View Full Version : உண்மையாதறியேன்
சிறுபிள்ளை
03-12-2008, 04:29 AM
காத்திருந்தேன் கதவுகள் திறக்குமென்று
பின்னர்தான் தெரிந்தது கதவே இல்லையென்று
வீற்றிருந்தேன் அமைதி கிடைக்குமென்று
பின்னர்தான் தெரிந்தது வீற்றது முள் மீதென்று
நின்றிருந்தேன் விழி என்மீது படுமென்று
பின்னர்தான் தெரிந்தது அவளுக்கு விழியே இல்லையென்று
அணைத்துக்கொள்வாள் அன்பாய் என்றிருந்தேன்
பின்னர்தான் தெரிந்தது அணைத்தது என்னை அல்ல என் நண்பனை என்று..!!??
சிறுபிள்ளை
சுகந்தப்ரீதன்
03-12-2008, 04:31 AM
சிறுபிள்ளை... தயவுசெய்து சொல்லிவிடாதே அந்த நண்பன் நானென்று...??:lachen001:
கவிதை நச்சென்று இருக்கு நண்பா..!!:frown:
சிறுபிள்ளை
03-12-2008, 04:38 AM
சிறுபிள்ளை... தயவுசெய்து சொல்லிவிடாதே அந்த நண்பன் நானென்று...??:lachen001:
கவிதை நச்சென்று இருக்கு நண்பா..!!:frown:
உண்மையாதரியேன்??? உண்மையிலேயே கவிதை நச்சென்று இருக்குதா??!!
அமரன்
03-12-2008, 08:02 AM
சிறுபிள்ளைய்ல் காதலா? நல்லா இருக்கு. பாராட்டுகள் தொடருங்கள்.
சிறுபிள்ளை
03-12-2008, 08:43 AM
இது என்னோட அனுபமில்லை அமரனே.. ஜஸ்ட் ஒரு கவிதை தீட்டலாம் என்றெண்ணி எழுதினேன்.. மற்றபடி எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்
நிரன்
03-12-2008, 09:15 AM
நின்றிருந்தேன் விழி என்மீது படுமென்று
பின்னர்தான் தெரிந்தது அவளுக்கு விழியே இல்லையென்று
சிறுபிள்ளை
:lachen001: சிறுபிள்ளை சில வேளை கண் தெரியாதவளாக் கூட இருக்கலாம்
எதுக்கும் ஒருக்கா அதை உறுதி செய்யுங்க...
கவி நகைச்சுவையாகவும் நன்றாகவும் இருக்கிறது பாராட்டுக்கள்
lolluvathiyar
26-12-2008, 09:37 AM
அப்ப உங்க நன்பன் சிக்கீட்டானா சரி காதலிச்ச சந்தோசத்தைவிட காதலிச்சு லோ லோனு அலையரவங்க கூத்தை பாக்கறது இன்னும் சந்தோசமா இருக்கும். அதனால நல்லா வேடிக்கை பாருங்க*