ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-12-2008, 01:22 PM
விடுமுறைக்கு ஊர் சென்றுவிட்டு திரும்பிய தாரணியிடம் சின்னதொரு மாற்றம், அவளது கையில் மொபைல் போன் இல்லை.
‘’ என்னடி மொபைல் போன ஊருல மறந்து விட்டுட்டு வந்தியா? ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அவளது தோழி கேட்டாள்.
“ ஊருல நான் ஒருத்தர விரும்பறேன், நாங்க திருமணம் பண்ற வரைக்கும் மொபைல் போன் வெச்சுக்கறதில்லையின்னு முடிவெடுத்துட்டேம்’’ என்றாள் தாரணி.
“ ஒருத்தர காதலிக்கறேன்னு சொல்ற, மொபைல் போன் இல்லாம எப்பிடி? புரியல!” என்று எதிர் கேள்வி கேட்டாள் அவளது தோழி.
‘’ காதல்ங்கறது நினச்சவுடனே நடக்கறமாதிரி இருந்தா அதுல சுவராஸ்யமே இருக்காது. என்ன விரும்புறவர்கிட்ட பேசணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும், ஆனா பேசக்கூடாது, அவர பார்க்கணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும் ஆனா பார்க்க கூடாது, இப்போ காதலிக்கிறவங்க எல்லாரும் போன்ல தான் பேசிக்கறாங்க, ஆனா நாங்க அப்படி இல்ல வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பறதா முடிவு பண்ணியிருக்கோம்’’.
தாரணியின் பதிலைக்கேட்டு `அம்மாடி இதுதான் காதலா’ என்று தோழி பாட்டு ஒன்றை எடுத்து விட தாரணிக்கு வெட்கம் வ்ந்து சேர்ந்துகொண்டது.
‘’ என்னடி மொபைல் போன ஊருல மறந்து விட்டுட்டு வந்தியா? ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அவளது தோழி கேட்டாள்.
“ ஊருல நான் ஒருத்தர விரும்பறேன், நாங்க திருமணம் பண்ற வரைக்கும் மொபைல் போன் வெச்சுக்கறதில்லையின்னு முடிவெடுத்துட்டேம்’’ என்றாள் தாரணி.
“ ஒருத்தர காதலிக்கறேன்னு சொல்ற, மொபைல் போன் இல்லாம எப்பிடி? புரியல!” என்று எதிர் கேள்வி கேட்டாள் அவளது தோழி.
‘’ காதல்ங்கறது நினச்சவுடனே நடக்கறமாதிரி இருந்தா அதுல சுவராஸ்யமே இருக்காது. என்ன விரும்புறவர்கிட்ட பேசணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும், ஆனா பேசக்கூடாது, அவர பார்க்கணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும் ஆனா பார்க்க கூடாது, இப்போ காதலிக்கிறவங்க எல்லாரும் போன்ல தான் பேசிக்கறாங்க, ஆனா நாங்க அப்படி இல்ல வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பறதா முடிவு பண்ணியிருக்கோம்’’.
தாரணியின் பதிலைக்கேட்டு `அம்மாடி இதுதான் காதலா’ என்று தோழி பாட்டு ஒன்றை எடுத்து விட தாரணிக்கு வெட்கம் வ்ந்து சேர்ந்துகொண்டது.