mbchandar
14-11-2008, 11:26 AM
நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால், (http://balachandar.net/blog305-2008-11-14.html)
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;
கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!
காக்க மறந்த காவலர்களே! --உங்கள்
மனிதாபிமானம் எங்கு போனது! காற்றிலா?
அஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு
நிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்
தலை கீழாகி மாறியிருக்குமே! --மாணவன்
கட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா!
நெஞ்சு பொறுக்கு தில்லையே --கடமை
செய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.
விழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு
நொடி, இருந்தாலும் என்ன பயன்? பயந்து
நடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த
சமுதாயத்தில் இருக்கின்றனரே! அஞ்சி யஞ்சி
வாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.
அதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!
அன்று பாரத சனங்களின் நிலைமையை நொண்டிச் சிந்து (http://www.sas.upenn.edu/~vasur/nenjuporukku.html) பாடலில் பாரதி எழுதியிருந்தான். இன்றைய தமிழ்நாட்டின் அவலத்தை பாரதி பாட்டோடு எழுதியுள்ளேன்.
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால், (http://balachandar.net/blog305-2008-11-14.html)
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;
கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!
காக்க மறந்த காவலர்களே! --உங்கள்
மனிதாபிமானம் எங்கு போனது! காற்றிலா?
அஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு
நிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்
தலை கீழாகி மாறியிருக்குமே! --மாணவன்
கட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா!
நெஞ்சு பொறுக்கு தில்லையே --கடமை
செய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.
விழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு
நொடி, இருந்தாலும் என்ன பயன்? பயந்து
நடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த
சமுதாயத்தில் இருக்கின்றனரே! அஞ்சி யஞ்சி
வாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.
அதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!
அன்று பாரத சனங்களின் நிலைமையை நொண்டிச் சிந்து (http://www.sas.upenn.edu/~vasur/nenjuporukku.html) பாடலில் பாரதி எழுதியிருந்தான். இன்றைய தமிழ்நாட்டின் அவலத்தை பாரதி பாட்டோடு எழுதியுள்ளேன்.