அகத்தியன்
16-12-2008, 04:56 PM
இன்னும்
நான் சித்தியடையவில்லை
பாடம்- மனிதர்கள்
உன் சிரிப்புக்களின் அரத்தம் என்ன நண்பனே?
உண்மையினை ஒளிக்கின்றாயா?
உண்மையாய் ஒளிர்கின்றாயா?
மனிதர் பற்றி கற்க இன்னும் நான் தோற்றுக்கொண்டே………
வாழ்வின் அர்த்தங்கள் தப்பிதமாகும் போது அழகான ஒரு பெயரிடுகின்றாய்- அனுபவங்கள் என……… ஆனாலும் உன் அனுபவங்களின் தப்பிதங்கள் நீ விவாதிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்ளும் விந்தை உனக்கே உனக்கான ஒன்று மட்டுமே….
உபதேசங்களின் இருப்பிடமாக இருப்பாய்…….. சோடினைகளும் ஆடம்பரமும் இன்றி உன் வார்த்தைகள் பிறக்காது. நீதான் உபதேசி உலகம் உன்னை கொண்டாடும்..
யதார்த்தம் என்பது உன் அகராதியில் எங்குள்ளது… உன் உள்ளுள்ள பிணவறைகளில் தேடிப்பார் மனித த்துடன் சேர்த்து புதைத்திருப்பாய்.
நான் சித்தியடையவில்லை
பாடம்- மனிதர்கள்
உன் சிரிப்புக்களின் அரத்தம் என்ன நண்பனே?
உண்மையினை ஒளிக்கின்றாயா?
உண்மையாய் ஒளிர்கின்றாயா?
மனிதர் பற்றி கற்க இன்னும் நான் தோற்றுக்கொண்டே………
வாழ்வின் அர்த்தங்கள் தப்பிதமாகும் போது அழகான ஒரு பெயரிடுகின்றாய்- அனுபவங்கள் என……… ஆனாலும் உன் அனுபவங்களின் தப்பிதங்கள் நீ விவாதிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்ளும் விந்தை உனக்கே உனக்கான ஒன்று மட்டுமே….
உபதேசங்களின் இருப்பிடமாக இருப்பாய்…….. சோடினைகளும் ஆடம்பரமும் இன்றி உன் வார்த்தைகள் பிறக்காது. நீதான் உபதேசி உலகம் உன்னை கொண்டாடும்..
யதார்த்தம் என்பது உன் அகராதியில் எங்குள்ளது… உன் உள்ளுள்ள பிணவறைகளில் தேடிப்பார் மனித த்துடன் சேர்த்து புதைத்திருப்பாய்.