PDA

View Full Version : காதலித்து பார்...



நிரன்
25-11-2008, 02:48 PM
கவிப்பேரரசு வைரமுத்து
வாழ்வையே வெறுக்க வைக்கும் கவித்திறன்....
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

***

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

***

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

காதலித்து பார்...
கண்கள் குருடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்


காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்

காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்




காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்

காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு

காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......

தமிழ்தாசன்
25-11-2008, 08:23 PM
அருமை!
மீண்டும் நினைவுக்கு தந்தமைக்கு மகிழ்ச்சி.

காதலித்துப்பார்
கனவும் களவாகும்.

வசீகரன்
26-11-2008, 11:01 AM
கவிப்பேரரசின் அற்புதமான வரிகள்... பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!

அருள்
27-11-2008, 06:37 AM
இதை படித்து பார் காதலிக்க தோன்றும்......

arun
07-12-2008, 08:22 PM
என்னை கவர்ந்த ஒரு அருமையான கவிதை இது
வைரமுத்துவின் குரலில் கேட்டு இருக்கிறேன்
எனினும் படிக்கிற மாதிரி வருமா?
பகிர்ந்தமைக்கு நன்றி :icon_b:

arun
07-12-2008, 08:22 PM
என்னை கவர்ந்த ஒரு அருமையான கவிதை இது வைரமுத்துவின் குரலில் கேட்டு இருக்கிறேன் எனினும் படிக்கிற மாதிரி வருமா?

பகிர்ந்தமைக்கு நன்றி