மதி
18-11-2008, 02:20 PM
மு.கு: இது பழைய கரு, பழைய களம். ஏற்கனவே எங்கேயோ படித்த மாதிரி இருந்தால் பொறுத்தருள்க. :)
கொஞ்ச நாட்களாய் தான் இப்படி. காலையில் சீக்கிரமே எழுந்து விடுவது, அவசர அவசரமாய் காக்காக்குளியல் முடித்து தெருமுனைக்கு ஓடுவது. அங்கு தான் அவன் வேலை பார்க்கும் அலுவலகப் பேருந்து நிற்கும். இந்த பெங்களூர் மாநகர நெரிசலில் சிக்கி ஏழு முப்பதுக்கு அவன் ஏற வேண்டிய பேருந்து வருவதற்கு எப்படியும் எட்டு மணியாகிவிடும். இது தெரிந்து எப்போதும் சோம்பலாய் ஏழேமுக்காலுக்கு மேல் தான் செல்வான். இப்போது தான் கொஞ்ச நாளாய் ஏழு முப்பதுக்கே ஆஜர். காரணம் அவள்.
இன்னமும் அவள் தான். பேர் தெரியாது. அவளும் தினமும் அங்கு தான் வந்து நிற்கிறாள். அவள் வேறு அலுவலகம். பாழாய் போன மென்பொருள் தான். தினமும் அவள் தூக்கிட்டு நிற்கும் மடிக்கணினியைப் பார்க்க கோவம் கோவமாய் வரும். அவளை இப்படி துன்புறுத்திகிறதே. மென்மையாய் தான் இருந்து தொலைத்தால் என்ன? இவ்வளவா கனக்க வேண்டும். பாருங்கள். தூக்க முடியாமல் தூக்கி கஷ்டப்படுகிறாள். வீட்டில் ராணி மாதிரி இருந்திருப்பாள் போலும். கொஞ்ச நாட்களாய் தான் இப்படி.
சீக்கிரம் எழுந்து அவள் வருமுன் சென்று அவளுக்காக காத்திருப்பது. புதிதாய் இந்த காலனிக்கு குடி வந்திருக்கிறாள் போலும். என்னமோ இதுவரை இந்த பெங்களூரில் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு அவள் மீது ஈர்ப்பு. செல்லமாய் உதட்டை சுழித்து தோழியிடம் அவள் பேசும் அழகா, காற்றில் அசைந்தாடும் முடியை ஒற்றை விரலால் ஒதுக்கிவிடும் செயலா, சிரிக்கும் போது சீராய் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பல்வரிசையா.. தெரியவில்லை. ஆனால் ஒன்று. இதுவரை தமிழிலே பிழையில்லாமல் எழுதத் தெரியாத நான் தப்பும் தவறுமாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். கொஞ்ச காலமாக அவளும் என்னை கவனிக்க ஆரம்பித்து இருக்கிறாள். முன்பு வெறும் பார்வை. இரண்டு மூன்று நாட்களாய் தான் சிநேகமாய் ஒரு புன்னகை. இப்படியே போகட்டும் இன்னும் கொஞ்ச நாளில் பேசிவிடலாம். வாழ்ந்தால் இந்த மாதிரி ஒரு பெண் கூட தான் வாழணும்.
இன்றும் அப்படித் தான். ஏழரை மணிக்கே தெரு முனைக்கு போய்விட்டேன். அவள் வர இன்னும் ஐந்து நிமிஷமிருக்கு. சரியாய் அதே நேரத்துக்கு வந்துவிடுவாள் அவள் வந்து ஐந்து நிமிஷங்களில் அவள் பேருந்து வந்துவிடும். அந்த ஐந்து நிமிஷங்கள் தான் தரிசனமே. எப்பவாவது அவள் பார்வை என் பக்கம் திரும்பும். எதேச்சையாய் பார்ப்பது போல் நானும் பார்த்து புன்னகைப்பேன். அவளும். அவ்வளவு. அந்த நொடிக்காக இன்னு இருபத்துநாலு மணி அங்கேயே காத்திருக்கலாம் போல தோன்றும். அதோ அவள் வந்து கொண்டிருக்கிறாள்.
‘அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..உலகம் சுருங்குதே.. இருவரில் அடங்குதே…’ ச்சே. பாழாய் போன அலைபேசி இந்நேரமா அலறித் தொலைய வேண்டும். அந்தப் பாட்டே நாராசமாய் கேட்டது. பார்த்தால் ‘Amma Calling’
“என்னம்மா…” எரிச்சலுடன் நான்.
“தம்பி. எங்க இருக்க. ஆபிஸுக்கு கிளம்பியாச்சா..?”
“பஸ்ஸுக்கு நிக்கறேன்.. என்ன விஷயம் சொல்லுங்க?” அவசரக்குரலில் நான். அவள் போய்விடுவாளே..! என் கஷ்டம் அம்மாக்கு புரியுமா..
“தம்பி.. இன்னிக்கு கிளம்பி நாளைக்கு காலைல வரோம் பெங்களூருக்கு”
“என்னது. இங்க வர்றீங்களா..? எதுக்கு?”
“நீ தான் கூப்பிட்டியே அதான்….” என் நிலைமை புரியாமல் அம்மா.
“நான் அப்போ கூப்பிட்டேன். என்னமோ உங்க ஊர விட்டு வர மாட்டேன்னு பிகு பண்ணிக்கிட்டீங்க. இப்ப மட்டும் என்ன..?”
“இல்ல.. நீ வேற கூப்பிட்டுக்கிட்டு இருக்கியா… பொண்ணு வேற அங்க தானே வேலை பாக்குது. அதான்…” அப்போது தானா அவள் வந்து சேர வேண்டும். அம்மா சொன்னது காதில் விழவில்லை.
“என்னது…?”
“அதான் டா.. உனக்கு பொண்ணு பாக்க போறோம். மத்ததெல்லாம் அங்க வந்து பேசிக்கறேன்.”
வைத்தால் போதுமென்றிருந்தது. அப்பாடா… அவள் பேருந்து வருவதற்குள் பார்த்துவிட்டாள். வழக்கத்தை விட இன்று இன்னும் சிநேகத்துடன் சிரித்த மாதிரி தோன்றியது.
எட்டு மணிக்கு என் பேருந்தில் ஏறி போன போது தான் தோன்றியது. அம்மா பொண்ணு பார்க்க வரப்போவதா தானே சொன்னாங்க. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. பின்ன என்ன. இருவத்திஏழு வயசாவுது. ஒருவருஷத்துக்கு முன்னாடியே பொண்ணு பார்க்க சொன்னேன். ‘பொண்ணு பாக்கறேன்..பாக்கறேன்’னு இழுத்தடித்துவிட்டு இப்போ நான் ஒரு பொண்ணை பார்க்கும் போது வந்தால்… சரி.. வரட்டும் நாளைக்கு பேசிக்கலாம்.
காலை அஞ்சு மணிக்கே அம்மாவும் அப்பாவும் வந்தாச்சு. ‘இவங்ககிட்ட எப்படி சொல்வது? பொண்ணு பார்க்க போக வேண்டாமென்று. என்கிட்ட கேட்டா இங்க வந்தாங்க. அவங்களா முடிவு பண்ணிட்டு வந்தா நான் என்ன பண்ண…?’
அப்பா தான் ஆரம்பித்தார்.
“தம்பி.. அந்த பொண்ணும் இங்க தான் அந்த கம்பெனியில வேலை பாக்குது. இதே ஏரியால தான் இருக்குது போல அவங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்துட்டாங்க. காலைல எங்கியாவது அவங்கள பாக்கலாம்…”
என்னால் தாங்க முடியவில்லை.
“நீங்க தானே வந்தீங்க. போய் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் பொண்ணு பாக்குறேன். அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்.” நினைவில் அவள்.
‘இப்போ தான் முதல் பொண்ணே பார்க்கப் போறாங்க. இதுக்கே ஒரு வருஷம் ஆக்கிட்டாங்க. எப்படியும் இந்த சம்பந்தம் முடியாது. அதனால கவலை இல்லை.’ அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை.
“சரி. நாங்களும் அதான் அவங்ககிட்ட சொல்ல சொல்லிருக்கோம். ஆனா அவங்க உன்னையும் எதிர்பார்ப்பாங்க. பார்க்கலாம். போய்ட்டு வந்து சொல்றோம். மேற்கொண்டு பாத்துக்கலாம்.” என் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார். பரவாயில்லை. என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டார்.
எல்லோரும் கிளம்பிப் போனதும் வீட்டில் தனியா படுத்திருந்தேன் அவள் நினைவில். சொல்ல மறந்துட்டேனே. இது வாரயிறுதி. அப்படியே தூங்கிப் போயிட்டேன்.
முழித்துப் பார்த்தால் வீட்டில் அனைவரும் இறுக்கமான முகத்துடன். ‘அப்பாடி பொண்ணு புடிக்கல போல. தப்பிச்சாச்சு.’
நானும் எதுவும் கேட்கவில்லை. அம்மாவும் அப்பாவும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்போ அவங்களுக்கே பிடிக்கல. அதனால தான் பேசலை. இல்லாட்டி ஏதாச்சும் சொல்லிருப்பாங்களே. இனியும் தாழ்த்த வேண்டாம். நாளைக்கே அந்த பொண்ணுக்கிட்ட பேசிட வேண்டியது தான்.’
அன்றிரவே அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். அடுத்தவாரம். திங்கட்கிழமை. அவசர அவசரமாக கிளம்பி அந்த பொண்ணுக்க்காக காத்திருக்கக் கிளம்பினேன்.
அவள் வந்ததும் அவளிடம் பேசலாமென்று பக்கத்தில் போனேன். என்னைக் கவனிக்காமல் அவள் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“பா…உங்கிட்ட போன்ல சொன்னேன்ல. பொண்ணு பார்க்க வராங்கன்னு. போட்டோ கூட பார்க்கல. சரி. அப்பா அம்மா சொன்னாங்கன்னு அந்த இடத்துக்குப் போனா அங்க அவனோட அப்பா அம்மா மட்டும் வந்தாங்க. பையன காணோம். என்னன்னு கேட்டா ஆள் ப்ரண்டு கல்யாணத்துக்குப் போயிட்டானாம். யாராச்சும் இப்படி இருப்பாங்களா..? ஒன்னு அவன் வர பயந்துக்கிட்டு வீட்டுல படுத்து தூங்கியிருக்கணும்..இல்ல அவனுக்கு வேற லவ் மேட்டர் ஏதாச்சும் இருக்கணும். சரியான முதுகெலும்பில்லாத பய..நல்ல வேளை நான் தப்பிச்சேன்”
சுரீரென உறைத்தது. அம்மா சொல்ல சொல்லக் கேட்காம பொண்ணோட போட்டோவ நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னது.
எப்போது வந்து பாடாய் படுத்தியது மறுபடி வந்தது. முதுகில் பயங்கரமாய் மிகபயங்கரமாய் வலிக்க ஆரம்பித்தது.
கொஞ்ச நாட்களாய் தான் இப்படி. காலையில் சீக்கிரமே எழுந்து விடுவது, அவசர அவசரமாய் காக்காக்குளியல் முடித்து தெருமுனைக்கு ஓடுவது. அங்கு தான் அவன் வேலை பார்க்கும் அலுவலகப் பேருந்து நிற்கும். இந்த பெங்களூர் மாநகர நெரிசலில் சிக்கி ஏழு முப்பதுக்கு அவன் ஏற வேண்டிய பேருந்து வருவதற்கு எப்படியும் எட்டு மணியாகிவிடும். இது தெரிந்து எப்போதும் சோம்பலாய் ஏழேமுக்காலுக்கு மேல் தான் செல்வான். இப்போது தான் கொஞ்ச நாளாய் ஏழு முப்பதுக்கே ஆஜர். காரணம் அவள்.
இன்னமும் அவள் தான். பேர் தெரியாது. அவளும் தினமும் அங்கு தான் வந்து நிற்கிறாள். அவள் வேறு அலுவலகம். பாழாய் போன மென்பொருள் தான். தினமும் அவள் தூக்கிட்டு நிற்கும் மடிக்கணினியைப் பார்க்க கோவம் கோவமாய் வரும். அவளை இப்படி துன்புறுத்திகிறதே. மென்மையாய் தான் இருந்து தொலைத்தால் என்ன? இவ்வளவா கனக்க வேண்டும். பாருங்கள். தூக்க முடியாமல் தூக்கி கஷ்டப்படுகிறாள். வீட்டில் ராணி மாதிரி இருந்திருப்பாள் போலும். கொஞ்ச நாட்களாய் தான் இப்படி.
சீக்கிரம் எழுந்து அவள் வருமுன் சென்று அவளுக்காக காத்திருப்பது. புதிதாய் இந்த காலனிக்கு குடி வந்திருக்கிறாள் போலும். என்னமோ இதுவரை இந்த பெங்களூரில் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு அவள் மீது ஈர்ப்பு. செல்லமாய் உதட்டை சுழித்து தோழியிடம் அவள் பேசும் அழகா, காற்றில் அசைந்தாடும் முடியை ஒற்றை விரலால் ஒதுக்கிவிடும் செயலா, சிரிக்கும் போது சீராய் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பல்வரிசையா.. தெரியவில்லை. ஆனால் ஒன்று. இதுவரை தமிழிலே பிழையில்லாமல் எழுதத் தெரியாத நான் தப்பும் தவறுமாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். கொஞ்ச காலமாக அவளும் என்னை கவனிக்க ஆரம்பித்து இருக்கிறாள். முன்பு வெறும் பார்வை. இரண்டு மூன்று நாட்களாய் தான் சிநேகமாய் ஒரு புன்னகை. இப்படியே போகட்டும் இன்னும் கொஞ்ச நாளில் பேசிவிடலாம். வாழ்ந்தால் இந்த மாதிரி ஒரு பெண் கூட தான் வாழணும்.
இன்றும் அப்படித் தான். ஏழரை மணிக்கே தெரு முனைக்கு போய்விட்டேன். அவள் வர இன்னும் ஐந்து நிமிஷமிருக்கு. சரியாய் அதே நேரத்துக்கு வந்துவிடுவாள் அவள் வந்து ஐந்து நிமிஷங்களில் அவள் பேருந்து வந்துவிடும். அந்த ஐந்து நிமிஷங்கள் தான் தரிசனமே. எப்பவாவது அவள் பார்வை என் பக்கம் திரும்பும். எதேச்சையாய் பார்ப்பது போல் நானும் பார்த்து புன்னகைப்பேன். அவளும். அவ்வளவு. அந்த நொடிக்காக இன்னு இருபத்துநாலு மணி அங்கேயே காத்திருக்கலாம் போல தோன்றும். அதோ அவள் வந்து கொண்டிருக்கிறாள்.
‘அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..உலகம் சுருங்குதே.. இருவரில் அடங்குதே…’ ச்சே. பாழாய் போன அலைபேசி இந்நேரமா அலறித் தொலைய வேண்டும். அந்தப் பாட்டே நாராசமாய் கேட்டது. பார்த்தால் ‘Amma Calling’
“என்னம்மா…” எரிச்சலுடன் நான்.
“தம்பி. எங்க இருக்க. ஆபிஸுக்கு கிளம்பியாச்சா..?”
“பஸ்ஸுக்கு நிக்கறேன்.. என்ன விஷயம் சொல்லுங்க?” அவசரக்குரலில் நான். அவள் போய்விடுவாளே..! என் கஷ்டம் அம்மாக்கு புரியுமா..
“தம்பி.. இன்னிக்கு கிளம்பி நாளைக்கு காலைல வரோம் பெங்களூருக்கு”
“என்னது. இங்க வர்றீங்களா..? எதுக்கு?”
“நீ தான் கூப்பிட்டியே அதான்….” என் நிலைமை புரியாமல் அம்மா.
“நான் அப்போ கூப்பிட்டேன். என்னமோ உங்க ஊர விட்டு வர மாட்டேன்னு பிகு பண்ணிக்கிட்டீங்க. இப்ப மட்டும் என்ன..?”
“இல்ல.. நீ வேற கூப்பிட்டுக்கிட்டு இருக்கியா… பொண்ணு வேற அங்க தானே வேலை பாக்குது. அதான்…” அப்போது தானா அவள் வந்து சேர வேண்டும். அம்மா சொன்னது காதில் விழவில்லை.
“என்னது…?”
“அதான் டா.. உனக்கு பொண்ணு பாக்க போறோம். மத்ததெல்லாம் அங்க வந்து பேசிக்கறேன்.”
வைத்தால் போதுமென்றிருந்தது. அப்பாடா… அவள் பேருந்து வருவதற்குள் பார்த்துவிட்டாள். வழக்கத்தை விட இன்று இன்னும் சிநேகத்துடன் சிரித்த மாதிரி தோன்றியது.
எட்டு மணிக்கு என் பேருந்தில் ஏறி போன போது தான் தோன்றியது. அம்மா பொண்ணு பார்க்க வரப்போவதா தானே சொன்னாங்க. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. பின்ன என்ன. இருவத்திஏழு வயசாவுது. ஒருவருஷத்துக்கு முன்னாடியே பொண்ணு பார்க்க சொன்னேன். ‘பொண்ணு பாக்கறேன்..பாக்கறேன்’னு இழுத்தடித்துவிட்டு இப்போ நான் ஒரு பொண்ணை பார்க்கும் போது வந்தால்… சரி.. வரட்டும் நாளைக்கு பேசிக்கலாம்.
காலை அஞ்சு மணிக்கே அம்மாவும் அப்பாவும் வந்தாச்சு. ‘இவங்ககிட்ட எப்படி சொல்வது? பொண்ணு பார்க்க போக வேண்டாமென்று. என்கிட்ட கேட்டா இங்க வந்தாங்க. அவங்களா முடிவு பண்ணிட்டு வந்தா நான் என்ன பண்ண…?’
அப்பா தான் ஆரம்பித்தார்.
“தம்பி.. அந்த பொண்ணும் இங்க தான் அந்த கம்பெனியில வேலை பாக்குது. இதே ஏரியால தான் இருக்குது போல அவங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்துட்டாங்க. காலைல எங்கியாவது அவங்கள பாக்கலாம்…”
என்னால் தாங்க முடியவில்லை.
“நீங்க தானே வந்தீங்க. போய் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் பொண்ணு பாக்குறேன். அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்.” நினைவில் அவள்.
‘இப்போ தான் முதல் பொண்ணே பார்க்கப் போறாங்க. இதுக்கே ஒரு வருஷம் ஆக்கிட்டாங்க. எப்படியும் இந்த சம்பந்தம் முடியாது. அதனால கவலை இல்லை.’ அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை.
“சரி. நாங்களும் அதான் அவங்ககிட்ட சொல்ல சொல்லிருக்கோம். ஆனா அவங்க உன்னையும் எதிர்பார்ப்பாங்க. பார்க்கலாம். போய்ட்டு வந்து சொல்றோம். மேற்கொண்டு பாத்துக்கலாம்.” என் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார். பரவாயில்லை. என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டார்.
எல்லோரும் கிளம்பிப் போனதும் வீட்டில் தனியா படுத்திருந்தேன் அவள் நினைவில். சொல்ல மறந்துட்டேனே. இது வாரயிறுதி. அப்படியே தூங்கிப் போயிட்டேன்.
முழித்துப் பார்த்தால் வீட்டில் அனைவரும் இறுக்கமான முகத்துடன். ‘அப்பாடி பொண்ணு புடிக்கல போல. தப்பிச்சாச்சு.’
நானும் எதுவும் கேட்கவில்லை. அம்மாவும் அப்பாவும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்போ அவங்களுக்கே பிடிக்கல. அதனால தான் பேசலை. இல்லாட்டி ஏதாச்சும் சொல்லிருப்பாங்களே. இனியும் தாழ்த்த வேண்டாம். நாளைக்கே அந்த பொண்ணுக்கிட்ட பேசிட வேண்டியது தான்.’
அன்றிரவே அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். அடுத்தவாரம். திங்கட்கிழமை. அவசர அவசரமாக கிளம்பி அந்த பொண்ணுக்க்காக காத்திருக்கக் கிளம்பினேன்.
அவள் வந்ததும் அவளிடம் பேசலாமென்று பக்கத்தில் போனேன். என்னைக் கவனிக்காமல் அவள் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“பா…உங்கிட்ட போன்ல சொன்னேன்ல. பொண்ணு பார்க்க வராங்கன்னு. போட்டோ கூட பார்க்கல. சரி. அப்பா அம்மா சொன்னாங்கன்னு அந்த இடத்துக்குப் போனா அங்க அவனோட அப்பா அம்மா மட்டும் வந்தாங்க. பையன காணோம். என்னன்னு கேட்டா ஆள் ப்ரண்டு கல்யாணத்துக்குப் போயிட்டானாம். யாராச்சும் இப்படி இருப்பாங்களா..? ஒன்னு அவன் வர பயந்துக்கிட்டு வீட்டுல படுத்து தூங்கியிருக்கணும்..இல்ல அவனுக்கு வேற லவ் மேட்டர் ஏதாச்சும் இருக்கணும். சரியான முதுகெலும்பில்லாத பய..நல்ல வேளை நான் தப்பிச்சேன்”
சுரீரென உறைத்தது. அம்மா சொல்ல சொல்லக் கேட்காம பொண்ணோட போட்டோவ நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னது.
எப்போது வந்து பாடாய் படுத்தியது மறுபடி வந்தது. முதுகில் பயங்கரமாய் மிகபயங்கரமாய் வலிக்க ஆரம்பித்தது.