ரங்கராஜன்
25-12-2008, 12:40 PM
வாழ்க்கை வாழ்வதற்கே
பெசன் நகர் கடற்கரை
மாலை 5.35
மிதமான வெளிச்சம்
வியாழன்
கூட்டம் இல்லை.
கண்ணன் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனதில் அவனுடைய 22 வருட கால வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்தது.
கிழிந்த பனியன், கிழியப் போகும் காலுறை, பரட்டை முடி. முன் பாக்கெட்டில் ஒரு பாட்டில். இன்னும் கொஞ்சம் இருள் வரட்டும் என்று காத்துக் கொண்டு இருந்தான். அந்த பெரிய கடற்கரையில் மொத்தமே 15 பேர் தான் இருப்பார்கள். உப்பு காற்றாக இருந்தாலும், மீன் வாடை காற்றாக இருந்தாலும், அந்த காற்றில் இருந்த குளிர்ச்சி அனைத்தையும் மறக்க செய்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தில் கலந்தது. கண்ணன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்தான், மூடியை கழற்றினான். வாயில் ஊத்தும் சமயம், பின்னாடி இருந்து ஒரு குரல்
"தம்பி தீப்பெட்டி இருக்கா" என்றது.
கண்ணன் அதிர்ந்தவாரே திரும்பினான். நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் வாயில் சிகரெட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தார். அந்த இருட்டிலும் வெள்ளையாக தெரிந்தார். நெற்றியில் திருசூரனம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து வந்த வாசனை, அந்த கவுச்சிக் கடலையே மல்லிப்பூ தோட்டமாக மாற்றியது.
"இ....இல்...இல்லாங்க"
"உன்கிட்டயும் இல்லையா, சுத்தம். சரி இங்க பக்கத்துல எதாவது கடை இருக்கா" என்றார் அவர்.
"தெரியாதுங்க, வேற யார்கிட்டனா கேளுங்க"
"உனக்கு கண் தெரியாத தம்பி, சுத்திப்பார் நம்ம இரண்டு பேரை தவிர யாரும் இந்த பக்கம் இல்லை. அதோ பார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி கொஞ்சம் பேர் நிக்குறாங்க, சரி எனக்கு ஒரு உதவி பண்ணு தம்பி
அதோ தெரியுது பார் அந்த கடையில போய் ஒரு தீப்பெட்டி வாங்கினு வரீயா. எனக்கு கடலுக்கு வந்த தம்மடிக்காமல் இருக்க முடியாது. ப்ளீஸ் டா"
கண்ணன் அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தான். அவர் அவனை பார்த்தபடி
"என்னடா தம்பி போமாட்டியா, இந்தா பத்து ரூபாய் போய்டுவா". அவன் அப்பவும் சும்மா நின்றுக் கொண்டு இருந்தான்.
"சரி இந்தா இருப...முப்பது ரூபா போய்டுவா" என்றார். கண்ணன் எதோ யோசித்தவனாக காசை வாங்கிக் கொண்டு, ஓடிப்போய் தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தான். அதை அவன் தரும் முன் அவனிடம்
இருந்து பிடிங்கி, சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அந்த புகையை குடல் வரை இழுத்து அனுபவித்து வெளியே விட்டார். கண்ணன் அவன் வந்த வேலையை மறந்து அவரின் செயல்களை பார்த்துக் கொண்டு நின்றான்.
"என்னடா தம்பி அப்படி பார்க்குற, நான் எப்பவும் கடலுக்கு வந்தால் தம் அடிப்பேன். இன்னிக்கு எதோ டென்சன்ல தீப்பெட்டி வாங்க மறந்துட்டேன், நல்லவேளை நீ தான் கடவுள் மாதிரி வந்த"
முதல் முறையாக கண்ணன் சிரித்தான், அவனை இதுவரை யாரும் புகழ்ந்தது இல்லை, உண்மையில் யாரும் அவனுக்கு இல்லை
"சார் என்ன சார் இது, சாதாரண தீப்பெட்டி வாங்கி கொடுத்ததுக்கு என்னை கடவுள் ஆக்கிட்டீங்க"
பெரியவர் சத்தமாக சிரித்தார் "அப்படி இல்லடா தம்பி, தேவையான இடத்துல உதவி செய்தவர்கள் எல்லாரும் கடவுள் தான், அது தீப்பெட்டி வாங்கி தந்தாலும் சரி, தீயில் இருந்து காப்பாற்றினாலும் சரி" என்று புகையை இழுத்து விட்டார்.
கண்ணனுக்கு சந்தோஷம் அதிகமானது. நன்றாக இருட்டி இருந்தது, சோலார் வெளிச்சத்தில் பூச்சிகள் சந்தோஷமாக வட்டமிட்டது. அவனுடைய பாக்கெட்டில் இருந்து வந்த பாட்டில் சத்தத்தை கேட்டுவிட்டு
"என்ன தம்பி தண்ணி அடிக்க வந்தீயா" என்றார் அவன் தோளை தொட்டு. அவன் பதில் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தான், கொஞ்ச நேரம் பொறுத்து
"இல்ல சார், நீங்க நினைக்கிற மாதிரி இது சாராயம் இல்ல சார், விஷம்..... பூச்சி மருந்து" என்றான்.
அவர் எந்த வித சலனமும் காட்டாமல் "என்னப்பா தோட்டத்துக்கு வாங்கினு போறீயா" என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் கண்களில் கண்ணீருடன்
"இல்ல சார் நான் குடிக்க போறேன், சாவப்போறேன்" என்றான்.
"ஓ.................................(நீண்ட இடைவேளைக்கு பிறகு) ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்றார்.
"...................... நான் சின்ன வயதில் இருந்து அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். இரண்டு வருஷம் முன்னாடி எனக்கு வயசு ஆயிடுச்சினு வெளியே அனுப்பிட்டாங்க. என் கையில் காசு இல்ல சார், என்னால இந்த உலகத்துல வாழ முடியில"
"ஆமாப்பா ரொம்ப கஷ்டம் தான், நீ இந்த முடிவ முன்னாடியே எடுத்து இருக்கனும்பா. இவ்வளவு நாள் வேஸ்டு பண்ணிட்டியே" என்றார் பெரியவர். கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியவர் தொடர்ந்தார்.
"சரி தம்பி நான் கிளம்புறேன், ஆ அப்புறம் சொல்ல மறந்துட்டேன், அந்த பூச்சி மருந்து கான்சண்ட்ரேட்டடா, எங்க வாங்கின"
".......................நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை,............... இதை நான் வாங்கல சார், கடையில் இருந்து திருடினேன்"
"ஓ அப்படியா, ஏன் கேக்குறனா. என் நண்பன் ஒருத்தன் சின்ன வயசுல இப்படி தான் பூச்சு மருந்தை குடித்து விட்டான். ஆனால் சாகல கண் பார்வை போயிடுச்சி, குடல் வெந்து போச்சு, பாவம் தண்ணி கூட குடிக்க
முடியாம இரண்டு வருஷம் நரக வேதனை பட்டு செத்தான். அதனால தான் கேட்டேன் தம்பி, சரி நான் வரேன்"
"அய்யய்யோ அப்படியா..................................... இப்ப என்ன சார் பண்றது, ஆ நீங்க கொடுத்த காசுக்கு எதாவது விஷம் வாங்கி சாப்பிடுவேன், அதற்க்காக தான் உங்ககிட்ட இருந்து நான் காசு வாங்கினேன்." என்றான் சோகமாக. பெரியவர் அவனின் தோளில் கையை போட்டபடி
"தம்பி நீ இந்த உலகத்தில் பிறந்தது இந்த கடல்கரையில் அனாதையாக சாவதற்க்கு இல்லை. நீ பிறக்கும் பொழுது அனாதையாக இருந்து இருக்கலாம். ஆனால் நீ சாகும் பொழுது அனாதையாக சாவக்கூடாது. அதைவிட ஒரு மனிதனுக்கு அவமானம் ஏதும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையில் வரும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீ தான் காரணம். ஒட்டப்பந்தையத்தில் ஒருத்தன் ஒட ஆரம்பிக்கும் பொழுதே அவன் ஜெயிப்பான இல்லையான்னு அவனுக்கு தெரியும். அதுபோல இந்த இரண்டு வருடத்தில நீ என்ன நிஜமா உழைச்சனு உனக்கு நல்ல தெரியும் தம்பி. ஒரு பத்து வருஷம் கழித்து நீ கண்டிப்பா உன் மனைவி, குழந்தைகள் கூட இந்த கடற்கரைக்கு வந்து இப்போ எடுத்த முடிவுக்காக சிரிப்ப பார். நான் வரேன் தம்பி" என்று நடந்தார்.
கண்ணனுக்கு கண்ணீர் மல்க சிரிப்பு வந்தது, அவனுடைய சின்ன பையன் வந்து கண்ணனின் காலை பிடித்து இழுத்து
"டாடி வாங்க டாடி தண்ணியில இறங்கலாம், வாங்க டாடி"
"வேண்டாம் சுப்பு செல்லம் மம்மி திட்டுவாங்க டா" என்று குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவியுடன் கண்ணன் தன்னுடைய காரை நோக்கி நடந்தான்..............................................
கண்ணனிடம் பேசி விட்டு பெரியவர் வேகமாக நடந்தார், கண்ணன் கொஞ்ச நேரம் அவர் போவதையே பார்த்தபடி நின்றான், பின் உடைந்த குரலில்
"சார் ரொம்ப தாங்கஸ் சார். என் பேரு கண்ணன் உங்க பேரு என்ன சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று கத்தினான் தூரத்தில் போகும் பெரியவரை பார்த்து.
"என் பேருருருருருருரு...... சுப்பிரமணிணிணிணிணிணிணிணி................" என்று நடந்து அப்படியே இருட்டில் மறைந்தார் கண்ணனின் வாழ்க்கை விளக்கை ஏற்றி விட்டு.
பெசன் நகர் கடற்கரை
மாலை 5.35
மிதமான வெளிச்சம்
வியாழன்
கூட்டம் இல்லை.
கண்ணன் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனதில் அவனுடைய 22 வருட கால வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்தது.
கிழிந்த பனியன், கிழியப் போகும் காலுறை, பரட்டை முடி. முன் பாக்கெட்டில் ஒரு பாட்டில். இன்னும் கொஞ்சம் இருள் வரட்டும் என்று காத்துக் கொண்டு இருந்தான். அந்த பெரிய கடற்கரையில் மொத்தமே 15 பேர் தான் இருப்பார்கள். உப்பு காற்றாக இருந்தாலும், மீன் வாடை காற்றாக இருந்தாலும், அந்த காற்றில் இருந்த குளிர்ச்சி அனைத்தையும் மறக்க செய்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தில் கலந்தது. கண்ணன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்தான், மூடியை கழற்றினான். வாயில் ஊத்தும் சமயம், பின்னாடி இருந்து ஒரு குரல்
"தம்பி தீப்பெட்டி இருக்கா" என்றது.
கண்ணன் அதிர்ந்தவாரே திரும்பினான். நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் வாயில் சிகரெட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தார். அந்த இருட்டிலும் வெள்ளையாக தெரிந்தார். நெற்றியில் திருசூரனம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து வந்த வாசனை, அந்த கவுச்சிக் கடலையே மல்லிப்பூ தோட்டமாக மாற்றியது.
"இ....இல்...இல்லாங்க"
"உன்கிட்டயும் இல்லையா, சுத்தம். சரி இங்க பக்கத்துல எதாவது கடை இருக்கா" என்றார் அவர்.
"தெரியாதுங்க, வேற யார்கிட்டனா கேளுங்க"
"உனக்கு கண் தெரியாத தம்பி, சுத்திப்பார் நம்ம இரண்டு பேரை தவிர யாரும் இந்த பக்கம் இல்லை. அதோ பார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி கொஞ்சம் பேர் நிக்குறாங்க, சரி எனக்கு ஒரு உதவி பண்ணு தம்பி
அதோ தெரியுது பார் அந்த கடையில போய் ஒரு தீப்பெட்டி வாங்கினு வரீயா. எனக்கு கடலுக்கு வந்த தம்மடிக்காமல் இருக்க முடியாது. ப்ளீஸ் டா"
கண்ணன் அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தான். அவர் அவனை பார்த்தபடி
"என்னடா தம்பி போமாட்டியா, இந்தா பத்து ரூபாய் போய்டுவா". அவன் அப்பவும் சும்மா நின்றுக் கொண்டு இருந்தான்.
"சரி இந்தா இருப...முப்பது ரூபா போய்டுவா" என்றார். கண்ணன் எதோ யோசித்தவனாக காசை வாங்கிக் கொண்டு, ஓடிப்போய் தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தான். அதை அவன் தரும் முன் அவனிடம்
இருந்து பிடிங்கி, சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அந்த புகையை குடல் வரை இழுத்து அனுபவித்து வெளியே விட்டார். கண்ணன் அவன் வந்த வேலையை மறந்து அவரின் செயல்களை பார்த்துக் கொண்டு நின்றான்.
"என்னடா தம்பி அப்படி பார்க்குற, நான் எப்பவும் கடலுக்கு வந்தால் தம் அடிப்பேன். இன்னிக்கு எதோ டென்சன்ல தீப்பெட்டி வாங்க மறந்துட்டேன், நல்லவேளை நீ தான் கடவுள் மாதிரி வந்த"
முதல் முறையாக கண்ணன் சிரித்தான், அவனை இதுவரை யாரும் புகழ்ந்தது இல்லை, உண்மையில் யாரும் அவனுக்கு இல்லை
"சார் என்ன சார் இது, சாதாரண தீப்பெட்டி வாங்கி கொடுத்ததுக்கு என்னை கடவுள் ஆக்கிட்டீங்க"
பெரியவர் சத்தமாக சிரித்தார் "அப்படி இல்லடா தம்பி, தேவையான இடத்துல உதவி செய்தவர்கள் எல்லாரும் கடவுள் தான், அது தீப்பெட்டி வாங்கி தந்தாலும் சரி, தீயில் இருந்து காப்பாற்றினாலும் சரி" என்று புகையை இழுத்து விட்டார்.
கண்ணனுக்கு சந்தோஷம் அதிகமானது. நன்றாக இருட்டி இருந்தது, சோலார் வெளிச்சத்தில் பூச்சிகள் சந்தோஷமாக வட்டமிட்டது. அவனுடைய பாக்கெட்டில் இருந்து வந்த பாட்டில் சத்தத்தை கேட்டுவிட்டு
"என்ன தம்பி தண்ணி அடிக்க வந்தீயா" என்றார் அவன் தோளை தொட்டு. அவன் பதில் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தான், கொஞ்ச நேரம் பொறுத்து
"இல்ல சார், நீங்க நினைக்கிற மாதிரி இது சாராயம் இல்ல சார், விஷம்..... பூச்சி மருந்து" என்றான்.
அவர் எந்த வித சலனமும் காட்டாமல் "என்னப்பா தோட்டத்துக்கு வாங்கினு போறீயா" என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் கண்களில் கண்ணீருடன்
"இல்ல சார் நான் குடிக்க போறேன், சாவப்போறேன்" என்றான்.
"ஓ.................................(நீண்ட இடைவேளைக்கு பிறகு) ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்றார்.
"...................... நான் சின்ன வயதில் இருந்து அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். இரண்டு வருஷம் முன்னாடி எனக்கு வயசு ஆயிடுச்சினு வெளியே அனுப்பிட்டாங்க. என் கையில் காசு இல்ல சார், என்னால இந்த உலகத்துல வாழ முடியில"
"ஆமாப்பா ரொம்ப கஷ்டம் தான், நீ இந்த முடிவ முன்னாடியே எடுத்து இருக்கனும்பா. இவ்வளவு நாள் வேஸ்டு பண்ணிட்டியே" என்றார் பெரியவர். கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியவர் தொடர்ந்தார்.
"சரி தம்பி நான் கிளம்புறேன், ஆ அப்புறம் சொல்ல மறந்துட்டேன், அந்த பூச்சி மருந்து கான்சண்ட்ரேட்டடா, எங்க வாங்கின"
".......................நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை,............... இதை நான் வாங்கல சார், கடையில் இருந்து திருடினேன்"
"ஓ அப்படியா, ஏன் கேக்குறனா. என் நண்பன் ஒருத்தன் சின்ன வயசுல இப்படி தான் பூச்சு மருந்தை குடித்து விட்டான். ஆனால் சாகல கண் பார்வை போயிடுச்சி, குடல் வெந்து போச்சு, பாவம் தண்ணி கூட குடிக்க
முடியாம இரண்டு வருஷம் நரக வேதனை பட்டு செத்தான். அதனால தான் கேட்டேன் தம்பி, சரி நான் வரேன்"
"அய்யய்யோ அப்படியா..................................... இப்ப என்ன சார் பண்றது, ஆ நீங்க கொடுத்த காசுக்கு எதாவது விஷம் வாங்கி சாப்பிடுவேன், அதற்க்காக தான் உங்ககிட்ட இருந்து நான் காசு வாங்கினேன்." என்றான் சோகமாக. பெரியவர் அவனின் தோளில் கையை போட்டபடி
"தம்பி நீ இந்த உலகத்தில் பிறந்தது இந்த கடல்கரையில் அனாதையாக சாவதற்க்கு இல்லை. நீ பிறக்கும் பொழுது அனாதையாக இருந்து இருக்கலாம். ஆனால் நீ சாகும் பொழுது அனாதையாக சாவக்கூடாது. அதைவிட ஒரு மனிதனுக்கு அவமானம் ஏதும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையில் வரும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீ தான் காரணம். ஒட்டப்பந்தையத்தில் ஒருத்தன் ஒட ஆரம்பிக்கும் பொழுதே அவன் ஜெயிப்பான இல்லையான்னு அவனுக்கு தெரியும். அதுபோல இந்த இரண்டு வருடத்தில நீ என்ன நிஜமா உழைச்சனு உனக்கு நல்ல தெரியும் தம்பி. ஒரு பத்து வருஷம் கழித்து நீ கண்டிப்பா உன் மனைவி, குழந்தைகள் கூட இந்த கடற்கரைக்கு வந்து இப்போ எடுத்த முடிவுக்காக சிரிப்ப பார். நான் வரேன் தம்பி" என்று நடந்தார்.
கண்ணனுக்கு கண்ணீர் மல்க சிரிப்பு வந்தது, அவனுடைய சின்ன பையன் வந்து கண்ணனின் காலை பிடித்து இழுத்து
"டாடி வாங்க டாடி தண்ணியில இறங்கலாம், வாங்க டாடி"
"வேண்டாம் சுப்பு செல்லம் மம்மி திட்டுவாங்க டா" என்று குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவியுடன் கண்ணன் தன்னுடைய காரை நோக்கி நடந்தான்..............................................
கண்ணனிடம் பேசி விட்டு பெரியவர் வேகமாக நடந்தார், கண்ணன் கொஞ்ச நேரம் அவர் போவதையே பார்த்தபடி நின்றான், பின் உடைந்த குரலில்
"சார் ரொம்ப தாங்கஸ் சார். என் பேரு கண்ணன் உங்க பேரு என்ன சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று கத்தினான் தூரத்தில் போகும் பெரியவரை பார்த்து.
"என் பேருருருருருருரு...... சுப்பிரமணிணிணிணிணிணிணிணி................" என்று நடந்து அப்படியே இருட்டில் மறைந்தார் கண்ணனின் வாழ்க்கை விளக்கை ஏற்றி விட்டு.