PDA

View Full Version : துடிப்புடன்....



தமிழ்தாசன்
30-11-2008, 11:43 AM
துடிப்புடன்....
உள்ளவைதான்
உணர்வுள்ளவை. - அதிலும் மனிதம்
அதுபோல நடிப்பவை ஏராளம்.
அதனைத்தான்,
'நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திரனுமின்றி
வஞ்சனை செய்வாரடி ....
வாய்ச்சொல்லில் வீரரடி'
பலருக்கே பொருந்தும்.

வலிமைமிக்க வரிகளை,
பார்வைகளினாலும் ,
பழக்கத்தினாலும்,
பாடினார் மகாகவி.

முகங்களில் அழகு பூசி - அந்தோ
அகங்களில் அழுக்குப்பாசி
வார்த்தகைளோ வண்ணஜாலம்
யாரோ உழைக்க,
யாரோ உண்டகதை.

அடக்குமுறைகள் அகல
விரித்துப்போட்டுக்கிடக்கின்றன. இதோ...
முகமூடிகளுக்கு உரக்கச்சொல்வேன்....

காற்றையும் கட்டிப்போடலாம் ஆனால்
உறுதியான, உண்மைமிக்க
உணர்வுகளை,
மனிதநேய விழிப்புக்களை
நெருங்கவே முடியாது.

என்றென்றும் மனிதநேய
உயிர்த் துடிப்புடன்.



('அருவி' 2002 ஆடி -ஆவணி)