அன்புரசிகன்
13-12-2008, 05:19 AM
http://img19.picoodle.com/img/img19/3/12/13/f_high2m_178e314.jpg
திருட்டு தொழிலை கைவிட்ட கிராம மக்களுக்கு போலீசார் விருந்து கொடுத்து கவுரம் தந்தனர்.
பீகாரில் பாபுவா மாவட்டத்தில் உள்ளது தும்ரைத் தோலா கிராமம். இந்த கிராமத்தில் 150 குடிசை வீடுகள்தான் உள்ளன.
கிராமத்தில் வசிக்கும் ஆண்களின் ஒரே தொழில் திருட்டு, கடத்தல்தான். மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான கடத்தல், திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தும்ரைத் தோலா கிராமத்தை சேர்ந்தவரின் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கும்.
இதனால், எங்கு குற்றங்கள் நடந்தாலும் உடனடியாக போலீசார் அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்துவார்கள். இதில் குற்றவாளிகளும் சிக்குவார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை திருத்த அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் தீவிர முயற்சி செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தும்ரைத் தோலா கிராமத்துக்கு சென்ற ராஜேஷ் குமார். “திருட்டு தொழிலை கைவிடுங்கள் உங்கள் மறுவாழ்வுக்கு நான் வழி செய்கிறேன். திருந்தி வாழ்ந்தால் உங்களுக்கு விருந்து படைக்கிறேன்ÕÕ என்றார்.
இதையடுத்து, படிப்படியாக குற்றங்கள் குறையத் தொடங்கியது. திருந்தியவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வாய்ப்பு தர போலீசாரே ஏற்பாடு செய்தனர். விளைவு கடந்த ஓராண்டில் அந்த பகுதியில் குற்றங்கள் கணிசமாக குறைந்துவிட்டன.
கடந்த சில மாதங்களாக தும்ரைத் தோலா கிராமவாசிகள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
இதனால், சொன்ன சொல்லை காப்பாற்ற, கடந்த செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் எல்லோருக்கும் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் விருந்து கொடுத்தார். பிரியாணி, பருப்பு கூட்டு, அல்வா போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
===============
நன்றி - தினகரன் இணையம்...
உண்மையில் காவல்த்துறை அதிகாரி ராஜேஷ்குமாருக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி தான்.
திருட்டு தொழிலை கைவிட்ட கிராம மக்களுக்கு போலீசார் விருந்து கொடுத்து கவுரம் தந்தனர்.
பீகாரில் பாபுவா மாவட்டத்தில் உள்ளது தும்ரைத் தோலா கிராமம். இந்த கிராமத்தில் 150 குடிசை வீடுகள்தான் உள்ளன.
கிராமத்தில் வசிக்கும் ஆண்களின் ஒரே தொழில் திருட்டு, கடத்தல்தான். மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான கடத்தல், திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தும்ரைத் தோலா கிராமத்தை சேர்ந்தவரின் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கும்.
இதனால், எங்கு குற்றங்கள் நடந்தாலும் உடனடியாக போலீசார் அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்துவார்கள். இதில் குற்றவாளிகளும் சிக்குவார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை திருத்த அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் தீவிர முயற்சி செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தும்ரைத் தோலா கிராமத்துக்கு சென்ற ராஜேஷ் குமார். “திருட்டு தொழிலை கைவிடுங்கள் உங்கள் மறுவாழ்வுக்கு நான் வழி செய்கிறேன். திருந்தி வாழ்ந்தால் உங்களுக்கு விருந்து படைக்கிறேன்ÕÕ என்றார்.
இதையடுத்து, படிப்படியாக குற்றங்கள் குறையத் தொடங்கியது. திருந்தியவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வாய்ப்பு தர போலீசாரே ஏற்பாடு செய்தனர். விளைவு கடந்த ஓராண்டில் அந்த பகுதியில் குற்றங்கள் கணிசமாக குறைந்துவிட்டன.
கடந்த சில மாதங்களாக தும்ரைத் தோலா கிராமவாசிகள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
இதனால், சொன்ன சொல்லை காப்பாற்ற, கடந்த செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் எல்லோருக்கும் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் விருந்து கொடுத்தார். பிரியாணி, பருப்பு கூட்டு, அல்வா போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
===============
நன்றி - தினகரன் இணையம்...
உண்மையில் காவல்த்துறை அதிகாரி ராஜேஷ்குமாருக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி தான்.