PDA

View Full Version : அச்சு (சிறுகதை)



ரங்கராஜன்
05-12-2008, 04:26 PM
கதரு3குரஜo3ுரஸoஜு

அமரன்
05-12-2008, 05:22 PM
இன விருத்தி செய்ய வெண்டியது, தூண்டுவது இயற்கை. அதற்காக கல்யாணம் செய்ய வேண்டியது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயம் தமிழர் மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எதிர்வாதங்கள் இருந்தாலும் அதனை நான் ஆதரிப்பேன். அந்த இனவிருத்தியின் உணர்வு பூர்வமான வடிவம் குழந்தைப் பாசம். அதை பொருட்படுத்தி வரையப்பட்ட சிறுகதை.

ஒரு வாச(அ)கத்துக்கும் உருகார் சிறு வாச(அ)கத்துக்கு உருகுவார் என்பது கதையின் இருதயத்தின் ஒருபக்கம். எனக்கென ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா என்ற மனவியல் இருதயத்தின் மறுபக்கம். அந்த ஓட்டத்தில் உயிருடன் உலவி விட்டு சென்று விட்ட கதை.

பாராட்டுகள் மூர்த்தி.

அய்யா
05-12-2008, 05:32 PM
பேசும் பொற்சித்திரமான அச்சு, ரம்யாவின் இல்லற வண்டி ஓடத்துவங்கவும் அச்சாக இருந்தது இனிமை. சிறுபிள்ளைகள் செய்யும் குறும்புச்செயல்கள் அனைத்தையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளீர்கள் மூர்த்தி.

சிவா.ஜி
06-12-2008, 05:09 AM
மன்னிக்கவும் மூர்த்தி...தொடர்ந்து படிக்க முடியல....இத்தனை எழுத்துப்பிழைகள் என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. எத்தனை நல்ல கதையாக இருந்தாலும் இப்படி எக்கச்சக்க எழுத்துப்பிழையோடு இருந்தால்......மன்னிக்கவும் என்னால் படிக்க முடியவில்லை.

Keelai Naadaan
07-12-2008, 05:21 AM
அச்சுவின் குழந்தை தனத்தையும், மழலை பேச்சையும், குழந்தை மனப்போக்கையும் சரியாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.:icon_b:

ரங்கராஜன்
07-12-2008, 10:40 AM
மன்னிக்கவும் மூர்த்தி...தொடர்ந்து படிக்க முடியல....இத்தனை எழுத்துப்பிழைகள் என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. எத்தனை நல்ல கதையாக இருந்தாலும் இப்படி எக்கச்சக்க எழுத்துப்பிழையோடு இருந்தால்......மன்னிக்கவும் என்னால் படிக்க முடியவில்லை.

thanks MR.siva
i am extermely sorry, actually at present i am not in my home town and i dont have tamil font in this system also, i wrote this story in an unkown tamil writer. Now only i saw your quote, i am really ashamed of my hurry work. i am not justifying my mistakes but explaining the reasons of my mistake. As soon as i reach home i will clear all the mistakes in the story. And thank you once again for your true quotes. thank you

சிவா.ஜி
07-12-2008, 02:25 PM
நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லி என்பது சர்வநிச்சயமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று மூர்த்தி. அதனால் உங்கள் கதையை விருப்பமுடன் வாசிக்க வந்த எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்தான் என் பதிவு. அதையும் ஆரோக்கியமாய் எடுத்துக்கொண்ட உங்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

தொடர்ந்து எங்களை உங்கள் கதைகளால் மகிழ்வியுங்கள் மூர்த்தி. நாங்கள் எப்போதும் உங்களுடன்தான்.

Narathar
14-12-2008, 01:28 PM
மிக அருமையாக கதையை நகர்த்துகின்றீர்கள் மூர்த்தி,
என்னதான் மூளைச்சலவை செய்யப்பட்டாலும், பெண்மைக்குள் இருக்கும் அந்த தாய்மையை ஒரு மழலையை வைத்து தூண்டியது சிறப்பாக கூரப்பட்டுள்ளது.........

வாழ்த்துக்கள்.

MURALINITHISH
29-12-2008, 08:51 AM
என்னதான் பெண்களும் ஆண்களும் சுய சிந்தனையோடும் பெரிய பதவியில் இருந்தாலும் குழந்தையின் மழலைக்கு அதுவும் தன் குழந்தையின் மழலைக்கும் முன்னால் எல்லாமே அற்பம்தான் வாழ்க்கையில் திருமணம் தன் குழந்தை என்ற அற்புதத்தை உணர வைத்த அந்த மழலைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

சிவா.ஜி
29-12-2008, 09:06 AM
பிழைகள் திருத்தப்பட்டவுடன் கதை அருமையாக இருக்கிறது. எந்த கல்மனதையும் கரைத்துவிடும் சக்தி மழலைக்கு உண்டு என்பதை அழுத்தமாய் நிரூபிக்கிறது கதை.

மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த மழலையின் பிரிவு, என்ன இருந்தாலும் தன் சொந்த செல்வத்தைப் போல வருமா என ரம்யாவை சிந்திக்க வைத்து திருமண முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

கதையை சொன்ன பாணி அருமை. வாழ்த்துகள் மூர்த்தி(அ)தக்ஸ்.

இளசு
08-01-2009, 04:55 AM
கவனம் ஈர்க்கும் கதாசிரியர் நம் தக்ஸ்..
அதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு..

பாராட்டுகள் தக்ஸ்!

நான் முன்னமே வாசித்திருந்தால் இப்படித்தான் பின்னூட்டம் தந்திருப்பேன்!




இன விருத்தி செய்ய வெண்டியது, தூண்டுவது இயற்கை. அதற்காக கல்யாணம் செய்ய வேண்டியது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயம் தமிழர் மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எதிர்வாதங்கள் இருந்தாலும் அதனை நான் ஆதரிப்பேன். அந்த இனவிருத்தியின் உணர்வு பூர்வமான வடிவம் குழந்தைப் பாசம். அதை பொருட்படுத்தி வரையப்பட்ட சிறுகதை.

ஒரு வாச(அ)கத்துக்கும் உருகார் சிறு வாச(அ)கத்துக்கு உருகுவார் என்பது கதையின் இருதயத்தின் ஒருபக்கம். எனக்கென ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா என்ற மனவியல் இருதயத்தின் மறுபக்கம். அந்த ஓட்டத்தில் உயிருடன் உலவி விட்டு சென்று விட்ட கதை.

பாராட்டுகள் மூர்த்தி.

ஆதவா
08-01-2009, 05:00 AM
கவனம் ஈர்க்கும் கதாசிரியர் நம் தக்ஸ்..
அதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு..

பாராட்டுகள் தக்ஸ்!

நான் முன்னமே வாசித்திருந்தால் இப்படித்தான் பின்னூட்டம் தந்திருப்பேன்!

ஆசையா நீங்க என்ன எழுத வர்றீங்கன்னு எட்டிப் பார்த்தா, இப்படி அமரனை சாக்கா வெச்சு ஏமாத்திட்டீங்களேண்ணே!!!

ஆதங்கத்துடன்
ஆதவன்

இளசு
08-01-2009, 05:04 AM
ஆதவா,
நாம் செய்ய எண்ணுவதை நம்மைவிட அழகாக நம்மவரில் ஒருவர் செய்துவிட்டபின் - என்ன செய்வது?

நல்லதைச் சிலாகிப்பதைத் தவிர?

Re -inventing the wheel - என்னும் ஆங்கிலச் சொலவடை ஒன்று!
செயத்தகாத செயல் அது!

இனிய பென்ஸ், பாரதி, நீ, அமரன் - இப்படி சிலரின் பின்னூட்டங்கள் கண்டபின்
நான் ஆனந்த அதிர்திருப்தி அடைவது அடிக்கடி நடப்பது!

என்னவன் விஜய்
08-01-2009, 09:41 AM
ஆதவா,
நாம் செய்ய எண்ணுவதை நம்மைவிட அழகாக நம்மவரில் ஒருவர் செய்துவிட்டபின் - என்ன செய்வது?

நல்லதைச் சிலாகிப்பதைத் தவிர?

Re -inventing the wheel - என்னும் ஆங்கிலச் சொலவடை ஒன்று!
செயத்தகாத செயல் அது!

இனிய பென்ஸ், பாரதி, நீ, அமரன் - இப்படி சிலரின் பின்னூட்டங்கள் கண்டபின்
நான் ஆனந்த அதிர்திருப்தி அடைவது அடிக்கடி நடப்பது!


என்ன அண்ணா,
உங்கள் ஆஸ்தான முகிலனை சுத்தமாக மறந்தநிலையாகிவிட்டது உங்கள் பின்னூட்டம். :)

ரங்கராஜன்
24-03-2009, 12:35 PM
விமர்சனம் அளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கோடி

அக்னி
24-03-2009, 05:27 PM
ஒரு மழலையோடு பழக நேர்ந்தால்... பழகவே தேவையில்லை, சேர இருந்தாலே போதும்...

ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் கிட்டியிருக்கும்.
எனக்கும் கிட்டியது.

ஐரோப்பா வந்த புதிதில்,
அதுவரை பழகியிராத, கண்டிராத உறவினரோடு ஒரு கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழிக்க நேர்ந்தது.
இரு மழலைச் செல்வங்கள். மூன்று வயதும் நிரம்பாத சின்னப் பெண்ணும் அவரது குட்டித் தம்பியும்.

முதல்நாள் சேரவே மறுத்தார்கள்.
பின்னர் சேர்ந்தே இருந்தார்கள்.
புறப்படுகையில் பிரியவே மறுத்தார்கள்.

இந்த இரண்டு மறுப்புக்களிலும் இருந்தது அழுகைதான்.
ஆனால் இரண்டுக்குமான வித்தியாசம் பாரியது.

முதலில் அவர்களின் மிரட்சியைச் சொன்ன அழுகை,
பின்னர் எனது வரட்சியைச் சொன்னது.

மழலைப் பாசத்தின் அழுத்தம் அத்தகையது.

*****
இந்தப் பாச அழுத்தத்தை வைத்து, தீவிரவாதியின் மன வக்கிரத்தையே தகர்த்துவிடலாம்.
அதனை வைத்து, ஒரு பெண்ணின் வைராக்கியத்தைத் தகர்த்துவிட்டார் தக்ஸ்...

ரம்யாவின் தாய்மை உணர்வை, நெருடிவிட்டன அச்சுவின் குறும்புகள்...
தொல்லைகள் வெல்லமாகையில், பிரிவென்னும் கசப்பு...
கசப்பு, இனிமைக்கு ஏங்க வைப்பது இயல்பல்லவா...

அழகாகக் கோர்த்துத் தந்த தக்ஸ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

ரங்கராஜன்
24-03-2009, 06:15 PM
என்னுடைய கதை அழகைவிட உங்களின் விமர்சன அழகை படித்து ரசித்தேன், உறவுகளும் அதை ரசிப்பார்கள். நீங்கள் கூறிய அந்த இரண்டு குழந்தைகள் என் கண்முன்னே அழுது, சிரித்து விளையாடுவது போல இருந்தது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது, இதில் வரும் ரம்யா பெண் நான் ஆண் அவ்வளவு தான் வித்தியாசம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் சிறுகதையாக மாறுதலுடன் கொடுத்தேன். இதில் ரம்யாவுக்கு பதிலாக ரமேஷ் என்று இருந்து இருந்தால் கதை மனதில் ஒட்டி இருக்காது. பெண்கள் என்றாலே அன்பு இல்லையா, ஆண்களும் தான் இருந்தாலும் நம்முடைய முகத்தில் இருக்கும் மீசை, தாடிக்குள் அன்பு மறைந்து இருக்கிறது ........... ஹா ஹா

நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் இந்த கதையாக எழுதினேன்னு சொன்னேன் இல்லையா, அதை கதையின் கதை பகுதியில் கொடுத்து இருக்கிறேன். என்னை ஏங்க வைத்த குழந்தையும் நானும் சண்டைப்போடு வீடியோவும் கொடுத்து இருக்கேன்.. முடிந்தால் பாருங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19110&page=2

இந்த பக்கத்தில் நடுவில் இருக்கிறது அந்த வீடியோ

மதுரை மைந்தன்
25-03-2009, 09:44 AM
உங்களின் வெற்றி படைப்புக்களில் மற்று மோர் அச்சு. வாழ்த்துக்கள்.