kulirthazhal
23-11-2008, 12:14 AM
தவழும் உலகினை
நிலவில் நின்று காண்கிறேன்
ஓர் புள்ளியாய்.
நிலவின்
உயிர்குடித்து மலரும்
பூக்கள்,
குயிலின் அடிநெஞ்சில்
உயிர்க்கும்
சுரங்கள்,
தற்கொலை முயற்சியில்
பிறக்கும்
அருவிகள்,
கனந்து சிவந்த
இரவைக்கொன்ற
விடியல்,
எல்லாமே
மறித்துப்போயின
மாயமாய்..,
நெஞ்சம் ஏதோ
உயிர்த்தேடி......,
இடியென ஓர்
மின்கீதம்
என் நெஞ்சில்,
விழிவானம் கொன்ட
கருமேகம் மோதி
மின்னலாய் விழுந்ததோ..
உடைந்த பாறைக்குள்
சிற்பமாய்,
கலையும் மேகங்களுக்குள்
ஓவியமாய்,
பொருள்விளங்கா சொற்களுக்குள்
கவிதையாய்,
உயிர்துறந்த கனவுக்குள்
கற்பனையாய்,
வானின்று போர்தொடுக்கும்
மின்னலாய்
அவள் பிம்பங்கள்....,
விருச்சங்களை
விதைக்குள் பதிக்கிறேன்,
இமயத்தை
தூரிகையில் கட்டுகிறேன்,
நதிகளை
மழைத்துளிக்குள் அடைக்கிறேன்,
இயற்கையினை
உயிர் கொண்டு கொல்கிறேன்,
பிரபஞ்சம் தீண்டிவிட்டாலும்
இன்பம் சொல்லா
வெற்றிக்களிப்பு...
என்னுள்
காதலென்ற சொல்லொன்று
நோய் என்று
நிற்கிறது,
துடிக்கும் நெஞ்சை
நொடிக்கச்செய்து
நோய் செய்தாய் நீ...
உயிரைக்கிள்ளும்
வலியைத்தந்து
மலராய் எதிர்நின்றாய்,
மருந்தையும் கையில்கொண்டு..,
ஏனோ
விலையை மட்டும்
வெளியே விட்டுவிட்டாய்
சுற்றமும், நட்புமாய்.....
-குளிர்தழல்.
நிலவில் நின்று காண்கிறேன்
ஓர் புள்ளியாய்.
நிலவின்
உயிர்குடித்து மலரும்
பூக்கள்,
குயிலின் அடிநெஞ்சில்
உயிர்க்கும்
சுரங்கள்,
தற்கொலை முயற்சியில்
பிறக்கும்
அருவிகள்,
கனந்து சிவந்த
இரவைக்கொன்ற
விடியல்,
எல்லாமே
மறித்துப்போயின
மாயமாய்..,
நெஞ்சம் ஏதோ
உயிர்த்தேடி......,
இடியென ஓர்
மின்கீதம்
என் நெஞ்சில்,
விழிவானம் கொன்ட
கருமேகம் மோதி
மின்னலாய் விழுந்ததோ..
உடைந்த பாறைக்குள்
சிற்பமாய்,
கலையும் மேகங்களுக்குள்
ஓவியமாய்,
பொருள்விளங்கா சொற்களுக்குள்
கவிதையாய்,
உயிர்துறந்த கனவுக்குள்
கற்பனையாய்,
வானின்று போர்தொடுக்கும்
மின்னலாய்
அவள் பிம்பங்கள்....,
விருச்சங்களை
விதைக்குள் பதிக்கிறேன்,
இமயத்தை
தூரிகையில் கட்டுகிறேன்,
நதிகளை
மழைத்துளிக்குள் அடைக்கிறேன்,
இயற்கையினை
உயிர் கொண்டு கொல்கிறேன்,
பிரபஞ்சம் தீண்டிவிட்டாலும்
இன்பம் சொல்லா
வெற்றிக்களிப்பு...
என்னுள்
காதலென்ற சொல்லொன்று
நோய் என்று
நிற்கிறது,
துடிக்கும் நெஞ்சை
நொடிக்கச்செய்து
நோய் செய்தாய் நீ...
உயிரைக்கிள்ளும்
வலியைத்தந்து
மலராய் எதிர்நின்றாய்,
மருந்தையும் கையில்கொண்டு..,
ஏனோ
விலையை மட்டும்
வெளியே விட்டுவிட்டாய்
சுற்றமும், நட்புமாய்.....
-குளிர்தழல்.