மறையும் மின்னலாய்..
தீ அணைந்த பின் எழும் புகையாய்..
எங்கும் பரவி
விரல்களின் ஸ்பர்சத்தின்
துணையோடு நங்கூரமிடுகிறது..
காற்றின் உதவியில்
பயணம் மேற்கொள்ளும்
பாய்மரப்படகாய்
எங்கெங்கோ திசைமாறி
இறுதியில் தரை தட்டி
நிற்கிறதில்
சந்தோசமடைகிறது...
பாஷைகளற்ற மொழியில்
இருந்து
வார்த்தைகள் அற்ற
உணர்ச்சிகளின் துணை கொண்டு
ரம்பமாகிறது..
பாசாங்கு இல்லாத
சுயத்தின் விளிம்பில்
மனுஷர்களின் பெருமூச்சுப்
புலம்பல்களுக்கிடையில்
ந்தீயாய் பெருக்கெடுத்து
விரவி..
ஒரு பிரவாகமாய்..
சடுதியில் மறையும் மின்னலாய்..
தீ அணைந்த பின் எழும் புகையாய்..
எங்கும் பரவி
விரல்களின் ஸ்பர்சத்தின்
துணையோடு நங்கூரமிடுகிறது..
காற்றின் உதவியில்
பயணம் மேற்கொள்ளும்
பாய்மரப்படகாய்
எங்கெங்கோ திசைமாறி
இறுதியில் தரை தட்டி
நிற்கிறதில்
சந்தோசமடைகிறது...