Nanban
05-04-2003, 10:52 AM
நான் யாரென்று
யாருக்கும் தெரியாது.
யாரும் என்னை
கண்டு கொள்ளவும் முடியாது.
யாரும் என்னை
துன்புறுத்த முடியாது.
யாரும் என்னை
அழிக்கவும் முடியாது.
அன்பானவனே
என்னை என்னிலிருந்து
பிரித்து தந்தவனே!
நான் பிரிந்த நான் -
ஒரு வெறும் பழந்துணி பொம்மை.
அதன் மீது
விதியின் வலிய அம்புகள்
மழையெனப் பொழிகிறது.
நான் மட்டும்
உன் கட்டுக்குள் நிம்மதியாக.
யாருக்கும் தெரியாது.
யாரும் என்னை
கண்டு கொள்ளவும் முடியாது.
யாரும் என்னை
துன்புறுத்த முடியாது.
யாரும் என்னை
அழிக்கவும் முடியாது.
அன்பானவனே
என்னை என்னிலிருந்து
பிரித்து தந்தவனே!
நான் பிரிந்த நான் -
ஒரு வெறும் பழந்துணி பொம்மை.
அதன் மீது
விதியின் வலிய அம்புகள்
மழையெனப் பொழிகிறது.
நான் மட்டும்
உன் கட்டுக்குள் நிம்மதியாக.