மதுரை மைந்தன்
26-11-2008, 11:01 AM
மும்பையை அடுத்த தாணா நகரத்தில் நாங்கள் அப்போது வசித்து வந்தோம். எனது தந்தையார் பல வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து தாணாவிற்கு வந்து வேலை பார்த்தார். நானும் எனது இரு தங்கைகளும் தாணா பெடேகர் ஆஸ்பத்திரியில் தான் பிறந்தோம்.
உயர் பள்ளியில் சேரும் நேரம் வந்த போது எனக்கு பக்கத்து மராத்தி பள்ளியில் தான் இடம் கிடைத்தது. வகுப்பில் என்னைத் தவிர மற்ற அனைவரும் மராத்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னை ஒரு அந்நியனாகவே பார்த்தார்கள் ஒரே ஒரு பையனைத்தவிர அவன் தான் ஷிண்டே. என்னிடம் நட்பாக இருந்தான். எனது பெஞசில் என் பக்கத்தில் உடகார்ந்தான். அடிக்கடி காரணமில்லாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பான். எனக்கு புரிகிறதா என்று அறிந்து கொள்ளாமலே சரளமாக மராத்தியில் என்னிடம் பேசுவான். மராத்தி கட்டயா பாடமாக இருந்ததால் நாளடைவில் எனக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது புரியத் தொடங்கியது. பெரும்பாலும் சினிமாக் கதை பேசுவான்.
முதல் நாள் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது மற்ற மராத்தி பையன்கள் என்னை விநோதமாக பார்க்க ஷிண்டே என்னை மாஜா பாயி (என்னோட சகோதரன்)என்று அறிமுகப் படுத்தினான். எனக்கு ஸ்பின் பௌலிங் போட நன்றாக வருமாதலால் டீமில் என் மதிப்பு உயர்ந்தது.
வகுப்பில் நான் மராத்தி கற்று நன்றாகப் பேசத் தொடங்கினேன். ஷிண்டேயோ என்னிடமிருந்து தமிழ் கற்றுக் கொண்டு சரளமாக தமிழில் பேசலானான். என்னை அவர்களுடய வீட்டிற்கு கூட்டிச் செல்வான். என்னுடன் எங்கள் வீட்டுக்கு அவன் வருவான்.
அவனுடய வீட்டிற்கு சென்ற சமயம் அவனது வயதான பெற்றோர் என்னை அன்புடன் உபசர்த்தனர். ஷிண்டேயின் தந்தை என்னிடம் " நான் மூச்சு விடறதுக்கு முன்னாலே மதுரை ராமேஸ்வரம் சென்று வர ஆசைப் படுகிறேன் கூட்டிச் செல்வாயா? என்று கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன்.
அவன் எங்கள் விட்டிற்கு வந்து அம்மாவிடம் " எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்ற தன்னுடய மழலைத் தமிழில் கேட்ட போது அம்மாவுக்கு ஒரே சிரிப்பு.எங்கள் நட்பு நாளொரு சினிமாவும் பொழுதொரு கிரிக்கெட் மாட்சுமாக வளர்ந்தது.
பள்ளி இறுதி தேர்வில் (மகாராஷ்டிரா போர்ட் எக்ஸாம்) நான் 95 சதவீதம் மார்க்கில் பாஸ் செய்தேன். அவனோ கோட் அடிச்சான். அதன் பின் நாங்கள் பிரிய வேண்டியதாயிற்று. அவர்கள் வீட்டைக் காலி செய்து தாணாவிலேயே வேறொரு பகுதிக்கு சென்றனர். நான் சயானில் உள்ள தென்னிந்தியக் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் வாங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினேன். தென்னிந்தியக் கல்லூரியில் படிக்கும் போது பல தமிழ் நண்பர்கள் கிடைத்ததால் ஷிண்டேயை மறந்தே போனேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் மும்பையில் கலவரம் வெடித்தது. ஒருகட்சி காரர்கள் தென்னிந்தியர் மீது தாக்குதல்களை நடத்தினர். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அந்த கட்சித் தொண்டரகள் எலக்ட்ரிக் ட்ரெயினில் எல்லோருடய பாஸ்களை பிடுங்கி அதில் தென்னிந்திய பெயர் உள்ளவர்களின் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். நான் அதிலிருந்து தப்ப முடிந்ததற்கு காரணம் என்னுடய பெயர் கணேஷ் என்பதாலும் எனக்கு சரளமாக மராத்தி பேச வந்ததாலும் தான்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்திப் படம் ஒன்றைப் பார்த்து விட்டு இரவில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் சற்று இருட்டாய் இருந்த அந்த சந்துக்குள் நுழைந்தவுடன் தான் அங்கு அந்த கட்சியின் கிளை ஆபீஸ் இருக்கு என்று நினைவுக்கு வந்தது. தூரத்தில் சிலர் கையில் தடி சைக்கிள் செயின் சகிதமாக நின்று கொண்டு நான் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கை கால் பதற்றத்துடன் திரும்பி ஓடினால் துரத்துவார்களோ என்ற பயத்தில் நான் முன்னேறினேன்.
அவர்களை நெருங்கியவுடன் பார்த்தேன் அந்த கும்பலில் ஷிண்டேயும் இருந்தான். அவனைப் பார்த்தும் சற்று தெம்பு வர " என்ன ஷிண்டே எப்படி இருக்கே?" என்று சத்தமாக கேட்டேன். ஷிண்டே எனக்கு தெரிந்தவன் என்றால் அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் முன் யோசனை இல்லாமல் தமிழில் நான் சொன்னது என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.
அவர்களில் ஒருவன் ஷிண்டேயிடம் மராத்தியில் "இந்த காலா மதராஸியை உனக்கு முன்பே தெரியுமா?" என்று கேட்டான். ஷிண்டே அதற்கு தலை அசைத்து " தயவு செய்து அவனை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் ரொம்ப நல்லவன்" என்றான். அவன் இவ்வாறு சொன்னதும் மற்றவர்கள் ஒன்ற கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவன் " இவன் உன்னோட நண்பனாக இருக்கலாம் ஆனால் மதராஸிகளைத் தாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு. ஆகவே நீயே அவனை தாக்கு இல்லையேல் அவனோடு சேர்த்து உன்னையும் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவோம்" என்று குரூரமாக கூறினான்.
நான் ஷிண்டேயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஷிண்டே சைக்கிள் செயினால் என்னை அடித்தான். எல்லோருமாக கட்டையாலும் சைக்கிள் செயின்களாலும் என்னைத் தாக்க நான் நினைவிழந்து கீழே விழுந்தேன்.
பலத்த கட்டுக்களுடன் ஆஸ்பத்திரில் கண் விழித்த எனக்கு எத்தனை நாளாக அங்கிருக்கிறேன் யார் என்னை கொண்டு வந்து சேர்த்து என்று புதிராக இருந்தது. வலிகளுக்கு நடுவே ஷிண்டேயின் ஞாபகம் வர மற்றவர்கள் அடித்த அடி உடம்பில் வலிக்க அவன் அடித்தது நெஞ்சில் வலித்தது. பக்கத்தில் இருந்த பெற்றோர சகோதரிகள் இவர்களைப் பார்த்து சற்று வலி குறைந்த மாதிரி இருந்தது.
அந்த கருங்காலி வந்திருக்கான்னு அம்மா சொல்ல ஷிண்டே கையில் ஒரு பூங்கொத்துடன் தயங்கி தயங்கி என்னருகே வந்தான். அம்மாவால் பொறுக்க முடியவில்லை " அடப் பாவி உன்னையும் என்னோட ஒரு பிள்ளையா நினைச்சேனே இப்படி பண்ணிட்டயே" என்று அழுதாள். ஷிண்டே அம்மாவின் காலடியில் விழுந்தான் "என்னை மன்னிச்சுடுங்க அம்மா" என்று கதறினான். " அன்னைக்கு நான் கணேஷை அடிக்கலைனா அவங்க இன்னும் மோசமா அவனை அடிச்சு கொன்றிருப்பார்கள். அந்த நேரத்தில் எனக்கு வேற வழியே தெரியலை" னு அவன் கதறவும் மனது சற்று அமைதியாயிற்று. ஷிண்டே மேலும் சொன்னான் "நான் அந்த கட்சியிலிருந்து விலகிட்டேன் கணேஷ். உனக்கு உடம்பு பூரணமா குணமாக வேண்டி சித்தி விநாயகர் கோயிலுக்கு தினம் சென்று பிரார்த்திக்கிறேன்" என்றவுடன் அவன் கொண்டு வந்த பூச் செண்டை எடுத்து நட்பை உறுதிப் படுத்தினேன்.
உயர் பள்ளியில் சேரும் நேரம் வந்த போது எனக்கு பக்கத்து மராத்தி பள்ளியில் தான் இடம் கிடைத்தது. வகுப்பில் என்னைத் தவிர மற்ற அனைவரும் மராத்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னை ஒரு அந்நியனாகவே பார்த்தார்கள் ஒரே ஒரு பையனைத்தவிர அவன் தான் ஷிண்டே. என்னிடம் நட்பாக இருந்தான். எனது பெஞசில் என் பக்கத்தில் உடகார்ந்தான். அடிக்கடி காரணமில்லாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பான். எனக்கு புரிகிறதா என்று அறிந்து கொள்ளாமலே சரளமாக மராத்தியில் என்னிடம் பேசுவான். மராத்தி கட்டயா பாடமாக இருந்ததால் நாளடைவில் எனக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது புரியத் தொடங்கியது. பெரும்பாலும் சினிமாக் கதை பேசுவான்.
முதல் நாள் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது மற்ற மராத்தி பையன்கள் என்னை விநோதமாக பார்க்க ஷிண்டே என்னை மாஜா பாயி (என்னோட சகோதரன்)என்று அறிமுகப் படுத்தினான். எனக்கு ஸ்பின் பௌலிங் போட நன்றாக வருமாதலால் டீமில் என் மதிப்பு உயர்ந்தது.
வகுப்பில் நான் மராத்தி கற்று நன்றாகப் பேசத் தொடங்கினேன். ஷிண்டேயோ என்னிடமிருந்து தமிழ் கற்றுக் கொண்டு சரளமாக தமிழில் பேசலானான். என்னை அவர்களுடய வீட்டிற்கு கூட்டிச் செல்வான். என்னுடன் எங்கள் வீட்டுக்கு அவன் வருவான்.
அவனுடய வீட்டிற்கு சென்ற சமயம் அவனது வயதான பெற்றோர் என்னை அன்புடன் உபசர்த்தனர். ஷிண்டேயின் தந்தை என்னிடம் " நான் மூச்சு விடறதுக்கு முன்னாலே மதுரை ராமேஸ்வரம் சென்று வர ஆசைப் படுகிறேன் கூட்டிச் செல்வாயா? என்று கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன்.
அவன் எங்கள் விட்டிற்கு வந்து அம்மாவிடம் " எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்ற தன்னுடய மழலைத் தமிழில் கேட்ட போது அம்மாவுக்கு ஒரே சிரிப்பு.எங்கள் நட்பு நாளொரு சினிமாவும் பொழுதொரு கிரிக்கெட் மாட்சுமாக வளர்ந்தது.
பள்ளி இறுதி தேர்வில் (மகாராஷ்டிரா போர்ட் எக்ஸாம்) நான் 95 சதவீதம் மார்க்கில் பாஸ் செய்தேன். அவனோ கோட் அடிச்சான். அதன் பின் நாங்கள் பிரிய வேண்டியதாயிற்று. அவர்கள் வீட்டைக் காலி செய்து தாணாவிலேயே வேறொரு பகுதிக்கு சென்றனர். நான் சயானில் உள்ள தென்னிந்தியக் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் வாங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினேன். தென்னிந்தியக் கல்லூரியில் படிக்கும் போது பல தமிழ் நண்பர்கள் கிடைத்ததால் ஷிண்டேயை மறந்தே போனேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் மும்பையில் கலவரம் வெடித்தது. ஒருகட்சி காரர்கள் தென்னிந்தியர் மீது தாக்குதல்களை நடத்தினர். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அந்த கட்சித் தொண்டரகள் எலக்ட்ரிக் ட்ரெயினில் எல்லோருடய பாஸ்களை பிடுங்கி அதில் தென்னிந்திய பெயர் உள்ளவர்களின் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். நான் அதிலிருந்து தப்ப முடிந்ததற்கு காரணம் என்னுடய பெயர் கணேஷ் என்பதாலும் எனக்கு சரளமாக மராத்தி பேச வந்ததாலும் தான்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்திப் படம் ஒன்றைப் பார்த்து விட்டு இரவில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் சற்று இருட்டாய் இருந்த அந்த சந்துக்குள் நுழைந்தவுடன் தான் அங்கு அந்த கட்சியின் கிளை ஆபீஸ் இருக்கு என்று நினைவுக்கு வந்தது. தூரத்தில் சிலர் கையில் தடி சைக்கிள் செயின் சகிதமாக நின்று கொண்டு நான் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கை கால் பதற்றத்துடன் திரும்பி ஓடினால் துரத்துவார்களோ என்ற பயத்தில் நான் முன்னேறினேன்.
அவர்களை நெருங்கியவுடன் பார்த்தேன் அந்த கும்பலில் ஷிண்டேயும் இருந்தான். அவனைப் பார்த்தும் சற்று தெம்பு வர " என்ன ஷிண்டே எப்படி இருக்கே?" என்று சத்தமாக கேட்டேன். ஷிண்டே எனக்கு தெரிந்தவன் என்றால் அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் முன் யோசனை இல்லாமல் தமிழில் நான் சொன்னது என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.
அவர்களில் ஒருவன் ஷிண்டேயிடம் மராத்தியில் "இந்த காலா மதராஸியை உனக்கு முன்பே தெரியுமா?" என்று கேட்டான். ஷிண்டே அதற்கு தலை அசைத்து " தயவு செய்து அவனை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் ரொம்ப நல்லவன்" என்றான். அவன் இவ்வாறு சொன்னதும் மற்றவர்கள் ஒன்ற கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவன் " இவன் உன்னோட நண்பனாக இருக்கலாம் ஆனால் மதராஸிகளைத் தாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு. ஆகவே நீயே அவனை தாக்கு இல்லையேல் அவனோடு சேர்த்து உன்னையும் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவோம்" என்று குரூரமாக கூறினான்.
நான் ஷிண்டேயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஷிண்டே சைக்கிள் செயினால் என்னை அடித்தான். எல்லோருமாக கட்டையாலும் சைக்கிள் செயின்களாலும் என்னைத் தாக்க நான் நினைவிழந்து கீழே விழுந்தேன்.
பலத்த கட்டுக்களுடன் ஆஸ்பத்திரில் கண் விழித்த எனக்கு எத்தனை நாளாக அங்கிருக்கிறேன் யார் என்னை கொண்டு வந்து சேர்த்து என்று புதிராக இருந்தது. வலிகளுக்கு நடுவே ஷிண்டேயின் ஞாபகம் வர மற்றவர்கள் அடித்த அடி உடம்பில் வலிக்க அவன் அடித்தது நெஞ்சில் வலித்தது. பக்கத்தில் இருந்த பெற்றோர சகோதரிகள் இவர்களைப் பார்த்து சற்று வலி குறைந்த மாதிரி இருந்தது.
அந்த கருங்காலி வந்திருக்கான்னு அம்மா சொல்ல ஷிண்டே கையில் ஒரு பூங்கொத்துடன் தயங்கி தயங்கி என்னருகே வந்தான். அம்மாவால் பொறுக்க முடியவில்லை " அடப் பாவி உன்னையும் என்னோட ஒரு பிள்ளையா நினைச்சேனே இப்படி பண்ணிட்டயே" என்று அழுதாள். ஷிண்டே அம்மாவின் காலடியில் விழுந்தான் "என்னை மன்னிச்சுடுங்க அம்மா" என்று கதறினான். " அன்னைக்கு நான் கணேஷை அடிக்கலைனா அவங்க இன்னும் மோசமா அவனை அடிச்சு கொன்றிருப்பார்கள். அந்த நேரத்தில் எனக்கு வேற வழியே தெரியலை" னு அவன் கதறவும் மனது சற்று அமைதியாயிற்று. ஷிண்டே மேலும் சொன்னான் "நான் அந்த கட்சியிலிருந்து விலகிட்டேன் கணேஷ். உனக்கு உடம்பு பூரணமா குணமாக வேண்டி சித்தி விநாயகர் கோயிலுக்கு தினம் சென்று பிரார்த்திக்கிறேன்" என்றவுடன் அவன் கொண்டு வந்த பூச் செண்டை எடுத்து நட்பை உறுதிப் படுத்தினேன்.