PDA

View Full Version : இறந்த பின்



ரங்கராஜன்
10-12-2008, 07:08 AM
வணக்கம் நண்பர்களே
சமீபத்தில் என்னை மிகவும் யோசிக்க வைத்த, அலறவைத்த, விஷயத்தை பற்றி உங்களிடம் சொல்ல உள்ளேன், இறந்தபின் மனிதர்கள் என்ன ஆவார்கள்? இது காலம் காலமாக நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வி, விடை இதுவரை இல்லை, அப்படி இருந்தாலும் அதற்க்கு சாட்சி இல்லை. என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை கதையை, அதுவும் நான் நேராக பார்த்த உண்மை சம்பவத்தை பற்றியது.


என்னுடைய நண்பனின் அண்ணன் பெயர் ராஜு (திருமணமாகதவர்), அவரும் அவருடைய நண்பன் மோகனும் (ஒரு குழந்தைக்கு தந்தை) இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி மோகன் அந்த இடத்திலே இறந்துவிட்டார். ராஜு பலத்த அடியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தான், இரண்டு நாளில் 5 லட்ச ரூபாய் வரை செலவானது. அவனுடைய கை, கால்களில் பலத்த அடி, ஐந்து நாளுக்கு அப்புறம் மருத்துவமனை ஆட்கள் இவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டனர். "பிழைப்பது கஷ்டம் என்று" நாங்களும் அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு ராஜுவின் காலையும், கையையும் வெட்டி எடுத்து விட்டனர், அன்று மாலை ராஜு கண் விழித்து சகஜமாக பேசினான், தனக்கு சென்னை பிடிக்கவில்லை என்றும் தஞ்சாவூர் போக வேண்டும் என்று சொன்னான். நாங்கள் எல்லாம் அவனை அதிர்ச்சியாக பார்த்தோம், ஏனென்றால் அவனின் சொந்த ஊரே சென்னை தான், எதற்க்கு அவன் தஞ்சாவூர் போக வேண்டும் என்று சொல்கிறான் என்று ஓரே குழப்பம். மோகனுடைய சொந்த ஊர் தான் தஞ்சாவூர். நாங்கள் அவனை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது அவன் எங்களை நோக்கி

"எங்கே என் மனைவி, குழந்தை எல்லாம் யாரையும் காணோம்" என்றான்.

எங்களுக்கு இன்னும் அதிர்ச்சி அவனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. ராஜுவின் அப்பா ராஜுவை நோக்கி

"என்ன ராஜு, என்னடா ஆச்சி உனக்கு" என்றார்

"என்னது ராஜுவா, அவன் அப்போவே விபத்துல செத்துட்டான், நான் மோகன்" என்றான்.

எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனே ராஜுவின் சித்தப்பா அவனிடம்

"என்ன ராஜு நான் தாண்டா, சித்தப்பா டா, தோபாரு தம்பிடா"

"நீங்க ராஜுவின் சித்தப்பா, இது ராஜுவின் தம்பி, எங்கே என் மனைவியும் குழந்தையும் அவங்கள வரச் சொல்லுங்க, நான் மோகன், ராஜு அப்பவே செத்துட்டான்" இதையே சொல்லிக் கொண்டு
இருந்தான்.

எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, தீடீர் என அவன்

"என் குழந்தையையும், என் மனைவியையும் தயவு செய்து நல்லபடியா காப்பாத்துங்க" என்று கூறிவிட்டு இறந்துவிட்டான், நாங்கள் அனைவரும் சிலையை போல நின்று விட்டோம்.

அப்போ இறந்தது யார், ராஜுவின் உடலில் இருந்தது மோகனா?, ஆத்மா வேறு உடல் வேறு என்று கூறுவது எல்லாம் உண்மை தானா?, இந்த சம்பவத்தை பார்த்ததில் இருந்து எனக்கு மனிதர்கள் மீதும், பாசத்தின் மீதும் மதிப்பு அதிகமானது. ஆத்தமா என்பது அவ்வளவு சக்திவாய்ந்ததா?

ஆதவா
10-12-2008, 07:24 AM
வணக்கம் நண்பர்களே
சமீபத்தில் என்னை மிகவும் யோசிக்க வைத்த, அலறவைத்த, விஷயத்தை பற்றி உங்களிடம் சொல்ல உள்ளேன், இறந்தபின் மனிதர்கள் என்ன ஆவார்கள்? இது காலம் காலமாக நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வி, விடை இதுவரை இல்லை, அப்படி இருந்தாலும் அதற்க்கு சாட்சி இல்லை. என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை கதையை, அதுவும் நான் நேராக பார்த்த உண்மை சம்பவத்தை பற்றியது.

அப்போ இறந்தது யார், ராஜுவின் உடலில் இருந்தது மோகனா?, ஆத்மா வேறு உடல் வேறு என்று கூறுவது எல்லாம் உண்மை தானா?, இந்த சம்பவத்தை பார்த்ததில் இருந்து எனக்கு மனிதர்கள் மேலும் பாசத்தின் மீதும் மதிப்பு அதிகமானது. ஆத்தமா என்பது அவ்வளவு சக்திவாய்ந்ததா?


இறந்தபின் அவர்கள் என்னாவார்கள் என்பதைக் குறித்து நாம் பேச இயலாவிட்டாலும், இறந்தபின்னர், அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்னாவார்கள்???

என் அண்ணன் இறந்ததை முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.. இறந்தபின்னர் நானோ, தினமும் நினைவுகளாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.. அவன் நேற்று இறந்ததைப் போன்று இருக்கிறது....

இறந்தவனுக்கு எந்த வலியும் இல்லை,
இருப்பவனுக்குத்தான் எல்லாம்...........

உங்கள் நிகழ்ச்சியின் மூலம் அறிவது..............................................

அவர் தன் நண்பரை மிகவும் நேசித்திருப்பாரோ???

எனக்கு ஆன்மா, ஆவி ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை........... :)

ரங்கராஜன்
10-12-2008, 07:34 AM
அவர் தன் நண்பரை மிகவும் நேசித்திருப்பாரோ???

எனக்கு ஆன்மா, ஆவி ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை........... :)

நன்றி ஆதவா
நீங்கள் நினைப்பது போல ஆன்மா, ஆவியெல்லாம் சினிமாவில் காட்டுவது போல இருப்பது இல்லை, உங்களுடைய அண்ணனின் ஆத்மா உங்களுக்கு வரும் தீமையில் இருந்து உங்களை காக்கும், தவறு செய்யும் பொழுது உங்களை தடுக்கும். எவ்வளவோ யோசித்து எடுத்த முடிவு ஒரு நிமிஷத்தில் நாம் மாற்றுகிறோமே, அது எல்லாம் நல்லவர்களின் அதாவது உங்கள் மேல் தீராத அன்பு வைத்திருப்பவர்களின் ஆசி தான், அதான் ஆன்மா, ஆவியெல்லாம்.

ஆதி
10-12-2008, 07:44 AM
இரவு பத்து மணி இருக்கும் எங்கள் பக்கதுவீட்டு அக்கா டீ.வி பார்த்திருந்திருக்கார், தண்ணி குடிக்க போவதாக சொல்லிவிட்டு சமயம் ரூம் சென்றிருக்கிறார்..

சற்று நேரம் கழித்து அக்காவின் அம்மா எதேச்சியாக சமயலறைக்கு சென்றிருக்கிறார்..

அக்கா விட்டத்தில் கயிறைக் கட்டி தூக்கு போட்டுக் கொள்ள ஏற்பாடுகள் செய்திருந்திருக்கிறார்..

அதிர்ந்த அவர்களின் தாய், ஏய் சாந்தி என்னடி பண்ற என்று கேட்டிருக்கிறார்..

வா.. வா... இரண்டு பேரும் சேர்ந்து தூக்கு மாட்டிக்கலாம் என்றாராம் அக்கா..

குலை நடுங்க அக்காவின் அம்மா இட்ட கூச்சலில் தெருவே அன்று எங்கள் வீட்டு முன் தான் கூடி இருந்தது..

எந்தையும் அக்காவின் தந்தையும் நைட் ஷிப்ட் போயிருந்ததால் என் அம்மாவும் அக்காவின் அம்மாவும் மாரியம்மன் கோவில் பூசாரியை அழைத்து வர என்னை காவல் வைத்துவிட்டு சென்றார்கள்..

நான் அக்காவின் அருகில் சென்று..

அக்கா.. அக்கா.. என்றேன்..

பதிலில்லை..

ஏன் கா தலையெல்லாம் இப்படி விரிச்சு போட்டுட்டு உக்காதிருக்கீங்க.. என்றேன்..

பதிலில்ல்லை..

ஏன் கா பேசவே மாட்றீங்க என்று தோளில் கைவைத்து உலுப்பினேன்..

நிமிர்ந்து விழிகளை உருட்டி ஒரு பார்வைப் பார்த்தார்கள்.. கப்சிப் என்று அப்படியே அமர்ந்துவிட்டேன்..

சிறிது நேரம் கழித்து பூசாரி வந்தார், என்ன என்னமோ செய்தார்கள் அக்கா சரியாகிவிட்டார்..

அதற்கப்புறம் இதுவரை அக்கா அவ்வாறு ஒருமுறையும் நடந்துக் கொள்ளவில்லை..

இன்று அக்காவுக்கு கல்யாணமாகி குழந்தைகளுடன் சுகமாக இருக்கிறார்..

நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வு..

அன்புரசிகன்
10-12-2008, 08:29 AM
நம்மை எல்லாம் கடந்து ஒரு சக்தி உண்டு என்பதை உணர்த்துகிறது....

இறைநேசன்
10-12-2008, 12:57 PM
மனித அறிவுக்கு எட்டாத சக்திகள் உள்ளது என்பதை உணர்த்தும் பல நிகழ்ச்சிகள் உலகில் நடந்துகொண்டேத்தான் இருக்கின்றன!

வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பதை, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி வந்துள்ள பல ஆயிரம் மக்கள் எழுதியுள்ள NEAR DEATH EXPERIANCE (NDE களை) கூகல் SEARCHல் படித்துப்பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்!

ரங்கராஜன்
10-12-2008, 01:42 PM
தங்கள் கருத்துகளை சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள்.

தமிழ்தாசன்
10-12-2008, 02:32 PM
விடயப்பகிர்வு சிந்தைக்குரியது.

உண்மைச்சம்பவம் சற்றே திகைப்பையும் மனித சிந்தையையும் திணறவைக்கிறது.

ஒரு நாள் இல்லை பல நாள் இல்லை இடக்கிடையில் இது பற்றி சிந்திப்பது உண்டு.
ஒரு நாள் இரவு என் மூச்சேதிணறும் அளவுக்கு என் மனதில் மரணத்தின் கேள்வி எழுந்தது. திடீரென இறந்தால் அடுத்த நிலை என்ன என்பது யாருக்கும் புரியாத கேள்வி? அறிவின் எல்லைகள் ஓரளவே செல்லுகின்றன என்பது உண்மை.
பதில் தெரிந்தால் அதிலிருக்கும் ரகசியம் வெளிச்சமானால் ....????ஃஃஃஃ
என்னைப் பொறுத்தவரையில் வாழும்போது நல்லவற்றை (முடிந்தவரை) புரியவேண்டும். .


மனிதமே!

'வாழும்போது வாழ்ந்துவிடு
வாழும்போது வாழ்த்துஎடு
வாழும்போது வாழ்த்திவிடு
வாழ்ந்தபின்னும் வாழ்ந்திரு
மற்றவரையும் வாழவிடு
மற்றவருடனும் சேர்ந்து வாழ்
மற்றவர்க்கும் வாழ்வில் ஏதும்கொடு
பிறந்து விட்டால் படைத்து விடு
இறந்து விட்டாலும் படைத்து விடு'

அக்னி
10-12-2008, 02:44 PM
மூர்த்தி அவர்களும், ஆதி அவர்களும்,
திகிலும் திகைப்புமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

அமானுஷ்ய நிகழ்வுகள், நிகழ்வதை அவ்வப்போது அறிகின்றோம்.
ஆனால், அவை எம் கண்ணெதிரே நிகழும்போது,
திகிலாகத்தான் இருக்கும்.

பகிர்தலுக்கு நன்றி...

தமிழ்தாசன் அவர்களின் பதிவுக்கு விசேட பாராட்டுக்கள்...

நிரன்
10-12-2008, 02:50 PM
சாகிற நாள் தெரிந்தல் வாழ்ற நாள் மட்டுமில்ல வாழ்வே நரகமாகிடும் என்று கூறினார்கள் அதுவும் சரிதான். நாம் சதாரண மனிதா் நம்மையறியாமலும் நமக்குத் தெரியாமலும் உலகில் பல சக்திகள் இருக்கின்றன. இதனை ஆதாரப்படுத்தும் வகையில் இல்லை. பல ஆராட்சியாளா்களே இதில் தோற்றிருக்கின்றனா் என்றுதான் கூறலாம்.
எல்லாரும் ஒரு நாள் மண்ணை விட்டு அகல்வோம் அப்பொளுது அந்த ரகசியத்தை அறிந்து கொள்வோம்... (இன்டா்நெட் வசதி இருந்தால் தமிழ் மன்றத்து தருகிறேன் விண்ணுலக வாழ்வு பற்றி:aetsch013:)

தமிழ்தாசன்
10-12-2008, 03:02 PM
சாகிற நாள் தெரிந்தல் வாழ்ற நாள் மட்டுமில்ல வாழ்வே நரகமாகிடும் என்று கூறினார்கள் அதுவும் சரிதான். நாம் சதாரண மனிதா் நம்மையறியாமலும் நமக்குத் தெரியாமலும் உலகில் பல சக்திகள் இருக்கின்றன. இதனை ஆதாரப்படுத்தும் வகையில் இல்லை. பல ஆராட்சியாளா்களே இதில் தோற்றிருக்கின்றனா் என்றுதான் கூறலாம்.
எல்லாரும் ஒரு நாள் மண்ணை விட்டு அகல்வோம் அப்பொளுது அந்த ரகசியத்தை அறிந்து கொள்வோம்... (இன்டா்நெட் வசதி இருந்தால் தமிழ் மன்றத்து தருகிறேன் விண்ணுலக வாழ்வு பற்றி:aetsch013:)


மிக்க மகிழச்சி அக்னி அவர்களின் விசேட பாராட்டுதலுக்கு.

நிரஞ்சன் அவர்களே!
நகைச்சுவையுடன் நிறைவில் பதில் இருந்தாலும்.
நீங்கள் குறித்ததுபோல் விஞ்ஞாணம் வளர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
காரணம், அந்த அறியாத சக்தியே அதற்கு வழிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள்.

ரங்கராஜன்
10-12-2008, 03:28 PM
நன்றி நண்பர்களே
உங்களின் கருத்துகளுக்கு, எனக்கு தெரிந்து, நான் பார்த்து, படித்தது வரை சாகும் தருவாயில் இருக்கும் மனிதர்களுக்கு அமானுஷ்ய சக்தி இருக்கும். ஏன் பிரபல எழுத்தாளரான திரு.சுஜாதா மருத்துவமனையில் கடைசியாக இருக்கும் தருவாயில் நாலாயிரதிவ்யபிரபந்தத்தை தன்னுடைய ஆதர்ஸன சீடன் தேசிகனை படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தார், தீடீர் என்று அவர் வைணவர்கள் இறக்கும் தருவாயில் கேட்க வேண்டிய நாலாயிரதிவ்யபிரபந்தத்தின் பாடல்களை படிக்கச் சொன்னார், தேசிகனும் தயங்கியவாரே அதை படித்தார், படிக்கும் பொழுதே திரு.சுஜாதா ஐயாவின் உயிர் சென்றுவிட்டது.


அதை விட என் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சாட்சி, என்னுடைய அம்மாவின் மரணத்தை பற்றி நான் ஏற்கனவே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18126 பக்கத்தின் கடைசியில் விவரமாக நடந்த நிகழ்வை குறிப்பிட்டு உள்ளேன். நாங்கள் காரில் திருப்பதி செல்லும் பொழுது, என் அம்மா விபத்தில் இறக்கும் சில மணித்துளிகளுக்கு முன் அவளின் அனைத்து விதமான முகபாவங்களை காட்டினாள், திடீர் என்று அழுதாள், சிரித்தாள், கோவப்பட்டாள், முறைத்தாள், அடித்தாள், வெட்கப்பட்டாள் அனைத்து செய்தாள். நான் டிரைவர் பக்கத்தில் முன்னாடி அமர்ந்து இருந்தேன், விபத்துக்கு உள்ளான காரின் புகைப்படத்தை கீழே தருகிறேன் பாருங்கள், அந்த கொடூரமான விபத்தில் இருந்து நான் ஒரு சின்ன கீறல் கூட ஏற்படாமல் தப்பித்தேன், என்னை என் அம்மா உயிரை கொடுத்து காப்பாற்றி இருக்காள் என்பது உங்களுக்கு புரியும், இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ஒரு சக்தி இருப்பது உண்மை தான்.
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_img024__Small_.jpg

தமிழ்தாசன்
10-12-2008, 03:40 PM
நெஞ்சம் ஒரு கணம் பதைபதைத்ததப்போனது அன்பரே!
உங்களுக்க ஆறுதல்கள் உண்டாகட்டும்.
நீங்கள் சிறுகீறலின்றி தப்பியமையே!
இதுவே அறியாததின் அற்புதம். அம்மாவைப்பறித்தமை இதுவே அறியாததின் அடாவடியும் கூட.
தந்து விட்டு பறிப்பது எவ்வளோ கொடுமை.

ஆறுதல் மட்டுமே கூறுவதை எண்ணி கவலைகொள்கிறேன். அன்பரே!
வாழ்க உங்கள் பணி.
வாழ்க உங்கள் ஆழமான அன்பு எண்ணம்.

நிரன்
10-12-2008, 07:01 PM
உங்கள் தாயா் அவா் உயிரை கொடுத்து உங்களைக் காப்பாற்றியுள்ளார்.
பெதுவாக பெண்கள் பிரசவத்தின் போது பெண்கள் செத்துப் பிழைக்கின்றனா் மறு பிறவி என்றும் சொல்லலாம். உங்களுடைய தாயார் உங்களுக்காகவே உயிர் துறந்திருக்கிறார். தங்கள் தாயாரின் உடலதான் சாம்பலாகி விட்டது உங்கள் நலனை விரும்பும் தங்கள் தாயாரின் ஆசீா்வாதம் உங்களை ஒரு நல்ல பாதையில் மட்டுந்தான் கெண்டு செல்லும்.
கலக்கம் வேண்டாம் கலகலப்பு மட்டுமே வாழ்க்கையின் கலப்பை...

minmini
12-12-2008, 02:35 PM
இறந்தபின் என்ன நடக்கும் என்பது மனிதனுக்கு அப்பாற் பட்ட செயல்
ஆனால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது மரணத்தைப்பற்றி சிந்திக்க வெண்டும் அப்படி சிந்தித்தால் நாம் பாவங்கள்செய்வது குறைவு
இருக்கும் வரைக்கும் நல்லவனாய் இரு
மற்றவர்களுக்கு நல்லதை செய்

நல்லவர்களுக்கு தாம் இறக்கப்போவது தெரியும் என்பார்கள்
இதுவும் எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்பது தெரியாது
இறந்தபின் நமக்கு இன்னொரு வாழ்க்கை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன் :)

msvasan
13-12-2008, 04:41 AM
இப்படி நடப்பதற்க்கு சக்தி உண்டு, அதுவும் உங்க அம்ம உங்களுக்கு எப்பவும் தன் உயிரை தருவார்கள்

arun
22-12-2008, 06:55 PM
நம்மை அறியாமல் ஒரு சக்தி இருப்பது உண்மை என்பதனை இது போல சம்பவங்கள் உணர்த்துகின்றன

பாலகன்
22-12-2008, 07:08 PM
இந்த திரியின் ஆச்சர்யமூட்டும், உண்மைத்தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது....