rambal
03-09-2003, 06:38 AM
சத்தம்...
மனுஷ்யர்களின்
இரைச்சலான
பேச்சொலியில்..
வாகன இயந்திரங்களின்
புரிந்து கொள்ள முடியா
மொழியின் கதறலில்..
பறவைகள் பறந்து
போகையில் சொல்லிச் செல்லும்
இனம் புரியா பாஷையில்..
ஓயாத அலைகளின்
அவஸ்தையின்
வெளிப்பாட்டில்..
விரிந்து கிடக்கும் வானில்
ஊடுருவி விரவி,
பரவி இருக்கும் காற்றில்..
சகல இடங்களிலும்
நிரம்பியிருப்பது
காற்று மட்டுமல்ல..
அதன் ஊடாய் பயணித்துச் செல்லும்
சத்தத்தால் நிரம்பியிருக்கிறது
இந்த பிரபஞ்சம்..
சத்தம் இல்லா
பிரபஞ்சம்
வெறும் சவம்..
மனுஷ்யர்களின்
இரைச்சலான
பேச்சொலியில்..
வாகன இயந்திரங்களின்
புரிந்து கொள்ள முடியா
மொழியின் கதறலில்..
பறவைகள் பறந்து
போகையில் சொல்லிச் செல்லும்
இனம் புரியா பாஷையில்..
ஓயாத அலைகளின்
அவஸ்தையின்
வெளிப்பாட்டில்..
விரிந்து கிடக்கும் வானில்
ஊடுருவி விரவி,
பரவி இருக்கும் காற்றில்..
சகல இடங்களிலும்
நிரம்பியிருப்பது
காற்று மட்டுமல்ல..
அதன் ஊடாய் பயணித்துச் செல்லும்
சத்தத்தால் நிரம்பியிருக்கிறது
இந்த பிரபஞ்சம்..
சத்தம் இல்லா
பிரபஞ்சம்
வெறும் சவம்..