PDA

View Full Version : உன்னுள் நான்



நிரன்
13-12-2008, 10:23 PM
காதலியே நீ என்னிடம் இல்லை - உந்தன்
நினைவுகள் மட்டுமே என்னுடன்
காலங்களும் நேரங்களும் இனி எனக்கில்லை
உனக்காக காத்திருப்பதற்கு.

மாண்டு போன நாட்களையே மீட்டுகிறேன் - மீண்டும்
நான் உன்னுள் மீண்டெளுவேனென எண்ணி
என் எண்ணிக்கை என்னிலடங்காதவை
அவையுன்னில் அடங்கவில்லை என்றால்
தயவு செய்து - என்னை
உன்னுள்ளிருந்து மீட்க உதவி செய்.


ஏதோ கவிதை என்டு சொல்லுவாங்க நான் நல்லா கதை எழுதுவன்:D:D:D

தமிழ்தாசன்
13-12-2008, 10:29 PM
ஏதோ கவிதை என்டு சொல்லுவாங்க நான் நல்லா கதை எழுதுவன்:D:D:D

கதை நன்றாகப் போகுது!
கவிதைப்போக்கு இல்லாதது போல் தோன்றினாலும் காதற்போக்கு கனகச்சிதம்.
தொடருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதைகள்.....

நிரன்
13-12-2008, 10:35 PM
கதை நன்றாகப் போகுது!
கவிதைப்போக்கு இல்லாதது போல் தோன்றினாலும் காதற்போக்கு கனகச்சிதம்.
தொடருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதைகள்.....

நன்றி அண்ணா!

அதுதான் கிழே எனக்கு நன்றாக கதை எழுத வரும் என்று போட்டுள்ளேன்
எங்களுக்கும் கவியுணர்வுக்கும் :icon_nono: ஆகவே ஆகாது:D:D

Narathar
14-12-2008, 12:17 AM
காதல் வந்தால்.............
காதலி கூட இருந்தால் - அல்லது
காதலி தூர இருந்தால்
கவிதை தானாகவே வருமென்பார்கள்....

உங்களுக்கு எப்படியோ.......

கவிதை நன்றாகத்தான் இருக்கு!!!!

நடத்துங்க நடத்துங்க........
நம்மாள வாசிக்கத்தான் முடியும்

தமிழ்தாசன்
14-12-2008, 12:38 AM
நன்றி அண்ணா!

அதுதான் கிழே எனக்கு நன்றாக கதை எழுத வரும் என்று போட்டுள்ளேன்
எங்களுக்கும் கவியுணர்வுக்கும் :icon_nono: ஆகவே ஆகாது:D:D

நீங்கள் அழகாகவே எழுதுகிறீர்கள்.
ஆகாதது எதுவுமில்லை. ஆனது ஆனதுதான். ஆதலால் ஆகட்டும் ஆனதெல்லாம்...

நிரன்
14-12-2008, 07:58 AM
காதல் வந்தால்.............
காதலி கூட இருந்தால் - அல்லது
காதலி தூர இருந்தால்
கவிதை தானாகவே வருமென்பார்கள்....

உங்களுக்கு எப்படியோ.......

கவிதை நன்றாகத்தான் இருக்கு!!!!

நடத்துங்க நடத்துங்க........
நம்மாள வாசிக்கத்தான் முடியும்

நன்றி நாரதரே...
ஏதோ ஒரு கெஞ்சம் வருகிறது நாரா..
முயற்சி திரு வினையாக்கும் என்ற ரீதியில் முயல்கிறேன்.

மற்றும் அடியேனின் வேண்டுகோள்... தங்களின் ஒரு கவிதையை
படிக்க வேண்டும் என்று ஆவலக (அவாவில்) உள்ளேன் அதற்கு ஒரு முறை
வழி வகுத்து விடுங்களேன்..
அடியேன் போன்றோர் ஆனந்தமடைவோம் முடியாது என்று
சொல்லி விடதீா் நாரா நீங்கள் முற்றும் அறிந்தவரல்லவா...;)
உங்களாள் முடியாததென்பது எதுவுமில்லை

நிரன்
14-12-2008, 08:03 AM
நீங்கள் அழகாகவே எழுதுகிறீர்கள்.
ஆகாதது எதுவுமில்லை. ஆனது ஆனதுதான். ஆதலால் ஆகட்டும் ஆனதெல்லாம்...

நன்றி அண்ணா
உங்கள் கருத்துக்கள் என்போன்றோருக்கு பெரிதும் ஒரு ஊண்டுகோள்.
உங்கள் பின்ணுட்டங்களை நான் மிகவும் ரசிக்கிறேன்
:icon_08: