PDA

View Full Version : காதலும் உனக்காக காதலனும் உனக்காக



நிரன்
07-11-2008, 01:25 PM
http://www.edgar.piwko.pl/pain_love.jpg


காதலியே திடிரென ஏன் என்னை விட்டு விலகினாய்
நான் உன்னுள்ளே இருக்கிறேன் என்று தெரிந்தும் கூட.......

உன்மைக் காதல் என்னுள் இருக்கையில்
பிரிந்து சென்றது உன் உடல் மட்டுமே........

உன் மீதுள்ள காதலை என் வீட்டு மாடிப் படிகள் கூட கூறும்,......
என் கனத்தை கணித்து..........

என் உயிரில் வலியில்லை... உன் நினைவுகளால்.
என் கண்ணிலும் வலி இல்லை.... உன்னுடைய செர்ப்பனத்திற்காக

உன்னுடைய நிழல் படம் எனக்கு தேவையில்லை
என் குருதித் துளியே உன் விம்பம் காட்டும்

என் கரங்கள் உன்னைப் பற்றி மட்டும் எழுத பேனா பற்றுகிறது.
பேனாவும் அதற்காக மட்டுமே கசிகிறது..

என் கண்கள் வேறு பெண்ணை பார்க்க நினைத்தால்
என் இதயம் அதன் ஆயுளை செல்கிறது........

என் இதயம் கூட அவள் ஓருத்திக்காக மட்டுமே
அசை போடுகிறது...

அவள் இல்லை என்று விடை வருகையில்
அவை அனைத்தும் என்னிடமிருந்து விடை பெற்றுவிடும்.

காலம் போனாலும் என்னுள் இருக்கும் காதல் போகாது
காதலியே நீயும் உன் காதலும் வரும் வரை காத்திருப்பேன்

நீ இல்லை என்றால் என்னையும் உன் நினைவுகளையும்
விண்ணுலகிற்கு சமர்ப்பிப்பேன்

காத்திருப்போன் என்றும்
நிரஞ்சன்...........

தீபா
07-11-2008, 02:12 PM
அதென்ன சார் உண்டை காதல்??? புதுசால்ல இருக்கு!

காதல் கவிதை... வலி ரொம்ப சார்....

படிக்கிறவங்களுக்கு!!!! :D :D :D

இன்னும் நிறைய முயற்சி பண்ணி.......... காதலிக்கணும்.. :D :D

வாழ்த்துக்கள்..

நிரன்
07-11-2008, 02:46 PM
மன்னிக்கவும் நண்பரே சிறு தவறிழைத்து விட்டேன் தட்டச்சுப் பதிவில் இப்பொழுது சரிதானே........

பென்ஸ்
07-11-2008, 03:02 PM
"என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே.."

காதலிக்காக பிரிவில் ஏங்கும் வலி,
அவள் விட்டு சென்ற போதும் விட்டு கொடுக்காத காதலன் மனம்...

உணர்ந்தவை சரியாக எழுதபடவில்லை...
வரிகள் செம்மையாக வேண்டும்..

வாழ்த்துகள்...

நிரன்
07-11-2008, 03:16 PM
மறு முறை எழுதும் போது இன்னும் தெழிவாக எழுத முயற்சிக்கிறேன்
பென்ஸ் அண்ணா

வசீகரன்
08-11-2008, 06:05 AM
http://www.edgar.piwko.pl/pain_love.jpg

உன் மீதுள்ள காதலை என் வீட்டு மாடிப் படிகள் கூட கூறும்,......
என் கனத்தை கணித்து..........

உன்னுடைய நிழல் படம் எனக்கு தேவையில்லை
என் குருதித் துளியே உன் விம்பம் காட்டும்

என் கரங்கள் உன்னைப் பற்றி மட்டும் எழுத பேனா பற்றுகிறது.
பேனாவும் அதற்காக மட்டுமே கசிகிறது.

அவள் இல்லை என்று விடை வருகையில்
அவை அனைத்தும் என்னிடமிருந்து விடை பெற்றுவிடும்.

காலம் போனாலும் என்னுள் இருக்கும் காதல் போகாது
காதலியே நீயும் உன் காதலும் வரும் வரை காத்திருப்பேன்

நீ இல்லை என்றால் என்னையும் உன் நினைவுகளையும்
விண்ணுலகிற்கு சமர்ப்பிப்பேன்

காத்திருப்போன் என்றும்
நிரஞ்சன்...........


உண்மை காதலனின் காதல் வலியை சொல்கின்றன உங்கள் வரிகள் நண்பரே...!
நல்ல கவிதை சில வரிகள் இடறி இருக்கின்றன நிரஞ்சன்... கவனித்து கொள்ளுங்கள்.
மற்றபடி கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள்... காதல் கவிதைகளுக்கு மன்றத்தில் எப்போதுமே ஆதரவு அதிகம்..!

jenitha
20-02-2009, 05:19 PM
உங்கள் கவிதை பல நினய்வுகளை மிண்டும் மீட்டு தரும் ரிங்கரமாக இருக்கிறது.
ஜெனிதா பிரதீப்