aren
12-11-2008, 05:36 AM
இன்றும் வாழ்கிறேன்
உன் நினைவுகள்
என் மனதினில்
உயிருடன் இருப்பதால்
இன்றும் வாழ்கிறேன்!!!
நான் கல்லூரி பரிட்சைக்கு
படிக்கும் பொழுது
எனக்கு தேநீர் கொடுத்தாய்!!!
நான் நல்ல மதிப்பெண்கள் வாங்க
என் பெயருக்கு
கடவுளுக்கு அர்சனை செய்தாய்!!!
நான் சோர்வுடன் இருந்தபொழுது
எனக்கு எதிர்கால கதைகள் சொல்லி
என்னை பூரிக்க வைத்தாய்!!!
நான் நல்ல வேலையில்
சேர்ந்தவுடன்
விரதம் இருந்து
கடவுளுக்கு நன்றி சொன்னாய்!!!
என் முதல்மாத
சம்பளத்தை
உனக்கு பரிசாக அளித்தபொழுது
அதை கடவுளுக்கு கொடுத்து
அவருக்கு நன்றி சொன்னாய்!!!
இமைப்பொழுதும்
நான் சிறப்பாக இருக்க
அனைத்து
ஆயத்தங்களையும் செய்தாய்!!!
நான் உன்னை கைபிடிக்க
உன் சம்மதத்தைக்
கேட்டபொழுது
ஒரு புன்முறுவலுடன்
சம்மதித்தாய்!!!
கல்யாண தேதி
நெருங்கும்பொழுது
உனக்கு காலன்
கொடுத்த தேதி
நெருங்குகிறது
என்று ஏன் சொல்லவில்லை!!!
உன் இன்னல்களை மறைத்து
எனக்காகவே வாழ்ந்த உன்னை
இன்றளவும் மறவாமல்
உன் நினைவுடனேயே
இன்றும் வாழ்கிறேன்
என்றும் வாழ்ந்துகொண்டிருப்பேன்!!!
உன் நினைவுகள்
என் மனதினில்
உயிருடன் இருப்பதால்
இன்றும் வாழ்கிறேன்!!!
நான் கல்லூரி பரிட்சைக்கு
படிக்கும் பொழுது
எனக்கு தேநீர் கொடுத்தாய்!!!
நான் நல்ல மதிப்பெண்கள் வாங்க
என் பெயருக்கு
கடவுளுக்கு அர்சனை செய்தாய்!!!
நான் சோர்வுடன் இருந்தபொழுது
எனக்கு எதிர்கால கதைகள் சொல்லி
என்னை பூரிக்க வைத்தாய்!!!
நான் நல்ல வேலையில்
சேர்ந்தவுடன்
விரதம் இருந்து
கடவுளுக்கு நன்றி சொன்னாய்!!!
என் முதல்மாத
சம்பளத்தை
உனக்கு பரிசாக அளித்தபொழுது
அதை கடவுளுக்கு கொடுத்து
அவருக்கு நன்றி சொன்னாய்!!!
இமைப்பொழுதும்
நான் சிறப்பாக இருக்க
அனைத்து
ஆயத்தங்களையும் செய்தாய்!!!
நான் உன்னை கைபிடிக்க
உன் சம்மதத்தைக்
கேட்டபொழுது
ஒரு புன்முறுவலுடன்
சம்மதித்தாய்!!!
கல்யாண தேதி
நெருங்கும்பொழுது
உனக்கு காலன்
கொடுத்த தேதி
நெருங்குகிறது
என்று ஏன் சொல்லவில்லை!!!
உன் இன்னல்களை மறைத்து
எனக்காகவே வாழ்ந்த உன்னை
இன்றளவும் மறவாமல்
உன் நினைவுடனேயே
இன்றும் வாழ்கிறேன்
என்றும் வாழ்ந்துகொண்டிருப்பேன்!!!