rambal
03-09-2003, 06:34 AM
சிறுவர் பூங்கா...
அரசுக்கு சொந்தமான
காலி நிலமொன்று..
அதில் ஒரு வேப்பமரம்
இருந்தது...
காலை நேரம்
முதியவர்களின்
பல் துலக்க..
மதிய நேரம்
இதமாய் காற்றை
விரவி சுகந்தம் தர..
மாலை நேரம்..
என் போன்ற
சிறார் விளையாட..
எல்லா நேரமும் ஏதாவதொரு
காகமோ குயிலோ
அல்ல இன்ன பிற பறவையோ
சங்கீதம் மீட்டிக் கொண்டிருக்கும்...
சில பறவைகளுக்கு
வீடுமாய்..
சின்னஞ்சிறு புழுக்களுக்கு
பிரபஞ்சமாய்..
இந்த பூரிப்பில்
இருந்த வேப்பனுக்கு
வந்தது தொல்லை
அரசாங்க உத்தரவினால்..
சிறுவர் பூங்கா கட்ட
வெட்டப்பட்டுவிட்டது மரம்..
வேப்பமரத்தில்
விளையாடிக்கழித்த பொழுதுகளில்
ஏற்பட்ட சந்தோசம்
ஏனோ சிறுவர் பூங்காவில் இல்லை..
அரசுக்கு சொந்தமான
காலி நிலமொன்று..
அதில் ஒரு வேப்பமரம்
இருந்தது...
காலை நேரம்
முதியவர்களின்
பல் துலக்க..
மதிய நேரம்
இதமாய் காற்றை
விரவி சுகந்தம் தர..
மாலை நேரம்..
என் போன்ற
சிறார் விளையாட..
எல்லா நேரமும் ஏதாவதொரு
காகமோ குயிலோ
அல்ல இன்ன பிற பறவையோ
சங்கீதம் மீட்டிக் கொண்டிருக்கும்...
சில பறவைகளுக்கு
வீடுமாய்..
சின்னஞ்சிறு புழுக்களுக்கு
பிரபஞ்சமாய்..
இந்த பூரிப்பில்
இருந்த வேப்பனுக்கு
வந்தது தொல்லை
அரசாங்க உத்தரவினால்..
சிறுவர் பூங்கா கட்ட
வெட்டப்பட்டுவிட்டது மரம்..
வேப்பமரத்தில்
விளையாடிக்கழித்த பொழுதுகளில்
ஏற்பட்ட சந்தோசம்
ஏனோ சிறுவர் பூங்காவில் இல்லை..