தமிழ்தாசன்
24-11-2008, 09:48 PM
தமிழ்தாசனின் தமிழோடை...
ஓடை - 1
நீள் இரவு!
மேல் திறந்த பார்வை!
மேனியெங்கும் தீ,
அசையும் ஓசை விழா
நீள் இரவு
நீண்டது காண்!
'வாசமிது நுழைந்ததினால்
வஞ்சி வீழ்ந்தினள்'
நேசமதில்,
நெஞ்சமெங்கும் பூவிதழ்
பாசமதில்,
வீசுகின்ற சந்தன வாசம் -எனச்
சங்கதி சொன்னவன்,
வான ஓடையின்
முகில் மறை நிலவாய்
தோன்றுது காண்!
மெல்லிடை மேனியில்,
நிலந்தொடு கூந்தலில்
அன்றைய அணைப்பின்
மனந்தடுமாறும் நிகழ்வுகள்;
கண்ணிடை
கருவிழிகள் - ஓய்வு
காண மறுத்திட,
ஏக்கம் கொள் நினைவுகள்;
இரவுகள்.
பருவமதில் படர்கின்ற,
கொடியதனில் மலர்கின்ற,
நறுமணத்தில்
நனைகின்ற சுகம்
காணுதல் சுகமன்றோ?
உருவத்தில் உருகி,
உள்ளத்தில் பெருகி
உடலெங்கும் வழிந்திடும்
உணர்வுகள் பருகி
கருவதில் முளைகொண்டு,
இலைகண்டு
செடியாகிப் பூத்துவிட்ட
அழகுக் கொடி
இடைதனில் வீழ்ந்தான்.
படைகொண்டு
போர் கண்டான்.
வென்றவர் யாருமிலர்.
தொட்டகையின்
பட்ட இடமெங்கும்
பரவு தீயின் சூடு கண்டு
தீக்காயம் ஆறிடுமோ? யாரிடமோ?
கடித்தகாய் கனியக் கண்டு
வெடித்திடுமோ
வெண்ணிலவு.
அடித்த காயம் ஆறிவிடும்
அணைத்த காயம் ஆறிடுமோ?
மறு இரவு
வருமுன்னம்
அருகினில் வாராதோ?
தேர்கொண்டு நடைபோட்டு,
நீர்கொண்டு மேகம்
நிலம் காண வாராதோ?
தொட்டகுறை,
விட்டகுறை,
தொடர்ந்திடவே!!
அண்டத்தின்
ஆரம்ப இடம் மீண்டும்
திரும்பிவரும்
தூரம் நீண்டு விடும்
இராக்கழிய விடும் ஏக்கங்கள்
கொடுமை செய்
கொடியவரின்
கொடுமையிலும்
கொடுமை
இதுவன்றோ!
'கொடியார் கொடுமையின் தாம் கொடிய
இந்நாள் நெடிய கழியும் இரா' (குறள் - 1169)
('அருவி' சஞ்சிகை சித்திரை 2002ல் வெளியானது.)
-
ஓடை - 1
நீள் இரவு!
மேல் திறந்த பார்வை!
மேனியெங்கும் தீ,
அசையும் ஓசை விழா
நீள் இரவு
நீண்டது காண்!
'வாசமிது நுழைந்ததினால்
வஞ்சி வீழ்ந்தினள்'
நேசமதில்,
நெஞ்சமெங்கும் பூவிதழ்
பாசமதில்,
வீசுகின்ற சந்தன வாசம் -எனச்
சங்கதி சொன்னவன்,
வான ஓடையின்
முகில் மறை நிலவாய்
தோன்றுது காண்!
மெல்லிடை மேனியில்,
நிலந்தொடு கூந்தலில்
அன்றைய அணைப்பின்
மனந்தடுமாறும் நிகழ்வுகள்;
கண்ணிடை
கருவிழிகள் - ஓய்வு
காண மறுத்திட,
ஏக்கம் கொள் நினைவுகள்;
இரவுகள்.
பருவமதில் படர்கின்ற,
கொடியதனில் மலர்கின்ற,
நறுமணத்தில்
நனைகின்ற சுகம்
காணுதல் சுகமன்றோ?
உருவத்தில் உருகி,
உள்ளத்தில் பெருகி
உடலெங்கும் வழிந்திடும்
உணர்வுகள் பருகி
கருவதில் முளைகொண்டு,
இலைகண்டு
செடியாகிப் பூத்துவிட்ட
அழகுக் கொடி
இடைதனில் வீழ்ந்தான்.
படைகொண்டு
போர் கண்டான்.
வென்றவர் யாருமிலர்.
தொட்டகையின்
பட்ட இடமெங்கும்
பரவு தீயின் சூடு கண்டு
தீக்காயம் ஆறிடுமோ? யாரிடமோ?
கடித்தகாய் கனியக் கண்டு
வெடித்திடுமோ
வெண்ணிலவு.
அடித்த காயம் ஆறிவிடும்
அணைத்த காயம் ஆறிடுமோ?
மறு இரவு
வருமுன்னம்
அருகினில் வாராதோ?
தேர்கொண்டு நடைபோட்டு,
நீர்கொண்டு மேகம்
நிலம் காண வாராதோ?
தொட்டகுறை,
விட்டகுறை,
தொடர்ந்திடவே!!
அண்டத்தின்
ஆரம்ப இடம் மீண்டும்
திரும்பிவரும்
தூரம் நீண்டு விடும்
இராக்கழிய விடும் ஏக்கங்கள்
கொடுமை செய்
கொடியவரின்
கொடுமையிலும்
கொடுமை
இதுவன்றோ!
'கொடியார் கொடுமையின் தாம் கொடிய
இந்நாள் நெடிய கழியும் இரா' (குறள் - 1169)
('அருவி' சஞ்சிகை சித்திரை 2002ல் வெளியானது.)
-