ஆதி
26-11-2008, 12:08 PM
எந்த அரூப இதழ்களோ
உச்சரித்துவிடுகின்றன
இவற்றை..
அந்தகார சாத்தான்கள்
அண்ட மறுக்கும் சுடராகவும்
அண்ட அழைக்கும் கூடாரமாகவும்
இருந்து தொலைப்பவை..
வெற்று மௌனத்தையும்
உற்று தோண்டி
ஆழங்களில் இருந்து
பெருங்கனங்கள் பெற்றுத்தருபவை..
"முடியாமை'களை துரத்தி
"முடியும்"களை இருத்த வல்லவை..
இல்லாதன கண்படவும்
இருப்பன கண்மறையவும்
காணக் கொடுப்பவை..
பேரெதிரியும்
பிரதான நண்பனுமாய்
அவரவர் எண்ணங்கள்
அவரவர்க்கும்..
உச்சரித்துவிடுகின்றன
இவற்றை..
அந்தகார சாத்தான்கள்
அண்ட மறுக்கும் சுடராகவும்
அண்ட அழைக்கும் கூடாரமாகவும்
இருந்து தொலைப்பவை..
வெற்று மௌனத்தையும்
உற்று தோண்டி
ஆழங்களில் இருந்து
பெருங்கனங்கள் பெற்றுத்தருபவை..
"முடியாமை'களை துரத்தி
"முடியும்"களை இருத்த வல்லவை..
இல்லாதன கண்படவும்
இருப்பன கண்மறையவும்
காணக் கொடுப்பவை..
பேரெதிரியும்
பிரதான நண்பனுமாய்
அவரவர் எண்ணங்கள்
அவரவர்க்கும்..