View Full Version : கல்லை மட்டும் கண்டால்
மதுரை மைந்தன்
14-12-2008, 02:06 AM
தசாவதாரம்' படத்தில் வந்த கல்லை மட்டும் கண்டால் பாடலைத் தழுவி எழுதிய கவிதை இது
காமம் மட்டும் கொண்டால் காதல் கிடையாது
காதல் மட்டும் கொண்டால் ஊடல் கிடையாது
ஆசை மட்டும் கொண்டால் ஏற்றம் கிடையாது
உழைப்பும் சேர்ந்தால் ஏமாற்றம் கிடையாது
சினம் மட்டும் கொண்டால் குணம் ஆகாது
குணம் உள்ள இடத்தில் சினத்திற்கு இடமேது
வெளித்தோற்றம் மட்டும் கண்டால் நிறைவு ஆகாது
அகத்தோற்றமும் கண்டால் ஏமாற்றம் கிடையாது
கண்ணை மட்டும் வைத்து பெண்ணை எடை போட முடியாது
பெண்ணை மட்டும் அறிந்தால் கண் பார்வைக்கு இடமேது
கருத்துகள் அழகு..
வாழ்த்துகள் மதுரைமைந்தன்!
நிரன்
24-12-2008, 09:39 PM
தசவதாரம் பாடலை மையமாகக்கொண்டு இயக்கிய கவி நன்றாக உள்ளது
இன்றுதான் கண்டேன் பார்த உடனே நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் மைந்தன்
நான் ஒரு திரியை மன்றத்தில் கண்டேன் பாட்டுக்கு பீட்டு என்று
அத்திரியில் நீங்கள் கலக்கலாம் நண்பரே
முயற்சியுங்கள் இது போன்றவற்றிற்கு அத்திரியில் மிகுந்த வரவேற்பு உள்ளது:icon_b:
மதுரை மைந்தன்
25-12-2008, 12:14 AM
கருத்துகள் அழகு..
வாழ்த்துகள் மதுரைமைந்தன்!
நண்பர் இளசு அவர்களே
கொஞ்ச நாளாக நீங்க இல்லாம மன்றத்தில் என்னொட இந்த படைப்புக்கு ஒரு பின்னூட்டமும் இல்லாமல் வாடினேன். நீங்க வந்த உடனே உங்க பதிவைப் பார்த்து எனது நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. தவறாமல் என்னுடய எல்லா படைப்புக்களையும் பாராட்டும் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
மதுரை மைந்தன்
25-12-2008, 12:17 AM
தசவதாரம் பாடலை மையமாகக்கொண்டு இயக்கிய கவி நன்றாக உள்ளது
இன்றுதான் கண்டேன் பார்த உடனே நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் மைந்தன்
நான் ஒரு திரியை மன்றத்தில் கண்டேன் பாட்டுக்கு பீட்டு என்று
அத்திரியில் நீங்கள் கலக்கலாம் நண்பரே
முயற்சியுங்கள் இது போன்றவற்றிற்கு அத்திரியில் மிகுந்த வரவேற்பு உள்ளது:icon_b:
உங்கள் ஆலோசனைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி நண்பர் நிரஞசன். நான் அப்படியே செய்கிறேன்.
பாலகன்
25-12-2008, 12:19 AM
குணம் உள்ள இடத்தில் சினத்திற்கு இடமேது
கோபமுள்ள இடத்தில் குணம் உண்டு என சொல்லக்கேள்வி ம.வீரா..
உங்கள் கவிதை மிக மிக அழகு......
பொம்பளைகளை பார்த்தா கண்ணை குருடாக்கிடுவாங்கன்னு சொல்லிப்பொட்டிங்க, என்னா கண்ணு....
இந்த சிறந்த வரிகளுக்கு 50 இணைய காசுகள் பரிசு
sujan1234
26-12-2008, 01:48 PM
வாழ்த்துக்கள்
ஓவியன்
26-12-2008, 01:52 PM
உல்டா பாணியில் அருமையான கருத்துக்களை இழைத்துத் தந்த மதுரைமைந்தனுக்கு என் வாழ்த்துக்களும்...