தமிழ்தாசன்
30-11-2008, 12:01 PM
தெரிந்தும் தெரியாமலும் - உன்
பால் குடிப்பேனோ?
நாங்கள் கூடு கலைக்கப்பட்டதும் - உன்
அன்றைய தவறென்பதும் தெரியாமலா?
உலக உச்சிக்கு குந்தியிருக்கபோட்டி,
அதில் வரும் எதுவென்றாலும் போதும்.
அதுதானா உன் போக்கு?
அதுதான் சண்டியன் குணமோ?
கூடெரிக்க கொல்லி பொடுப்பதும்,
கூடாத நோய்கண்டு பரப்பலும்,
அது தீர மருந்தென்று உலகப் பரம்பலும்,
இதுதானா மனித உரிமை விழிப்பு?
இருதலை முகம்காட்டும்,
ஒருபோதும் மாறாதா? உன் குணம்.
பாவம் பாமரர் அவர்
விழித்திடா வண்ணம் விளையாடடில் நீவிர்.
பாவிகள் உயிர் பறிப்பது கூடத்தெரியாதா?
பார்த்தும் பார்வைகள் படாதா?
பார் ஒரு முறையேனும்
பூனைக்கண் திற!
பால் குடிப்பேனோ?
நாங்கள் கூடு கலைக்கப்பட்டதும் - உன்
அன்றைய தவறென்பதும் தெரியாமலா?
உலக உச்சிக்கு குந்தியிருக்கபோட்டி,
அதில் வரும் எதுவென்றாலும் போதும்.
அதுதானா உன் போக்கு?
அதுதான் சண்டியன் குணமோ?
கூடெரிக்க கொல்லி பொடுப்பதும்,
கூடாத நோய்கண்டு பரப்பலும்,
அது தீர மருந்தென்று உலகப் பரம்பலும்,
இதுதானா மனித உரிமை விழிப்பு?
இருதலை முகம்காட்டும்,
ஒருபோதும் மாறாதா? உன் குணம்.
பாவம் பாமரர் அவர்
விழித்திடா வண்ணம் விளையாடடில் நீவிர்.
பாவிகள் உயிர் பறிப்பது கூடத்தெரியாதா?
பார்த்தும் பார்வைகள் படாதா?
பார் ஒரு முறையேனும்
பூனைக்கண் திற!