ரங்கராஜன்
04-11-2008, 06:23 AM
ஐந்து மணி ரயில்
மதியம் மூன்று மணி மின்சார ரயிலில் கூட்டம் நிறைய இல்லை காலியாக இருந்தது. வயதானவர்கள்,குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும்
இருந்தனர்.ரயிலின் குலுக்கல் தாலாட்டை போல இருந்ததினால், அனைவருக்கும் கண்கள் இழுதுக் கொண்டு சென்றது. அப்பொழுது அசெளகர்யமான ஒரு குரலில் பாடல் ஒலித்தது
"இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கை எ..........."
அனைவரும் "ப்ச்ச்ச்" என்று ஒத்த குரலில் எதிர்த்தார்கள், ஆனால் அந்த குருட்டு பாடகன் அதை பற்றி கவலைப்படாமல் பாடிக்கொண்டு இருந்தான். ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடி, சரியாக ஒதுக்கப்படாத மீசை, அவன் பின்னாடி அவன் தோளை பிடித்து பின் தொடரும் அவன் மனைவி. இவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும் நான்கே வயதான பிஞ்சு பெண் குழந்தை. நல்லா வெள்ளையா, ஒல்லியாக இருந்தது, சட்டையில் பட்டன்கள் தப்பு தப்பாக போடப்பட்டு இருந்தது. தொப்பை மட்டும் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் இருந்தது, மூடி ஆண்பிள்ளை போல செய்யப்பட்டு இருந்தது. பாடலை முடித்தது அந்த சிறுமி அவர்கள் இருவரையும் ஒரு கம்பி பிடித்து நிற்கவைத்து விட்டு, அனைவரிடனும் தன்னுடைய பிஞ்சு விரல்களால் பிச்சை கேட்டாள். குழந்தை நெருங்க அனைவரும் தூங்குவதுப் போல நடித்தார்கள்.
"சார், அம்மா காசு தாங்க" என்று கெஞ்சினால் குழந்தை, பிறந்ததில் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை தான். பெண்கள் பாவப்பட்டு காசு போட்டனர். ஆண்கள்
" ஏன் இந்த ஆளு எதாவது லாட்டரி டிக்கெட்டு விக்க வேண்டியது தானே, வீ மஸ்ட் நாட் என்கரேஜ் திஸ் கய்ஸ் " என்று வியாக்ஞானம் பேசினார்கள்.
அந்த பிச்சை எடுக்கும் குழந்தை, அங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு குழந்தையை வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள். ரயில் நின்றது.
"திவ்யா கண்ணு" என்று குருடனின் குரல்
"தொ ப்பா" என்று குடுகுடுன்னு ஓடினாள், இருவரையும் பத்திரமாக இறக்கினாள். மறுபடியும் வேறு ஒரு ரயில் வேறு ஒரு பாட்டு
"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல் மாயக்கண்னன்
தூங்குகின்றான் தாலேலோ......."
மறுபடியும் அதே பிச்சை, மறுபடியும் அதே பொய் தூக்கம், அதே காலி டப்பா. மதியம் 4.30 மணி மூவரும் ஒரு மர நிழல் அடியில் உணவுக்காக உக்கார்ந்தனர். அந்த சிறுமி பையில் இருந்த பாக்ஸில் இருக்கும் உணவை அப்பாவுக்கு அம்மாவுக்கு கையில் உருண்டை பண்ணி கொடுத்தாள். இவளும் தன்னுடைய முறை வரும் பொழுது சாப்பிட்டுக் கொண்டாள். அவர்களுக்கு கைக் கழுவ தண்ணீர் ஊற்றினாள்.
"ராஜாத்தி இன்னைக்கு எவ்வளவு வந்து இருக்குமா"
அவள் தன்னுடைய பிஞ்சு விரல்களால் எண்ணி "பத்து ஒரு ரூபா, மூணு ஐஞ்சி ரூபா, அம்மது காசு எட்டு ப்பா"
"அய்யோ 29 ரூபா தானா, என்னங்க இது நம்ம நைட்டு சாப்பாட்டுக்கே பத்தாதே"
அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.
"இல்ல வாசுகி இன்னைக்கு 5.00 மணி ரயில்ல காலேஜ் பசங்க நிறை வருவாங்க, அதுல நிறைய கிடைக்கும் கவலைப்படாதே"
ஐந்து மணி ஆனது, ரயில் தூரத்தில் வரும் சத்தம் கேட்டுது, மூவரும் தயார் ஆனார்கள்.
ரயில் நெருங்க நெருங்க மூவருக்குள்ளும் சந்தோஷம் அதிகமாகியது.
அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"
அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"
அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"
ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.
மதியம் மூன்று மணி மின்சார ரயிலில் கூட்டம் நிறைய இல்லை காலியாக இருந்தது. வயதானவர்கள்,குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும்
இருந்தனர்.ரயிலின் குலுக்கல் தாலாட்டை போல இருந்ததினால், அனைவருக்கும் கண்கள் இழுதுக் கொண்டு சென்றது. அப்பொழுது அசெளகர்யமான ஒரு குரலில் பாடல் ஒலித்தது
"இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கை எ..........."
அனைவரும் "ப்ச்ச்ச்" என்று ஒத்த குரலில் எதிர்த்தார்கள், ஆனால் அந்த குருட்டு பாடகன் அதை பற்றி கவலைப்படாமல் பாடிக்கொண்டு இருந்தான். ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடி, சரியாக ஒதுக்கப்படாத மீசை, அவன் பின்னாடி அவன் தோளை பிடித்து பின் தொடரும் அவன் மனைவி. இவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும் நான்கே வயதான பிஞ்சு பெண் குழந்தை. நல்லா வெள்ளையா, ஒல்லியாக இருந்தது, சட்டையில் பட்டன்கள் தப்பு தப்பாக போடப்பட்டு இருந்தது. தொப்பை மட்டும் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் இருந்தது, மூடி ஆண்பிள்ளை போல செய்யப்பட்டு இருந்தது. பாடலை முடித்தது அந்த சிறுமி அவர்கள் இருவரையும் ஒரு கம்பி பிடித்து நிற்கவைத்து விட்டு, அனைவரிடனும் தன்னுடைய பிஞ்சு விரல்களால் பிச்சை கேட்டாள். குழந்தை நெருங்க அனைவரும் தூங்குவதுப் போல நடித்தார்கள்.
"சார், அம்மா காசு தாங்க" என்று கெஞ்சினால் குழந்தை, பிறந்ததில் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை தான். பெண்கள் பாவப்பட்டு காசு போட்டனர். ஆண்கள்
" ஏன் இந்த ஆளு எதாவது லாட்டரி டிக்கெட்டு விக்க வேண்டியது தானே, வீ மஸ்ட் நாட் என்கரேஜ் திஸ் கய்ஸ் " என்று வியாக்ஞானம் பேசினார்கள்.
அந்த பிச்சை எடுக்கும் குழந்தை, அங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு குழந்தையை வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள். ரயில் நின்றது.
"திவ்யா கண்ணு" என்று குருடனின் குரல்
"தொ ப்பா" என்று குடுகுடுன்னு ஓடினாள், இருவரையும் பத்திரமாக இறக்கினாள். மறுபடியும் வேறு ஒரு ரயில் வேறு ஒரு பாட்டு
"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல் மாயக்கண்னன்
தூங்குகின்றான் தாலேலோ......."
மறுபடியும் அதே பிச்சை, மறுபடியும் அதே பொய் தூக்கம், அதே காலி டப்பா. மதியம் 4.30 மணி மூவரும் ஒரு மர நிழல் அடியில் உணவுக்காக உக்கார்ந்தனர். அந்த சிறுமி பையில் இருந்த பாக்ஸில் இருக்கும் உணவை அப்பாவுக்கு அம்மாவுக்கு கையில் உருண்டை பண்ணி கொடுத்தாள். இவளும் தன்னுடைய முறை வரும் பொழுது சாப்பிட்டுக் கொண்டாள். அவர்களுக்கு கைக் கழுவ தண்ணீர் ஊற்றினாள்.
"ராஜாத்தி இன்னைக்கு எவ்வளவு வந்து இருக்குமா"
அவள் தன்னுடைய பிஞ்சு விரல்களால் எண்ணி "பத்து ஒரு ரூபா, மூணு ஐஞ்சி ரூபா, அம்மது காசு எட்டு ப்பா"
"அய்யோ 29 ரூபா தானா, என்னங்க இது நம்ம நைட்டு சாப்பாட்டுக்கே பத்தாதே"
அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.
"இல்ல வாசுகி இன்னைக்கு 5.00 மணி ரயில்ல காலேஜ் பசங்க நிறை வருவாங்க, அதுல நிறைய கிடைக்கும் கவலைப்படாதே"
ஐந்து மணி ஆனது, ரயில் தூரத்தில் வரும் சத்தம் கேட்டுது, மூவரும் தயார் ஆனார்கள்.
ரயில் நெருங்க நெருங்க மூவருக்குள்ளும் சந்தோஷம் அதிகமாகியது.
அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"
அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"
அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"
ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.