mgandhi
19-11-2008, 04:12 PM
தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகரான எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நம்பியார் இன்று மதியம் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
எம்.என்.நம்பியார் என்ற மாஞ்சேரி நாராயணன் நம்பியார் 1919ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி பிறந்தார். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த இவர் தனது 13வது வயதில் கலை பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக நம்பியார் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார். அப்போது அவருக்கு 3 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்தார். முதன் முதலாக நடித்த இந்த படம் 1935ம் ஆண்*டு வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகனாக கலைப்பயணத்தை தொடங்கிய நம்பியார் பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். இவரது வித்தியாசமான வில்லத்தன நடிப்பு பல படங்களின் வெற்றிக்கு உதவியது. வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி முத்திரை பதித்த நம்பியாருக்கு ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் உண்டு.
திரையுலகில் சிறந்த வில்லனாக நடித்து வந்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷராக வாழ்ந்து வந்தார். கையில் சிகரெட், மது பாட்டில்களுடன் நடித்து வந்த நம்பியார் உண்மையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பனின் பக்தரான நம்பியார், 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எல்லோரும் மகாகுருசாமி என்று அன்போடும், பக்தியோடும் அழைத்து வந்தனர். திரையுலகில் சிவாஜிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை ஐயப்ப பக்தர்களாக ஆக்கிய பெருமையும் நம்பியாருக்கு உண்டு.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜங்கிள் என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு, இந்த படம் வெளிவந்தது.
மறைந்த நம்பியாருக்கு சுகுமார், மோகன் ஆகிய மகன்களும், ஸ்னேகா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகிலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நன்றி தினமலர்
அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்
எம்.என்.நம்பியார் என்ற மாஞ்சேரி நாராயணன் நம்பியார் 1919ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி பிறந்தார். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த இவர் தனது 13வது வயதில் கலை பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக நம்பியார் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார். அப்போது அவருக்கு 3 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்தார். முதன் முதலாக நடித்த இந்த படம் 1935ம் ஆண்*டு வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகனாக கலைப்பயணத்தை தொடங்கிய நம்பியார் பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். இவரது வித்தியாசமான வில்லத்தன நடிப்பு பல படங்களின் வெற்றிக்கு உதவியது. வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி முத்திரை பதித்த நம்பியாருக்கு ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் உண்டு.
திரையுலகில் சிறந்த வில்லனாக நடித்து வந்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷராக வாழ்ந்து வந்தார். கையில் சிகரெட், மது பாட்டில்களுடன் நடித்து வந்த நம்பியார் உண்மையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பனின் பக்தரான நம்பியார், 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எல்லோரும் மகாகுருசாமி என்று அன்போடும், பக்தியோடும் அழைத்து வந்தனர். திரையுலகில் சிவாஜிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை ஐயப்ப பக்தர்களாக ஆக்கிய பெருமையும் நம்பியாருக்கு உண்டு.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜங்கிள் என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு, இந்த படம் வெளிவந்தது.
மறைந்த நம்பியாருக்கு சுகுமார், மோகன் ஆகிய மகன்களும், ஸ்னேகா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகிலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நன்றி தினமலர்
அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்