ஆதி
15-12-2008, 03:35 AM
ஒரு கனவு
மீண்டும் பள்ளிக்கு செல்கிறேன்
இம்முறை என்னைச் சுற்றி எத்தனையோ புதியவர்கள்..
அதே ஆசிரியர்கள்..
பழைய வகுப்பு..
நீயும்தான்..
என்னை கண்டதும்
"எப்படி டா இருக்க ?
என்னசெய்ற ?
பாத்து ரொம்ப நாளாச்சில்ல!"
கேள்விகளை அடுக்கியவாறு
என்னருகில் அமர்ந்தாய்..
"நல்லா இருக்கேன்..
வேலை செய்றேன்..
நீ எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கன்டா"
"வாழ்க்கை எப்படி போகுது ?"
மீண்டும் நான்..
"சூப்பரா போகுது டா"
இரண்டு பிள்ளைகள், ஒரு ஆண், ஒரு பெண்..
சொல்லுகையில் கொஞ்சம் வெட்கினாய்..
"உனக்கு கல்யாண ஆய்டுச்சா டா?"
உதட்டைப் பிதுக்கினேன்
பாக்குறாங்களா ?
இல்ல..
"இன்னும் பழசயே நெனச்சுக் கிட்டிருக்கியா ?"
"..........................................................................................................................................................................................
மிக நீண்ட மௌனத்தோடு
உன்னை வெறித்துப் பார்த்திருந்தேன்"
நீ மட்டுமில்ல டா
நானும் நிறையவே இழந்துட்டேன்
ஆனா, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன்
அவர் என்மேல பிரியமா இருக்கார்..
உன் மனதை படிக்க
உன் விழிகளை
இன்னும் ஊடுருவிப் பார்த்தேன்...
எப்போதும் சிந்தும் அந்த சிரிப்பை
எனக்கு கொடுத்தாய்..
"க்**ஸ்"
முடிந்தும் முடியவில்லை கனவும்
உன் மீதான காதலும்..
பி.கு :- கதை வடிவம் கொடுக்கலாம் என்று முயற்சித்தும் கவிதை வடிவமாகத்தான் எழுது முடிந்தது என்றாலும் சில இடங்களில் உரைநடைக் குறுக்கீடு இருப்பதால் இந்தப் பகுதியிலேயே பதிக்கிறேன்..
மீண்டும் பள்ளிக்கு செல்கிறேன்
இம்முறை என்னைச் சுற்றி எத்தனையோ புதியவர்கள்..
அதே ஆசிரியர்கள்..
பழைய வகுப்பு..
நீயும்தான்..
என்னை கண்டதும்
"எப்படி டா இருக்க ?
என்னசெய்ற ?
பாத்து ரொம்ப நாளாச்சில்ல!"
கேள்விகளை அடுக்கியவாறு
என்னருகில் அமர்ந்தாய்..
"நல்லா இருக்கேன்..
வேலை செய்றேன்..
நீ எப்படி இருக்க ?"
"நல்லா இருக்கன்டா"
"வாழ்க்கை எப்படி போகுது ?"
மீண்டும் நான்..
"சூப்பரா போகுது டா"
இரண்டு பிள்ளைகள், ஒரு ஆண், ஒரு பெண்..
சொல்லுகையில் கொஞ்சம் வெட்கினாய்..
"உனக்கு கல்யாண ஆய்டுச்சா டா?"
உதட்டைப் பிதுக்கினேன்
பாக்குறாங்களா ?
இல்ல..
"இன்னும் பழசயே நெனச்சுக் கிட்டிருக்கியா ?"
"..........................................................................................................................................................................................
மிக நீண்ட மௌனத்தோடு
உன்னை வெறித்துப் பார்த்திருந்தேன்"
நீ மட்டுமில்ல டா
நானும் நிறையவே இழந்துட்டேன்
ஆனா, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன்
அவர் என்மேல பிரியமா இருக்கார்..
உன் மனதை படிக்க
உன் விழிகளை
இன்னும் ஊடுருவிப் பார்த்தேன்...
எப்போதும் சிந்தும் அந்த சிரிப்பை
எனக்கு கொடுத்தாய்..
"க்**ஸ்"
முடிந்தும் முடியவில்லை கனவும்
உன் மீதான காதலும்..
பி.கு :- கதை வடிவம் கொடுக்கலாம் என்று முயற்சித்தும் கவிதை வடிவமாகத்தான் எழுது முடிந்தது என்றாலும் சில இடங்களில் உரைநடைக் குறுக்கீடு இருப்பதால் இந்தப் பகுதியிலேயே பதிக்கிறேன்..