PDA

View Full Version : நிஜவாழ்க்கை



ரங்கராஜன்
12-11-2008, 03:18 PM
2டகரு3டரஜoரை

Narathar
12-11-2008, 03:49 PM
அந்த அண்ணன் மகனை கொலைகாரனென்று சந்தேகப்படவைத்து வேறு யாரையாவது கொலைகாரனாக்குவீர்கள் என்று பார்த்தால்......

எதிர்பாராத விதமாக அவனே கொலைகாரன்!!!!

சக்கரை நோய் இல்லாதவர்களுக்கு அதற்கான மருந்துகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற விடயத்தை சொல்லியிருக்கின்றீர்கள்...

மருத்துவ ரீதியாக அது சரியானதுதானா? யாரப்பா மருத்துவர்கள் இருக்கீங்க இங்கே?

ரங்கராஜன்
12-11-2008, 03:54 PM
அந்த அண்ணன் மகனை கொலைகாரனென்று சந்தேகப்படவைத்து வேறு யாரையாவது கொலைகாரனாக்குவீர்கள் என்று பார்த்தால்......

எதிர்பாராத விதமாக அவனே கொலைகாரன்!!!!

சக்கரை நோய் இல்லாதவர்களுக்கு அதற்கான மருந்துகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற விடயத்தை சொல்லியிருக்கின்றீர்கள்...

மருத்துவ ரீதியாக அது சரியானதுதானா? யாரப்பா மருத்துவர்கள் இருக்கீங்க இங்கே?

என்ன நண்பரே கதையின் முடிச்சையே பின்னுட்டத்தில் போட்டு கதையை எளிமை படுத்திவிட்டீரே. ஆம் அங்கு தரப்பட்ட விஷயங்கள் உண்மை தான். ச.நோ இல்லாதவருக்கு அந்த மாத்திரையை தந்தால் ஆள் கொஞ்ச கொஞ்சமாக காலி, அது ஒரு ஸ்லோ பாயிசன் மாதிரி.

aren
12-11-2008, 05:50 PM
நம்ம மருத்துவர் இளசு அவர்கள்தான் வந்து பதில் சொல்லவேண்டும்.

நல்ல கதை. தொடருங்கள்.

ரங்கராஜன்
13-11-2008, 06:41 AM
நம்ம மருத்துவர் இளசு அவர்கள்தான் வந்து பதில் சொல்லவேண்டும்.

நல்ல கதை. தொடருங்கள்.

நன்றி அரேன்
உங்களின் சந்தேகத்தை தீர்க்க, திரு.இளசு அவர்களை தனி மடலில் தொடர்பு கொண்டு இந்த கதையை படித்து உங்களின் சந்தேகத்தை தீர்க்கும் படி கோரிக்கை வைத்துள்ளேன். கூடிய சீக்கிரம் உங்களின் சந்தேகம் தீரும் என்ற நம்பிக்கையில்...... நன்றி

இளசு
14-11-2008, 10:02 PM
சர்க்கரை அளவைக் குறைக்கும் டயோனில் வகை மாத்திரைகளும்,
இன்சுலினும் - உயிர் பறிக்கும் விளைவுகள் கொண்டவையே..

கைநாட்டு என்று முன்குறிப்பு தந்து வாசகரை உசுப்பிவிட்ட மூர்த்தி அவர்களுக்கு ஜே!

poornima
15-11-2008, 06:00 AM
எப்படி எல்லாம் யோசித்து கதை எழுத முயற்சிக்கிறீர்கள்..பாராட்டுகள்

சொத்துக்கு சர்க்கரை வியாதி உள்ள தாத்தாவுக்கு ஜாங்கிரி தந்து சாகடிக்க
நினைத்த கவுண்டமணி - செந்தில் கூட்டணி அந்த ஜாங்கிரியே மருந்தாக ஆகி
தாத்தா உயிர் பிழைக்க கவுண்டமணி செந்திலைப் போட்டு புரட்டி எடுக்கும்
காட்சி நினைவாடலில்...

ரங்கராஜன்
15-11-2008, 06:21 AM
எப்படி எல்லாம் யோசித்து கதை எழுத முயற்சிக்கிறீர்கள்..பாராட்டுகள்



நன்றி
அங்கீகாரம் கிடைக்கும் வரை எல்லாமே முயற்சிதான்

MURALINITHISH
22-11-2008, 09:07 AM
அடப்பாவி இல்லாத வியாதிக்கு வைத்தியமா சரிதான்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 11:08 AM
நல்லா டுவிஸ்டு வச்சி ஒவ்வொரு கதையும் எழுதுறீங்க..
கதையில் ஒரு மருத்துவ செய்தியை சேர்த்து சொல்லி இருக்கிறீர்கள்..!!
வாழ்த்துக்கள்.. நண்பரே..!!

கண்மணி
24-11-2008, 11:41 AM
கதை அழகாக வந்திருக்கு மூர்த்தியண்ணா..ஆனால்

1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்? கணேசலிங்கத்தோட குடும்ப டாக்டர் இல்லையின்னா ரெகுலரா போகிற மருத்துவமனையில் அல்லவா விசாரிக்கணும்? அவரது இரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருப்பதா, இனிசுலின் பக்கவிளைவுகள் போல
ஒரு ஊகம் சொல்லலாம். வியாதி இருக்கவே இல்லைன்னு சொல்ல முடியுமா?

2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா? அப்போ மருந்துக் கடைக்காரர் உடந்தையா இருந்திருக்கணும் இல்லியா?

3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு.. இன்னின்ன மாத்திரை இப்படி இப்படி சாப்பிடணும் என்றுச் சொல்லி அல்லவா அனுப்புவார். ஒரு காய்ச்சல் மாத்திரை இல்லை தலைவலி மாத்திரைன்னா பரவாயில்லை. சர்க்கரை மாத்திரை போன்ற தொடர் மாத்திரைகளை..கொஞ்சம் கஷ்டம்தான். அப்ப டாக்டரையும் கூப்பிட்டு விசாரிக்கணும்.

4. பணக்கார வீடு.. அதனால மாத்திரை வாங்கி வர படிக்கிற பையனை அனுப்பறது கஷ்டம்தான் இல்லையா? வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

நானு துப்பறிஞ்சிருந்தா கூண்டோட எல்லோரையும் அமுக்கி இருப்பேன்.. பாவம் இன்ஸ்பெக்டரு ஏமாந்துட்டாரு..


துப்பறியும் லேடி ஜேம்ஸ்பாண்ட்

கண்மணி..

(கிரைம் ஸ்பெஸலிஸ்ட்)


(ஓவியா அக்கா சிவில் கேஸ் மட்டும்தான் டீல் பண்ணுவாங்க.. அதாவது சொத்துத்தகராறு, காண்டக்ட் வெரிஃபிகேஷன் இப்படி)

ரங்கராஜன்
24-11-2008, 01:56 PM
கதை அழகாக வந்திருக்கு மூர்த்தியண்ணா.



எக்கா, என்னகா இது?

நீங்கள் நிறைய கேள்வி கேட்டு இருக்கீங்க, கதையை முழுசாக புரிந்துக் கொண்டு இத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க நன்றி. நான் சில கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் நீங்க சொல்லுங்க.

1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்?
http://en.wikipedia.org/wiki/Autopsy

இதில் அட்டாப்ஸியை பற்றி குறிப்புகள் இருக்கு அதை படித்தால் உங்களின் சந்தேகங்கள் தீரும்.

2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா?

இது வேறும் சட்டம் அவ்வளவு தான், உங்களுக்கே தெரியும் போதை பொருள்களே லேசில் கிடைக்கும் இந்த காலத்தில், மருந்து வாங்குவது பெரிய விஷயமே இல்லை. நானே எத்தனையோ வாட்டி மருந்து சீட்டு இல்லாமல் வாங்கி இருக்கேன். (இந்த கதை எழுத காரணமே அதான்).

3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு

நம் அப்பா, அம்மாவிடம் நாம் எந்த மாத்திரையும் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க ஏன் தெரியும்?, நம்பிக்கை அதான் அந்த பெரியவரும் சாப்பிட்டார்.

4. வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

ஏங்க கொலை செஞ்சவன் இல்லாத பொழுது சந்தேக கேஸ் என்று நாம் அனைவரையும் கைது பண்ணலாம், ஆனால் கொலைகாரனே இருக்கும் பொழுது எதுக்கு அவங்கல கைது பண்ணனும்.

என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, ஸ்டாண்டப் ஆன் தி பென்சு

கண்மணி
24-11-2008, 03:01 PM
1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்?
http://en.wikipedia.org/wiki/Autopsy


A systematic review of studies of the autopsy calculated that in about 25% of autopsies a major diagnostic error will be revealed.[3] However, this rate has decreased over time and the study projects that in a contemporary US institution, 8.4% to 24.4% of autopsies will detect major diagnostic errors.

A large meta-analysis suggested that approximately one third of death certificates are incorrect and that half of the autopsies performed produced findings that were not suspected before the person died.[4] Also, it is thought that over one fifth of unexpected findings can only be diagnosed histologically, i.e. by biopsy or autopsy, and that approximately one quarter of unexpected findings, or 5% of all findings, are major and can similarly only be diagnosed from tissue.


இது ரொம்ப ஜெனிரிக்கா இருக்கே! அதுவும் தவறான மருந்து எனக் கண்டுபிடிக்க 24.4 % சான்ஸ் இருக்காம். இதில் சர்க்கரை வியாதி மருந்துகள் சேருமா இல்லியா? உறுதியா சொல்ல முடியலை இல்லியா?





2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா?



இது வேறும் சட்டம் அவ்வளவு தான், உங்களுக்கே தெரியும் போதை பொருள்களே லேசில் கிடைக்கும் இந்த காலத்தில், மருந்து வாங்குவது பெரிய விஷயமே இல்லை. நானே எத்தனையோ வாட்டி மருந்து சீட்டு இல்லாமல் வாங்கி இருக்கேன். (இந்த கதை எழுத காரணமே அதான்).

ஆனா என்ன மருந்து வாங்குறது என்று +2 படிக்கிற மாணவன் தெரிஞ்சிகிட்டது எப்படி? அவனுக்கு உதவினது யாரு.. இண்டர்நெட் அப்படின்னு சொன்னீங்கன்னா மன்ற மீட்டிங் வரும் பொழுது தலையிலேயே கொட்டுவேன்.


3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு

நம் அப்பா, அம்மாவிடம் நாம் எந்த மாத்திரையும் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க ஏன் தெரியும்?, நம்பிக்கை அதான் அந்த பெரியவரும் சாப்பிட்டார்.

அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சது காலையில இத்தனை மாத்திரை.. மதியம் இத்தனை மாத்திரை சாயந்திரம் இத்தனை மாத்திரை.. இவ்வளவுதான். அதனால எக்ஸ்ட்ரா மாத்திரை கொடுத்தா மாட்டிக்குவீங்க. அடுக்கு பதிலா மாத்திரையை மாத்திக் கொடுக்கறது.. எக்ஸ்பயரி ஆன மாத்திரையைக் கொடுக்கிறது இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க. :D

அதுவும் தவறான மருந்து அதுவும் பிளட் சுகர் மாத்திரைசாப்பிட்ட பின்னால் உடம்பு முடியலை. ஆனா டாக்டர்கிட்ட யாரும் கொண்டுபோகலை. அவரும் என்ன மருந்து ஒத்துக்கலைன்னு பார்த்து ட்ரீட்மெண்ட் மாத்தலை. எந்த டெஸ்டும் செஞ்சுப் பார்க்கலை.
3 நாள் ரெகுலரா சாப்பிட்டா, முதல்ல மயக்கம் வரும்... அதை வச்சே டாக்டர் கண்டுபிடிச்சு நாலு சாத்து சாத்தி இருப்பார். உடனே ஐ சி யூ ல அட்மிட் பண்ணி தீவிர சிகிச்சை கொடுத்திருப்பார்

ஐயோ ஐயோ அது ஹாஸ்பிடலே இல்லாத ஊரு... அக்கம் பக்கம் யாருமில்லாத ஊரு இப்படிச் சப்பைக் கட்டு கட்ட ரெடியா இருப்பீங்களே!!!.அதாவது மூர்த்தி -- கொஞ்ச நாளா உடம்பு முடியாதவர் டாக்டர் கிட்ட போகாத காரணம் என்ன? ஏன் ஹாஸ்பிடல்ல சேர்க்கலை? இப்படிப் பலகேள்விகள் இருக்கு மூர்த்தி..




4. வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

ஏங்க கொலை செஞ்சவன் இல்லாத பொழுது சந்தேக கேஸ் என்று நாம் அனைவரையும் கைது பண்ணலாம், ஆனால் கொலைகாரனே இருக்கும் பொழுது எதுக்கு அவங்கல கைது பண்ணனும்.

பிராக்டிகல் டெஸ்டப்போ சரியா உபகரணங்கள் வேலை செய்யலைன்னா கவர்மெண்ட் ஸ்கூல்ல விடையைக் கொடுத்துடுவாங்க. நாம பூரா எக்ஸ்பெரிமெண்டையும் கற்பனை பண்ணி பதில் எழுதணும். அந்த மாதிரி கடைசி ரிசல்ட் வச்சு பதில் எழுத முயற்சி செஞ்சிருக்கீங்க. அதனாலதான் பெரிய ஓட்டை.. பையன் +2 படிக்கிறான். எனவே மைனராகக் கூட இருக்கலாம். 18 வயசு முடியாத பையனா (5+12=17) அந்த சாத்தியத்தையும் மறந்துட்டீங்க. அதுவும் கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாத பெரியவரை கண்டுக்காம விட்டதுக்காக உங்களையும் சந்தேகத்தின் பேர்ல அரஸ்ட் பண்ணி விசாரிக்கணும்.



என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, ஸ்டாண்டப் ஆன் தி பென்சு[/QUOTE]

பென்ஸ் தாங்க மாட்டார். நீங்க முட்டிப் போடுங்க.

நான் சிறுவன்னுக்காக வாதாடினால் உங்க கேஸ் புஸ்ஸூன்னு போயிடும்.

ரங்கராஜன்
24-11-2008, 03:09 PM
எக்கா தெரியாதனமா உங்களை கேள்வி கேட்டுடேன், என்ன ஒரு கொலை வெறியோட பதில் சொல்றீங்க. அசாத்திய திறமை உங்களுக்கு (என்ன செய்வது இப்படி எதாவது சொல்லிதான் தப்பிக்க வேண்டி இருக்கு)